search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பதவி உயர்வு-சலுகைகளை காலத்தோடு வழங்க வேண்டும்
    X

    கோப்பு படம்.

    பதவி உயர்வு-சலுகைகளை காலத்தோடு வழங்க வேண்டும்

    • காவலர் பொது நல இயக்கம் வலியுறுத்தல்
    • அதிகாரிகளுக்கு காலத்தோடு பதவி உயர்வு மற்றும் சலுகைகளை உடனுக்குடன் வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை காவலர் பொது நல இயக்க பொதுச் செயலாளர் கணேசன் முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் இரவு ரோந்து பணியை தீவிர படுத்தி வருவது வரவேற்க்க தக்கது. இதனால் குற்ற சம்பவங்கள் குறைந்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் இரவு ரோந்து பணி செய்யும் போலீசாருக்கு சிறப்பு படி வழங்கப்படுகிறது.

    அது போல் புதுவையில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கும் சிறப்பு படி வழங்கினால் அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதுடன் மேலும் பணியை சிறப்பாக செய்ய ஏதுவாக அமையும்.

    மேலும் புதுவை காவல்துறையில் பணி புரியும் போலீசார் முதல் அதிகாரிகளுக்கு காலத்தோடு பதவி உயர்வு மற்றும் சலுகைகளை உடனுக்குடன் வழங்க வேண்டும். தற்போது எல்.டி.சி., எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.

    இத்தேர்வுக்காக பணியில் ஈடுபடுத்தப்படும் அதிகாரிகள் மற்றும் அரசு துறை ஊழியர்களுக்கு தினப்படி அன்றே வழங்கப்படுகிறது. ஆனால் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு வழங்கப்படுவதில்லை. எனவே மற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் தினப்படி போலீசாருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×