என் மலர்
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 45,013 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 43,977 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 26 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 499 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதுடன் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்பிற்கு மேலும் 2 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் 244 பேரும், மையங்களில் 14 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாவட்டத்தில் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட பட்டியலில் நேற்று 10 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மாநில பட்டியலில் 39 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 44,974ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 43,961 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 37 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 488 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு மேலும் 2 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 536 ஆக உயர்ந்துள்ளது.
அரசு ஆஸ்பத்திரிகளில் 112 பேரும் சிகிச்சை மையங்களில் 17 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றும் மாவட்டத்தில் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட பட்டியலில் 13 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மாநிலப்பட்டியலில் 43 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுமுன்தினம் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் ஆண்டாள் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. அத்துடன் எண்ணற்ற மரங்களும் சேதமடைந்தன. இந்தநிலையில் பலத்த மழையினால் நீர்நிலையில் நீர்வரத்து அதிகரித்தது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள கண்மாய் மற்றும் குளங்களில் மிகவும் பெரியது ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய். இந்த கண்மாய்க்கு பலத்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தொடர்மழையின் காரணமாக பெரியகுளம் கண்மாயில் நீர் வரத்து அதிகரித்ததுடன், கண்மாய் நிரம்பி உள்ளது. தற்போதைய நிலவரப்படி பெரியகுளம் கண்மாயை பொறுத்தவரை 3 மாதத்திற்கு தேவையான தண்ணீர் உள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்தால் கூடுதலாகவும் தண்ணீர் தேங்கிவைக்க வாய்ப்பு உள்ளது.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் பாரதி நகரை சேர்ந்த கிருஷ்ணசாமி- தங்கம் தம்பதியினரின் மூத்த மகள் பேச்சியம்மாள். இவர் அதே ஊரை சேர்ந்த கருப்பசாமி என்பவரை 5 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோருக்கு தெரியாமல் காதலித்து திருமணம் செய்து அங்கேயே வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இளையமகளான கலாவும் காதலில் விழுந்துள்ளார். அவர் தனது சகோதரி கணவரின் சகோதரர் மருதுபாண்டியை காதலித்தார்.
இந்த காதலுக்கு பெற்றோர் சம்மதிக்கமாட்டார்கள் என கருதிய கலா அவர்களுக்கு தெரியாமல் மருதுபாண்டியை சில நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.
2 மகள்களும் தன்னிடம் காதலை மறைத்து அதே ஊரில் அண்ணன்- தம்பியை திருமணம் செய்து கொண்டது தாயார் தங்கத்துக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.
மனமுடைந்த அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். கணவர் கிருஷ்ணசாமி மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி தங்கம் உயிரிழந்தார்.
இது குறித்து கிருஷ்ணசாமி கொடுத்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சம்பவ இடத்தில் போலீஸ் கூடுதல் துணை சூப்பிரண்டு மாரிராஜ், போலீஸ் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், தாசில்தார் ராமச்சந்திரன் மற்றும் 100-க்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இரு பிரிவினர் மீதும் ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் ஊரில் இருந்து வெளியே யாரும் செல்வதற்கு போலீசாரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கீழப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 38), ஜவுளி கடை ஊழியர். இவரது மனைவி சிவகாமி.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகுமார் அதே ஊரைச் சேர்ந்த காளி என்பவர் மூலம் ராமு என்ற ராமசாமியிடம் ரூ. 40,000 கடன் வாங்கினார். 3 சதவீத வட்டி என்ற நிபந்தனையின் பேரில் அவர் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெரும் தொகையை கொடுத்த பிறகும் கடன் கொடுத்தவர்கள் நீ கொடுத்தது வட்டிக்கு சரியாகிவிட்டது, இன்னும் ரூ.30 ஆயிரம் தரவேண்டும் என கூறியுள்ளனர்.
மேலும் அவர்கள் சிவகுமாரின் மோட்டார் சைக்கிளையும் எடுத்துச் சென்றுவிட்டனர். அதன் பிறகு சிவகுமார் கூடுதல் தொகையை வட்டிக்கு பணம் கொடுத்தவரிடம் கொண்டு கொடுத்து விட்டு தனது மோட்டார் சைக்கிளை கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் அதனை விற்றுவிட்டதாக தெரிவித்தனர்.
இதனால் மனமுடைந்த சிவகுமார், மனைவியிடம் கந்துவட்டி கொடுமை குறித்து தெரிவித்துள்ளார். அதன்பிறகு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சிவகாமிக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர்கள் உங்கள் கணவர் சிவகுமார் விஷம் குடித்து மயங்கிய நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்படுவதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சிவகாமி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிவகுமார் இறந்துவிட்டார்.
இதனை தொடர்ந்து கந்துவட்டி கொடுமையால் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் சிவகாமி புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி காளியை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.






