என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 43 பேருக்கு கொரோனா

    விருதுநகர் மாவட்டத்தில் 488 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 44,974ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 43,961 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 37 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 488 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு மேலும் 2 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 536 ஆக உயர்ந்துள்ளது.

    அரசு ஆஸ்பத்திரிகளில் 112 பேரும் சிகிச்சை மையங்களில் 17 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றும் மாவட்டத்தில் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட பட்டியலில் 13 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மாநிலப்பட்டியலில் 43 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×