என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    கொரோனா தடுப்பூசி முகாம்

    ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள கீழ செல்லையாபுரத்தில் 150 பொது மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
    தாயில்பட்டி:

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவின்பேரில் வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள சிவசங்குபட்டி, செவல்பட்டி, நதிகுடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் 510 தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முகாமிற்கு தாயில்பட்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் செந்தட்டி காளை தலைமை தாங்கினார். இதில் சுகாதார ஆய்வாளர்கள், கிராமப்புற செவிலியர்கள், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள கீழ செல்லையாபுரத்தில் 150 பொது மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
    Next Story
    ×