என் மலர்tooltip icon

    வேலூர்

    வீட்டில் இருந்த பொருட்கள் வெள்ளத்தில் மிதந்தபடி சென்றன. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் அங்கு ஓடிச் சென்று பார்த்தனர்.

    வேலூர்:

    ஆந்திரா- தமிழகத்தில் பெய்த கனமழையால் பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது. வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, காவேரிப்பாக்கம் வழியாக பாலாற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.

    வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அருகே உள்ள வட விரிஞ்சிபுரம் காமராஜபுரத்தில் 191 வீடுகள் உள்ளன. இதில் பாலாற்றங்கரையில் வலது பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கூட தெருவில் ஆற்றின் கரையோரமாக 28 வீடுகள் இருந்தன. இவற்றில் 130-க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.

    கடந்த 17-ந்தேதி முதல் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த தெருவில் வசித்து வரும் பொதுமக்கள் அனைவரையும் வருவாய்த் துறையினர் வெளியேற்றினர். அவர்கள் வட விரிஞ்சிபுரம் வேளாண் விரிவாக்க மையம் மற்றும் வடுகன்தாங்கல் உயர்நிலைப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வீடு

    இந்த நிலையில் நேற்று காலை முதல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகளவில் ஏற்பட்டது. இதில் ஆற்றங்கரையோரம் கட்டப்பட்டிருந்த 28 வீடுகளில் 12 வீடுகள் மண் அரிப்பால் அடுத்தடுத்து சரிந்து ஆற்றுக்குள் விழுந்தன. இன்று காலையில் மேலும் ஒரு வீடு இடிந்து விழுந்தது. 13 வீடுகள் ஆற்றுக்குள் இடிந்து விழுந்ததால் அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆற்றுக்குள் விழுந்த வீடுகளை வெள்ளம் அடித்துச் சென்றது.

    வீட்டில் இருந்த பொருட்கள் வெள்ளத்தில் மிதந்தபடி சென்றன. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் அங்கு ஓடிச் சென்று பார்த்தனர்.

    தங்களின் வீடுகள் எல்லாம் தங்கள் கண் முன்பாகவே இடிந்து விழுந்தது கண்டு பொதுமக்கள் அழுது துடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி காட்பாடி டி.எஸ்.பி. பழனி, தாசில்தார் சரண்யா மற்றும் கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.

    அந்த ஊரில் வசிக்கும் அனைவருக்கும் உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

    பள்ளிக்கூடத் தெருவில் மீதம் உள்ள வீடுகளில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி கொண்டு உறவினர்கள் வீடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர். தொடர்ந்து ஆற்றங்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இதனால் மீதமுள்ள 15 வீடுகளும் இடிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இடிந்து விழும் நிலையில் உள்ள ஒரு வீடு ரூ.40 லட்சம் செலவில் சமீபத்தில் தான் கட்டப்பட்டது. ஒரு வாரத்தில் கிரகப்பிரவேசம் நடத்த உள்ளதாக அந்த பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்தனர். அந்தப் பகுதியில் தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையும் படியுங்கள்... ஆந்திராவில் பெய்த கனமழையால் விஜயவாடா- சென்னை சாலையில் பாலம் துண்டிப்பு

    கள்ளக்காதலை சொல்லி விடுவான் என பயந்து 4 வயது சிறுவனின் வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டல் விடுத்தது தொடர்பான வீடியோ வைரலானதால் வாலிபர் கைதானார்.
    பரேலி:

    உத்தரபிரதேச மாநிலம், மொராதாபாத் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். அதேபகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு இருந்தது.

    இது அந்த பெண்ணின் 4 வயது சிறுவனுக்கு தெரிந்தது.

    இந்தநிலையில் 4 வயது சிறுவனை அஜித்குமார் வாயில் துப்பாக்கி வைத்து மிரட்டி உள்ளார். அவர் துப்பாக்கியை வைத்து மிரட்டுவது வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியானது. 25 வினாடிகளை கொண்டது அந்த வீடியோ.

    துப்பாக்கியை வாயில் வைத்து மிரட்டுவதை அஜித்குமார் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அவர்தான் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

    இதை பார்த்துதான் போலீசார் அவரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததை சிறுவன் தனது தந்தையிடம் சொல்லிவிடுவான் என பயந்துதான் துப்பாக்கியை வாயில் வைத்து மிரட்டியது தெரிய வந்தது.

    அப்போது அவர் சுய நினைவு இல்லாமல் போதையில் இருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். சிறுவனின் தந்தை வியாபாரி ஆவார். வேலை விஷயமாக அவர் வெளியூர் சென்று உள்ளார். இந்த வீடியோவை பார்த்துதான் அவருக்கும் இந்த சம்பவம் பற்றி தெரிய வந்தது.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தமாக உள்ள 369 ஏரிகளில் 265 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளது. மீதமுள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    வேலூர்:

    வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் ஆந்திராவில் பலத்த மழை சற்று ஓய்ந்ததுள்ளது. இதனால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு படிப்படியாக குறைந்து வருகிறது.

    வட கிழக்குப் பருவ மழையின் தீவிரம் காரணமாக தெற்கு ஆந்திரா மற்றும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை கொட்டித்தீர்த்தது.

    இதேபோல் ஆந்திராவில் நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டதால், பொன்னை ஆற்றில் அதிகபட்சமாக விநாடிக்கு சுமார் 60 ஆயிரம் கன அடிக்கு மேல் மழை வெள்ளம் பெருக்கெடுத்து பொன்னை ஆற்றின் இரு கரையை தொட்டபடி பாலாற்றில் கலந்தது.

    இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாற்று வரலாற்றில் 1903-ம் ஆண்டுக்கு பிறகு 118 ஆண்டுகள் கழித்து விநாடிக்கு சுமார் 1 லட்சத்து,40 ஆயிரத்து 54 கன அடி வெள்ளநீர் பெருக்கெடுத்து இரு கரையையும் தொட்டபடி சீறிப்பாய்ந்தோடியது. வரலாறு காணாத வெள்ளத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து கண்டுகளித்தனர்.

    தற்போது பாலாற்றில் நீர்வரத்து குறைந்து வருகிறது. இன்று காலை பாலாற்றில் 48 ஆயிரம் கனஅடி வெள்ளம் வந்தது. பொன்னை ஆற்றில் 11,687 கனஅடியாக குறைந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி, வாலாஜா அணைக்கட்டு நீர்த் தேக்கத்தில் இருந்து விநாடிக்கு 51,593 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தமாக உள்ள 369 ஏரிகளில் 265 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளது. மீதமுள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    காவேரிப்பாக்கம், கலவை, பூண்டி, மகேந்திரவாடி, மூதூர் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து இருப்பதால் ஆடு மாடுகளுக்கு தேவையான தீவனம் கிடைக்கிறது.
    குன்னத்தூர்:

    குன்னத்தூர் சந்தையானது கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பெரிய சந்தை ஆகும். இங்கே விலை பொருள்களைத் தவிர செம்மறியாடு, வெள்ளாடு, கோழி, கறி கோழி, கட்டு சேவல் அதிகமாக விற்பனைக்கு வரும். ‌இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் காடுகள் அதிகம் இருப்பதால் கால்நடைகளை அதிகம் வளர்த்து வருகிறார்கள். 

    குன்னத்தூர் பகுதியில் வளர்த்து வரும் வெள்ளாடு செம்மறியாடுகளை குன்னத்தூர் சந்தைக்கு தான் விற்பனைக்கு கொண்டு வருவார்கள். மேலும் மேட்டூர், மேச்சேரி, பவானி, அந்தியூர் போன்ற வெளியூர்களில் இருந்து அதிக அளவில் குன்னத்தூர் சந்தைக்கு வெள்ளாடுகள் விற்பனைக்கு வரும். தற்போது அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து இருப்பதால் ஆடு மாடுகளுக்கு தேவையான தீவனம் கிடைக்கிறது. 

    ஆகவே நேற்று குன்னத்தூர் சந்தைக்கு செம்மறி மற்றும் வெள்ளாடுகள் குறைவாகவே விற்பனைக்கு வந்திருந்தன. வாரா வாரம் ரு.50 லட்சத்திற்கு வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் விற்பனையாகும். நேற்று நடைபெற்ற சந்தையில் ரூ. 10 லட்சத்திற்கு மட்டும் ஆடுகள் விற்பனையாகியுள்ளன.
    பொன்னையாற்றில் 40 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கமண்டல மகாநதியில் 16 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுவதால் பாலாற்றில் மேலும் வெள்ளம் அதிகரிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
    வேலூர்:

    தமிழகத்தின் வடமாவட்டங்களின் விவசாயத்தை வளமாக்கி ஜீவாதாரமாக விளங்கும் பாலாறு, கர்நாடக மாநிலம் நந்திமலையில் உற்பத்தியாகி 93 கி.மீ பயணித்து, ஆந்திராவில் 33 கி.மீ., தமிழகத்தில் 222 கி.மீ தொலைவுக்கு பயணித்து வயலூர் முகத்துவாரத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி கரையை கடந்த நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் பெய்த மழையால் பாலாறும் அதன் துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு அதிகபட்ச அளவை எட்டியது.

    ஆந்திர மாநிலத்தில் உற்பத்தியாகி வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக பயணித்து பாலாற்றுடன் கலக்கும் நீவா என்ற பொன்னை ஆற்றில் 1930-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்சமாக 60,000 கன அடிக்கு நீர்வரத்து இருந்தது.

    இந்த ஆற்றில் இன்று அதிகாலை முதல் மீண்டும் 40 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரவு நேரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பொன்னை தரைப்பாலத்துக்கு மேல் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது.

    இதனால் தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை பாலத்துக்கு கீழே தண்ணீர் சென்றதால் பாலத்தில் நடந்து செல்ல மட்டும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போதுதான் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

    மரத்தின் ஒரு பகுதியில் தூண்கள் அப்படியே இறங்கி உள்ளது. தொடர்ந்து பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பொன்னை ஆற்றின் மேற்கு கரைப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

    இங்கு வசிக்கும் மக்கள் அன்றாட தேவைக்கும் அலுவலகங்கள் ஆஸ்பத்திரி என அனைத்துக்கும் பொன்னை தான் வரவேண்டும்.

    பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருப்பதால் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வேலூர் பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

    பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையும் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் 1855-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான அணைகளில் ஒன்றாகும். அணையின் உயரத்தைவிட 3 அடி அளவுக்கு வெள்ள நீர் பாய்ந்தோடியது.

    தமிழகத்தில் 222 கி.மீ பயணிக்கும் பாலாற்றில் வாலாஜா அருகே 1854-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் அணை கட்டும் பணியை தொடங்கினர். 1858-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட அணையில் 4825.2 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். இந்த அணையின் மூலம் 14,309 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

    சுமார் 163 ஆண்டுகள் பழமையான அணையை கடந்து நேற்று முன்தினம் உச்சபட்ச அளவாக 1 லட்சத்து 4 ஆயிரத்து 54 கன அடி நீர் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கடந்துள்ளது.

    பாலாற்றின் கிளை நதிகளான அகரம் ஆறு, மலட்டாறுகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அணையில் இருந்து 16 ஆயிரம் கன அடிக்கு மேல் சீறி பாய்ந்து வரும் வெள்ளம் பாலாற்றில் கலந்து ஓடுகிறது.

    பொன்னை ஆறு, பாலாறு சந்திக்கும் இடத்தில் கடல் போல் காட்சியளிக்கிறது. ராணிப்பேட்டை பாலாற்றில் இன்று காலை சுமார் 70 ஆயிரம் கன அடி வெள்ளம் பாய்ந்து ஓடி சென்றது.

    1903-ம் ஆண்டு 504.23 கன அடி வெள்ளத்தால் பாலாறு அணைக்கட்டு சேதமடைந்துள்ளது. இதை 1905-ம் ஆண்டு சரி செய்துள்ளனர். 1903-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் வாணியம்பாடி நகரம் நீரில் மூழ்கியதுடன் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    திடீர் வெள்ளத்தால் பாலாறு வாணியம்பாடி நகரில் மூன்றாக பிரிந்து மீண்டும் ஆம்பூர் அருகே ஒன்றாக சேர்ந்து அகண்ட பாலாறாக பயணிக்கிறது. பெருவெள்ளத்தால் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அத்தனை தரைப்பாலங்களும் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    1903-ம் ஆண்டு வந்த பெரு வெள்ளத்தையும் தாண்டி 118 ஆண்டுக்கு பிறகு பாலாற்று வெள்ளம் புதிய வரலாறு படைத்துள்ளது.

    பாலாற்றில் சீறிப்பாய்ந்து செல்லும் பெருவெள்ளத்தை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். பாலங்களில் நின்று குழந்தைகளுடன் செல்பி எடுத்து வருகின்றனர். இது போன்ற வேடிக்கை பார்க்க வேண்டாம் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    பொன்னையாற்றில் 40 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கமண்டல மகாநதியில் 16 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுவதால் பாலாற்றில் மேலும் வெள்ளம் அதிகரிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.



    வனத்தில் உள்ள வனவிலங்குகள் அவ்வப்போது குடிநீருக்காகவும், மேய்ச்சலுக்காகவும் அருகில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது.
    உடுமலை:

    உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தையொட்டி சுமார் 49 ஆயிரம் ஏக்கர் பரப்பில் விளைநிலங்கள் உள்ளன. விவசாயிகள் மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட மானாவாரி பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். 

    இந்தநிலையில் அவ்வப்போது விளைநிலங்குகளுக்குள் புகும் மான்கள், முள்ளம்பன்றி, காட்டுபன்றி உள்ளிட்ட விலங்கினங்கள் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. 

    இதனால் பயிர்கள் சேதமடைவதைத்தடுக்கும் வகையில் விளைநிலத்தைச் சுற்றி முள்கம்பி வேலி மற்றும் சோலார் மின் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டும் வருகின்றன.

    இருப்பினும் சிலர் அதிக மின்னழுத்தம் பாயும் கம்பி வேலி அமைப்பதாகவும் புகார் எழுகிறது. எனவே வனத்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டு  மின்வேலி அமைப்பதை கண்டறிந்து தடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது:-

    வனத்தில் உள்ள வனவிலங்குகள் அவ்வப்போது குடிநீருக்காகவும், மேய்ச்சலுக்காகவும் அருகில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. 

    இதனைத்தடுக்க ஒரு சிலர் முள்கம்பி வேலி மற்றும் சோலார் மின் கம்பி வேலிகளை அமைத்துள்ளனர். ஆனால் அதிக மின்னழுத்தம் பாயும் கம்பி வேலி அமைக்கக்கூடாது. இதனால் வனவிலங்குகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. 

    வனத்துறையினரின் கண்காணிப்பு அவசியம். வனத்தை ஒட்டி அகழிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அவர்கள் கூறினர். 
    கே.வி.குப்பம் அருகே கனமழை வெள்ளத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு அழகிய மாடி வீடு மிகமெதுவாகச் சரிந்து, நொறுங்கி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
    கே.வி.குப்பம்:

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே பசுமாத்தூர் ஊராட்சி ஐதர்புரத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 72), வக்கீல். இவர் பாலாற்றின் ஓரத்தில் தன்னுடைய பட்டா நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு மாடி வீடுகட்டினார். இந்த வீட்டில் 6 பேர் கொண்ட குடும்பம் வசித்து வந்தது.

    அண்மை காலமாக பெய்துவரும் கனமழை வெள்ளத்தால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளம் இந்த மாடிவீட்டைச் சூழ்ந்துகொண்டது. இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு அழகிய மாடி வீடு மிகமெதுவாகச் சரிந்து, நொறுங்கி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதில் இருந்தவர்கள் முன்னேற்பாடு நடவடிக்கையாக வருவாய்த் துறையினரால் வெளியேற்றப்பட்டனர். இதனால் அசம்பாவிதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டியில் உள்ள கந்தசாமி கோவிலில் கார்த்திகை தீபம் மற்றும் கிருத்திகை நாளையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.
    நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டியில் பிரசித்தி பெற்ற கந்தசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை தீபம் மற்றும் கிருத்திகை நாளையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.

    இதையடுத்து முருகன், வள்ளி தெய்வானையுடன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் மல்லசமுத்திரம், ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பேரணாம்பட்டு அருகே கனமழை காரணமாக வீடு இடிந்து 9 பேர் பலியாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை கனமழை பெய்தது.

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதனால் பேரணாம்பட்டு ரங்கம்பேட்டை கானாற்றில் நேற்று இரவு மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. புதுவீதி, குல்ஷார் வீதி, அஜிஜியா வீதிகளில் கானாற்று வெள்ளம் புகுந்தது.

    இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளிவாசல், மசூதி மற்றும் பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    தொடர்மழை பெய்து வருவதால் அஜிஜியா வீதியில் உள்ள பொதுமக்கள் மாடிகளில் வீடுகளில் தங்கினர்.

    இந்த வீதியிலுள்ள யுனானி வைத்தியர் மர்கூப் அஸ்லாம் அன்சாரி என்பவருடைய வீட்டில் அவரது மனைவி அனிஷா பேகம் (வயது63) மற்றும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வீட்டின் மாடியில் ஆசிரியை கவுசர் (45) அவரது மகள் தன்ஷிலா (27) ஆகியோர் வசித்து வந்தனர். நேற்று இரவு பலத்த மழை பெய்து தெருவில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மழையின் காரணமாக வாடகைக்கு குடியிருந்த கவுசர் மற்றும் அவருடைய மகள் ஆகியோர் அனுஷா பேகம் வீட்டில் வந்து தங்கினர்.

    மேலும் அக்கம் பக்கத்தினரும் அந்த வீட்டிற்கு வந்தனர். மொத்தம் 18 பேர் அந்த வீட்டில் படுத்து தூங்கினர். இன்று அதிகாலை 6.15 மணிக்கு திடீரென வீடு முழுவதுமாக இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியவர்கள் அலறி கூச்சலிட்டனர்.

    பயங்கர சத்தத்துடன் வீடு இடிந்ததால் அந்த பகுதி பொதுமக்கள் வெளியே ஓடி சென்று பார்த்தனர். அப்போது வீடு இடிந்து தரைமட்டமாகி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பலியானவர்கள் உடலை மீட்டு சென்ற காட்சி

    இதுகுறித்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். அப்போது 9 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியானது தெரியவந்தது.

    அனிஷா பேகம்(63) இவரது மருமகள்கள் ரூஹினாஷ் (27), மிஸ்பா பாத்திமா(22),

    பேரன்கள் மனுலா(8), தமீத்(2),

    பேத்திகள் ஹபீரா(4), ஹப்ரா(3),

    ஆசிரியை ஹவுசர்(45), தன்ஷிலா(27).

    9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பேரணாம்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்தவர்களை மீட்டனர்.

    முகமது கவுசிப், முகமது தவுசிக், சன்னு அகமது, அபிப் ஆலம், இலியாஸ் அகமது, ஹாஜிரா, நாசிரா, ஹாஜிரா நிகாத், மொய்தீன் (6) ஆகிய 9 பேர் மீட்கப்பட்டனர். இவர்கள் பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இதில் ஹாஜிரா நிகாத், மொய்தீன் ஆகியோர் ஆபத்தான நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கலெக்டர் குமாரவேல் பாண்டியன், உதவி கலெக்டர் தனஞ்சயன் தாசில்தார் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்தில் வந்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர். இந்த சம்பவம் பேரணாம்பட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பேரணாம்பட்டு, ரங்கம்பேட்டு, கானாற்று வெள்ளத்தால் அந்த பகுதியில் 1000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

    மழை பெய்து வருவதால் பழமையான வீடுகளில் தங்கி உள்ள பொதுமக்கள் மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள முகாம்களில் வந்து தங்கி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    ஆண்டுதோறும் கார்த்திகை முதல்நாளில் ஐயப்ப பக்தர்களுக்கு கோவிலின் தலைமை குருசாமி மோகன் மாலை அணிவித்து ஆசீர்வதித்து வருவது வழக்கம்.
    ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் மெயின் சாலையில் கேரள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இணையாக பிரமாண்ட அளவில் வல்லபை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் இங்கு வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் கார்த்திகை முதல்நாளில் ஐயப்ப பக்தர்களுக்கு கோவிலின் தலைமை குருசாமி மோகன் மாலை அணிவித்து ஆசீர்வதித்து வருவது வழக்கம்.

    அதன்படி நேற்று காலை கோவில் சன்னதி 4 மணி அளவில் திறக்கப்பட்டு அங்கு பல்வேறு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நேற்று முதல் நாள் கார்த்திகை தினம் முதல் 48 நாட்கள் தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் பஜனை நடத்தி அன்னதான நிகழ்ச்சியும் நடைபெறும். ஆர்வத்துடன் அதிகமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாலை அணிவித்துக் கொண்டனர்.

    இது குறித்து ரெகுநாதபுரம் வல்லபை கோவிலின் தலைமை குரு மோகன் கூறியதாவது:- கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வழிபட முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது அரசு அனுமதித்தபடி கட்டுப்பாடுகளுடன் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே சபரிமலைக்கு சென்று வழிபட அழைத்துச் செல்லப்படுவார்கள்.

    கடந்த காலங்களில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல முடியாமல் ரெகுநாதபுரத்தில் உள்ள வல்லபை ஐயப்பன் கோவிலில் காணிக்கை செலுத்தி வழிபட்டனர். எதிர்வரும் காலங்களில் வல்லபை ஐயப்பன் ஆலயத்தை மேலும் விரிவுபடுத்தி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வழிபட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சமூக விரோதிகளை கண்டித்தும் கொலைகாரர்கள் வாழும் மாநிலமாக அனுமதிக்கூடாது என்பதை வலியுறுத்தி குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகர, ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கமிட்டிகள் சார்பில் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் நடேச தமிழார்வனை படுகொலை செய்த சமூக விரோதிகளை கண்டித்தும் கொலைகாரர்கள் வாழும் மாநிலமாக அனுமதிக்கூடாது என்பதை வலியுறுத்தி குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் துரை செல்வம் தலைமை தாங்கினார்.நிர்வாகிகள் ஆனந்தன், விநாயகம், தங்கவேலு, வேலாயுதம், பிரேம்குமார், சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    பாரம்பரியமாக விஷ்ணு சகஸ்ர நாமத்தை இறைவனுடன் இரண்டற கலப்பதற்காக சொல்லி வருகிறார்கள். இதில் உள்ள ஒவ்வொரு பெயரும் ஏதாவது ஒரு நல்ல குணத்தை காட்டுவதாக அமைந்துள்ளது.
    விஷ்ணு சகஸ்ரநாமம் என்பது மகாபாரதத்தில் பீஷ்மர் போர்க்களத்தில் யுதிஷ்டிரருக்கு போதித்த ஆயிரம் நாமங்கள் கொண்ட பகுதியாகும். சகஸ்ரம் என்றால் ஆயிரம் என்று பொருள். நாமம் என்றால் பெயர் என்று அர்த்தம். ஆயிரம் பெயர்களை வகைப்படுத்துவது இந்த பகுதியின் சிறப்பாகும்.

    பாரம்பரியமாக விஷ்ணு சகஸ்ர நாமத்தை இறைவனுடன் இரண்டற கலப்பதற்காக சொல்லி வருகிறார்கள். இதில் உள்ள ஒவ்வொரு பெயரும் ஏதாவது ஒரு நல்ல குணத்தை காட்டுவதாக அமைந்துள்ளது.  இந்த ஆயிரம் பெயர்களையும் சொல்வது என்பது புண்ணிய நதிகளில் நீராடுவதைவிட அதிக பலன்களை தரும் என்பது ஐதீகம்.

    விஷ்ணு சகஸ்ரநாமத்தின் பெயர் தொகுப்பில் கிருஷ்ண அவதாரத்தின் ரகசியம் அடங்கி இருப்பதாக சொல்வார்கள். ஆலய வழிபாடுகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி அர்ச்சணை செய்வதை சிறப்பானதாக கருதுகிறார்கள். வீடுகளில் விஷ்ணு சகஸ்ரநாமத்தை தினமும் உச்சரிப்பவர்கள் செல்வ செழிப்பு, வம்ச விருத்தி, புகழ் உள்ளிட்ட அனைத்து பலன்களையும் பெறுவார்கள் என்று நம்பிக்கை உள்ளது. இத்தகைய சிறப்படைய விஷ்ணு சகஸ்ர நாமத்தை தினமும் படியுங்கள் என்று தன்னை நாடி வரும் ஒவ்வொரு பக்தர்களிடமும் சீரடி சாய்பாபா வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    சீரடி சாய்பாபா தன் பக்தர்களுக்கு காட்டிய தனித்துவமான பாதைகளில் விஷ்ணு சகஸ்ர நாமத்தை அவர் படிக்க சொன்னதும் ஒரு தனிப்பாதையாகும். பாபாவின் பக்தர்களில் ஒருவரான தாஸ்கனு கீர்த்தனைகள் பாடுவதில் வல்லவர். அவரை விஷ்ணு சகஸ்ர நாமத்தை படிக்க வைத்து சீரடி பாபா செம்மைபடுத்தினார். தாஸ்கனு சீரடிக்கு வரும்போதெல்லாம் அங்குள்ள பெருமாள் கோவிலில் அமர்ந்து விஷ்ணு சகஸ்ர நாமத்தை பாராயணம் செய்யும்படி சீரடி சாய்பாபா உத்தரவிட்டார். சில சமயங்களில் தாஸ்கனுவுடன் அமர்ந்து வேறு சில பக்தர்களையும் அவர் விஷ்ணு சகஸ்ர நாமத்தை பாராயணம் செய்ய சொல்வதுண்டு.

    விஷ்ணு சகஸ்ரநாமத்தின் சிறப்பு பற்றி சீரடி சாய்பாபா பலதடவை பலவிதமாக சொல்லி உள்ளார். ஒரு தடவை சாய்பாபாவை தரிசனம் செய்வதற்காக ராமதாசி என்ற பக்தர் சீரடிக்கு வந்து இருந்தார். அவர் எப்போதும் தன்னிடம் நிறைய பாராயண புத்தகங்களை வைத்து இருப்பார். சாய்பாபா முன்பு அமர்ந்து அந்த பாராயண புத்தகங்களை படித்துக் கொண்டே இருப்பார். அதில், விஷ்ணு சகஸ்ரநாமமும் இடம்பெற்று இருக்கும். ராமதாசி சீரடியில் இருந்த அதே சமயத்தில் பாபாவின் மற்றொரு பக்தரான ஷாமா என்பவரும் வந்து இருந்தார். ராமதாசிக்கும், ஷாமாவுக்கும்  சுத்தமாக பிடிக்காது. எப்போதும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டே இருப்பார்கள். அவர்களை திருத்த முடிவு செய்த சாய்பாபா, திருவிளையாடல் ஒன்றை நடத்தினார்.

    பாபாவின் எதிரே அமர்ந்திருந்த ராமதாசியை அழைத்து, ‘‘எனக்கு தாங்க முடியாத வயிற்று வலி வந்துவிட்டது. குடலே வெடித்துவிடும் போல் இருக்கிறது. நான் எவ்வளவோ முயன்றும் வயிற்று வலி நிற்கவில்லை. உடனடியாக கடைக்கு சென்று கொஞ்சம் மருந்து வாங்கி வாருங்கள். மருந்தை சாப்பிட்டால்தான் இந்த வயிற்று வலி போகும் போல் தெரிகிறது’’ என்றார்.
    அதோடு வயிற்று வலியால் அவதிப்படுவது போலவும் நடித்தார்.

    இதைக்கண்டு பதறிப்போன ராமதாசி, உடனடியாக எழுந்து கடைத்தெருவை நோக்கி நடந்தார். அடுத்த நிமிடம் பாபா தனது இருக்கையில் இருந்து எழுந்து ராமதாசி வைத்திருந்த புத்தகங்கள் ஒவ்வொன்றாக எடுத்து பார்த்தார். அதில் இருந்த விஷ்ணு சகஸ்ரநாம புத்தகத்தை எடுத்து வந்து ஷாமாவிடம் கொடுத்தார்.

    ‘‘ஷாமா இது மிகவும் புனிதமான நூல். இதைப்பற்றி உனக்கு எதுவும் தெரியுமா? இது மங்களம் தரக்கூடியது. ஆகவே இந்த புத்தகத்தை உனக்கு நான் தருகிறேன். இன்று முதல் இந்த புனித நூலை நீ வாசித்து வர வேண்டும். தினமும் ஒரு பாடல் வீதம் படித்து பொருளை உணர்ந்து புரிந்துகொள். இதற்கான பலன் உனக்கு மிகுதியாக கிடைக்கும். பிற்காலத்தில் இதன் மூலம் நீ மிகப்பெரிய பலன் அடைவாய்’’ என்றார்.

    ஆனால் விஷ்ணு சகஸ்ரநாமம் புத்தகத்தை பாபாவிடம் இருந்து வாங்கிக் கொள்ள ஷாமா மறுத்தார். இந்த புத்தகம் சமஸ்கிருதத்தில் உள்ளது. எனக்கு சமஸ்கிருதம் படிக்கத் தெரியாது. மொழி தெரியாமல் எதற்காக வைத்து இருக்க வேண்டும்? மேலும் ராமதாசி என் மீது எப்போதும் வெறுப்பில் இருக்கிறார். இந்த புத்தகத்தை நான் வாங்கிக் கொண்டேன் என்று தெரிந்தால், நிச்சயமாக என்னிடம் அவர் சண்டைக்கு வருவார். எனவே வேண்டாம்’’ என்றார்.

    என்றாலும் சாய்பாபா விடவில்லை. அவர் மீண்டும் ஷாமாவை பார்த்து, ‘‘விஷ்ணு சகஸ்ரநாமம் புத்தகத்தின் சிறப்பை நீ இன்னும் உணரவில்லை. அதனால்தான் நீ வேண்டாம் என்று சொல்கிறாய். ஒரு தடவை நான் கடுமையான நெஞ்சுவலியால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தேன். அப்போது நான் இந்த விஷ்ணு சகஸ்ரநாமம் புத்தகத்தை எடுத்து என் மார்பின் மீது வைத்துக் கொண்டேன். அதன் பிறகுதான் எனது நெஞ்சுவலி குணமானது.

    விஷ்ணு சகஸ்ரநாமம் மூலம் ஏதோ ஒரு சக்தி என் நெஞ்சுக்குள் பாய்வது போல் இருந்தது. அந்த சக்தியால்தான் எனது இதய படபடப்பு அடங்கியது. நான் உயிர் பிழைத்ததே இந்த விஷ்ணு சகஸ்ரநாமத்தால்தான். எனவே வேண்டாம் என்று சொல்லாதே. இதை வாங்கிக் கொள். தினமும் கொஞ்சம், கொஞ்சமாகப்படி. அது உனக்கு மிகப்பெரிய ஆனந்தத்தை தரும்’’ என்றார்.

    பாபா வலியுறுத்திய பிறகு ஷாமாவுக்கு தயக்கம் போகவில்லை. ராமதாசி தன்னிடம் சண்டைக்கு வருவார் என்று மிகவும் பயந்தார். தேவை இல்லாமல் எதற்காக சீரடி தலத்தில் இன்னொருவருடன் சண்டை போட வேண்டும் என்று நினைத்தார். இதனால் பாபாவிடம், ‘‘எனக்கு இந்த புத்தகம் வேண்டாம்’’ என்று உறுதியான குரலில் மறுத்தார். உடனே அவரிடம் பாபா, ‘‘இந்த விஷ்ணு சகஸ்ரநாமம் புத்தகத்தை ராமதாசிக்கு சொந்தமானது என்று நினைக்காதே. நானே தருவதாக நினைத்துக் கொள். இதை படிப்பதற்கு தேவையான ஆர்வத்தை உன்னிடம் நான் ஏற்படுத்துகிறேன்.

    விஷ்ணு சகஸ்ரநாமம் படித்தால் மலை போன்ற பாவமும் விலகி ஓடிவிடும். தீய எண்ணங்கள் மனதில் வரவே வராது. பிறப்பு& இறப்பு பிணியில் இருந்து ஒவ்வொருவரையும் காப்பாற்றும். அந்த அளவுக்கு விஷ்ணு சகஸ்ரநாமம் சக்தி வாய்ந்தது. இதை யார் ஒருவர் மிகவும் பிரயத்தனமாக பாராயணம் செய்கிறாரோ அவர்களது வாழ்க்கை பிரகாசமாகும்.

    ஷாமா.... உன்னை சுத்தப்படுத்திக் கொள்ள விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்தான் சிறந்தது, சுலபமானது. வேறு வழியே இல்லை. எனவே இதை படித்தால் உன் ஆன்மீக வாழ்க்கை செழிப்பாகும். விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பதற்கு முன்பு புனித நீராட வேண்டும். தியானம் செய்ய வேண்டும் என்றெல்லாம் எந்த அவசியமும் இல்லை. எந்த சடங்கும், சாஸ்திரங்களும் இந்த பாராயணத்திற்கு இடையூறாக இருக்காது. 

    எனவே விஷ்ணு சகஸ்ரநாமத்தை தருகிறேன். இதை இடைவிடாமல் படி. வேறு எதுவும் தேவையில்லை. நீ மோட்சத்துக்கு செல்ல இது ஒன்றுதான் வழி’’ என்றார். இவ்வாறு சொல்லிவிட்டு ஷாமாவின் கைகளில் விஷ்ணு சகஸ்ரநாமத்தை வலுக்கட்டாயமாகக் கொடுத்தார். இதனால் ஷாமா வேறு வழியில்லாமல் அந்த புத்தகத்தை வாங்கி வைத்துக் கொண்டார்.

    இந்தநிலையில் கடைத்தெருவுக்கு சென்ற ராமதாசி திரும்பி வந்தார். தனது விஷ்ணு சகஸ்ரநாமம் புத்தகம் ஷாமா கையில் இருப்பதை பார்த்ததும் அவருக்கு கோபம் வந்தது. ‘‘என் புத்தகத்தை திருடவே பாபாவிடம் சொல்லி என்னை கடைக்கு அனுப்பினாயா? என் புத்தகத்தை ஒழுங்காக என்னிடம் தந்துவிடு’’ என்று கூச்சலிட்டார்.

    இதைக் கண்டதும் ராமதாசியை பாபா சமரசம் செய்தார். ‘‘நான்தான் உன்னை கடைக்கு அனுப்பினேன். பக்குவமாக நடந்து கொள். எதற்காக இவ்வளவு ஆத்திரம்? இதை நீ கைவிட வேண்டும் என்பதற்காகத்தான் உன்னை கடைக்கு வேண்டுமென்றே அனுப்பினேன்.  இனிமேலாவது மனதை பக்குவப்படுத்து’’ என்றார். இப்படி ஒரே நேரத்தில் ஒரே நிகழ்வு மூலம் தனது 2 பக்தர்களை பாபா பக்குவப்படுத்தினார்.

    இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், ஷாமாவை அவர் விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்க வைத்ததுதான். இதேபோன்று பலதடவை அவர் விஷ்ணு சகஸ்ரநாமத்தை தனது பக்தர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். சில பக்தர்களின் குல தெய்வம் மற்றும் வழிபாடு முறைகளை அறிந்து அதற்கு ஏற்பக்கூட மூலமந்திரங்களை பாபா சொல்ல வைத்துள்ளார்.

    தாஸ்கனு என்ற பக்தரின் நண்பர் ராவ்பகதூர் பிரதான். இவருக்கு சீரடி சாய்பாபாவை நேரில் பார்த்து தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஒரு நாள் அவர் சீரடிக்கு வந்தார். அப்போது துவாரகமயி பகுதியில் இருந்த பாபா ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருந்தார். ராவ்பகதூர் பிரதானுக்கு இது ஆச்சரியமாக இருந்தது.

    பாபா என்ன பாடல் பாடுகிறார்? என்று சற்று  அருகில் சென்று காது கொடுத்து கேட்டார். ‘‘ஸ்ரீராம்... ஜெய்ராம்... ஜெய்ராம்... ஜெய்ராம்’’ என்று பாபா சொல்லிக் கொண்டே இருந்தார். பிரதானிடம் அவர், ‘‘நீயும் இதை சொல்லலாமே?’’ என்றார். இதைக் கேட்டதும் பிரதான் அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறினார்.

    அவர் கூறுகையில், ‘‘என் குல தெய்வம் என்பதால் இந்த நாமத்தைதான் உச்சரிக்கச் சொன்னார்கள். ஆனால் நான் அலட்சியமாக இருந்துவிட்டேன். இன்று பாபா எனக்கு அந்த பாதையை காட்டிவிட்டார்’’ என்று நன்றியோடு சொன்னார்.
    இதேபோன்று திருமதி.கபார்டே என்ற பக்தைக்கு, ‘‘ராஜாராம்... ராஜாராம்’’ என்று சொல்லும்படி பாபா அறிவுறுத்தினார். ‘‘இந்த மூல மந்திரத்தை சொல்ல சொல்ல உன் கஷடங்கள் அனைத்தும் விலகி நீ, இறைவனிடம் எளிதாக நெருங்க முடியும்’’ என்றும் பாபா தெரிவித்தார். இதைக் கேட்டதும் கபார்டே, ‘‘உண்மைதான் பாபா’’ என்று கைகூப்பி வணங்கினார்.

    சில பக்தர்களுக்கு உபநிசத்தை எப்படி படிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துள்ளார்.  வறுமை, நோய் போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கும் பக்தர்களைப் பார்த்தால் விஷ்ணு சகஸ்ரநாமத்தின் சில பகுதிகளை பாராயணம் செய்ய சொல்லுவார். ஆனால், ஏனோ தெரியவில்லை பாபா பக்தர்களிடம் விஷ்ணு சகஸ்ரநாமத்தை படிக்கும் பழக்கம் அதிகம் இல்லாமல் உள்ளது. 

    பாபாவின் புகழ் பரப்பிய நரசிம்ம சுவாமிஜி, ராதாகிருஷ்ண சுவாமிஜி ஆகியோர் அடிக்கடி விஷ்ணு சகஸ்ரநாமம் படியுங்கள் என்று சொல்வதை வழக்கத்தில் வைத்து இருந்தனர். ஏனெனில் அது பாபா காட்டிய முக்கிய பாதை ஆகும். இவ்வாறெல்லாம் பாதை காட்டிய பாபா, இறை அருள் பெற விரதம் தேவை இல்லை என்று வலியுறுத்தி கூறியுள்ளார்.
    ×