search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கி (கோப்புப்படம்)
    X
    துப்பாக்கி (கோப்புப்படம்)

    கள்ளக்காதலை சொல்லி விடுவான் என பயந்து 4 வயது சிறுவனின் வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டல்

    கள்ளக்காதலை சொல்லி விடுவான் என பயந்து 4 வயது சிறுவனின் வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டல் விடுத்தது தொடர்பான வீடியோ வைரலானதால் வாலிபர் கைதானார்.
    பரேலி:

    உத்தரபிரதேச மாநிலம், மொராதாபாத் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். அதேபகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு இருந்தது.

    இது அந்த பெண்ணின் 4 வயது சிறுவனுக்கு தெரிந்தது.

    இந்தநிலையில் 4 வயது சிறுவனை அஜித்குமார் வாயில் துப்பாக்கி வைத்து மிரட்டி உள்ளார். அவர் துப்பாக்கியை வைத்து மிரட்டுவது வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியானது. 25 வினாடிகளை கொண்டது அந்த வீடியோ.

    துப்பாக்கியை வாயில் வைத்து மிரட்டுவதை அஜித்குமார் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அவர்தான் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

    இதை பார்த்துதான் போலீசார் அவரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததை சிறுவன் தனது தந்தையிடம் சொல்லிவிடுவான் என பயந்துதான் துப்பாக்கியை வாயில் வைத்து மிரட்டியது தெரிய வந்தது.

    அப்போது அவர் சுய நினைவு இல்லாமல் போதையில் இருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். சிறுவனின் தந்தை வியாபாரி ஆவார். வேலை விஷயமாக அவர் வெளியூர் சென்று உள்ளார். இந்த வீடியோவை பார்த்துதான் அவருக்கும் இந்த சம்பவம் பற்றி தெரிய வந்தது.
    Next Story
    ×