என் மலர்
திருவண்ணாமலை
கண்ணமங்கலம் பகுதியில் மழை காரணமாக ஒரு லட்சம் வாழை மரங்கள் சேதமடைந்தன.
கண்ணமங்கலம்:
நிவர் புயல் காரணமாக கண்ணமங்கலம், சந்தவாசல், படவேடு, அனந்தபுரம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் மிகவும் வேதனையடைந்துள்ளனர். மேலும் தென்னை மரங்கள் உள்பட பல்வேறு மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது.
சுமார் 1 லட்சத்துக்கும் மேலான வாழை மரங்கள் பல்வேறு கிராமங்களில் சேதமடைந்து விட்டதாகவும், இதன் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கலசபாக்கம் அருகே நாயுடு மங்கலம் கூட்ரோடு, நாயுடுமங்கலம் சோடா கடை ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசியதால் திருவண்ணாமலை மெயின் ரோட்டில் உள்ள பெரிய புளிய மரங்கள் சாலையில் வேருடன் சாய்ந்து விழுந்தது. அப்போது திருவண்ணாமலை நோக்கி வந்த மினி லாரி மரத்தின் அடியில் சிக்கிக்கொண்டது. இதுபற்றி தகவல் அறிந்த கலசபாக்கம் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மினி லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதே போன்று கலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட காஞ்சி, கடலாடி, கேட்டவரம்பாளையம், அரிதாரிமங்கலம், சீராம்பாளையம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கடலாடி போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சென்று மரங்களை அப்புறப்படுத்தினர்.
செங்கத்தில் நிவர் புயல் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டிருந்தது. இதனால் நேற்று பகல் நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் மிக குறைவாகவே காணப்பட்டது. புயல் காற்று வீசியதில் குப்பநத்தம், கிளையூர் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை பயிர்கள் அடியோடு சாய்ந்தது.
அதேபோல் செங்கத்தில் இருந்து பரமனந்தல் செல்லும் சாலையில் காந்திநகர் அருகே சாலை நடுவே புளியமரம் ஒன்று சாய்ந்தது. இதனை அதிகாரிகள் அப்பகுதி மக்களின் உதவியுடன் வெட்டி அகற்றினர்.
அதேபோல செங்கம் அடுத்த புதுப்பாளையம் அருகே உள்ள வீரானந்தல்-சாமாலை சாலையில் புளியமரம் ஒன்று வீடுகளின் மீது சாய்ந்தது. இதில் 2 வீடுகளின் முன் பகுதி சேதமடைந்தது. மேலும் புளியமரம் விழுந்ததில் 3 மின்கம்பங்கள், ஒரு டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது. பகல் நேரத்தில் புயலின் தாக்கம் காரணமாக விட்டுவிட்டு செங்கம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அதேபோல் ஜமுனாமரத்தூர் பகுதியில் பெய்த மழையின் காரணமாக குப்பநத்தம் அணை மற்றும் செங்கம் பகுதியில் உள்ள பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. சில தினங்களுக்கு முன்பாக குப்பநத்தம்அணை திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் குப்பநத்தம் அணைக்கு நீர் வர தொடங்கி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
நிவர் புயல் காரணமாக கண்ணமங்கலம், சந்தவாசல், படவேடு, அனந்தபுரம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் மிகவும் வேதனையடைந்துள்ளனர். மேலும் தென்னை மரங்கள் உள்பட பல்வேறு மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது.
சுமார் 1 லட்சத்துக்கும் மேலான வாழை மரங்கள் பல்வேறு கிராமங்களில் சேதமடைந்து விட்டதாகவும், இதன் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கலசபாக்கம் அருகே நாயுடு மங்கலம் கூட்ரோடு, நாயுடுமங்கலம் சோடா கடை ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசியதால் திருவண்ணாமலை மெயின் ரோட்டில் உள்ள பெரிய புளிய மரங்கள் சாலையில் வேருடன் சாய்ந்து விழுந்தது. அப்போது திருவண்ணாமலை நோக்கி வந்த மினி லாரி மரத்தின் அடியில் சிக்கிக்கொண்டது. இதுபற்றி தகவல் அறிந்த கலசபாக்கம் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மினி லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதே போன்று கலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட காஞ்சி, கடலாடி, கேட்டவரம்பாளையம், அரிதாரிமங்கலம், சீராம்பாளையம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கடலாடி போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சென்று மரங்களை அப்புறப்படுத்தினர்.
செங்கத்தில் நிவர் புயல் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டிருந்தது. இதனால் நேற்று பகல் நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் மிக குறைவாகவே காணப்பட்டது. புயல் காற்று வீசியதில் குப்பநத்தம், கிளையூர் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை பயிர்கள் அடியோடு சாய்ந்தது.
அதேபோல் செங்கத்தில் இருந்து பரமனந்தல் செல்லும் சாலையில் காந்திநகர் அருகே சாலை நடுவே புளியமரம் ஒன்று சாய்ந்தது. இதனை அதிகாரிகள் அப்பகுதி மக்களின் உதவியுடன் வெட்டி அகற்றினர்.
அதேபோல செங்கம் அடுத்த புதுப்பாளையம் அருகே உள்ள வீரானந்தல்-சாமாலை சாலையில் புளியமரம் ஒன்று வீடுகளின் மீது சாய்ந்தது. இதில் 2 வீடுகளின் முன் பகுதி சேதமடைந்தது. மேலும் புளியமரம் விழுந்ததில் 3 மின்கம்பங்கள், ஒரு டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது. பகல் நேரத்தில் புயலின் தாக்கம் காரணமாக விட்டுவிட்டு செங்கம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அதேபோல் ஜமுனாமரத்தூர் பகுதியில் பெய்த மழையின் காரணமாக குப்பநத்தம் அணை மற்றும் செங்கம் பகுதியில் உள்ள பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. சில தினங்களுக்கு முன்பாக குப்பநத்தம்அணை திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் குப்பநத்தம் அணைக்கு நீர் வர தொடங்கி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 58 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக நேற்று முன்தினம் முதல் தொடர் மழை பெய்தது. நேற்று சில பகுதிகளில் சாரல் மழையும், மிதமான மழையும் பெய்தது. இந்த மழையின் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. நிவர் புயலால் சில இடங்களில் வீடுகள் இடிந்து சேதம் ஏற்பட்டு உள்ளது. 72 குடிசை வீடுகள் பகுதியாகவும், 14 குடிசை வீடுகள் முழுமையாகவும் சேதம் ஏற்பட்டு உள்ளது. மேலும் ஓட்டு வீடு, சீட்டு வீடுகள் 24 வீடுகள் பகுதியாகவும், 3 வீடுகள் முழுமையாகவும் சேதம் ஏற்பட்டு உள்ளது. மேலும் 7 மாடுகள், 4 கன்றுகள், 7 ஆடுகள் உயிரிழந்து உள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலையான மருத்துவ முகாம்கள் 9-ம், நடமாடும் மருத்துவ முகாம்கள் 11-ம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 100-க்கும் மேற்பட்டவர்கள் பயன்பெற்று உள்ளனர். மேலும் மாவட்டத்தில் 267 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் 7846 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் அவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உணவு பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
பலத்த காற்றினால் 66 மரங்களும், 237 மின் கம்பங்களும் சாய்ந்து உள்ளன. அதுமட்டுமின்றி மழையிலான மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெல், வாழை உள்பட 2 ஆயிரத்து 272.58 ஹெக்டர் பரப்பில் பயிர்கள் சேதம் ஏற்பட்டு உள்ளது.
தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. பொதுப்பணித் துறைக்கு சொந்தமாக 697 ஏரிகள் உள்ளது. இதில் 13 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளது. 75 சதவீதத்திற்கு மேல் 24 ஏரிகளும், 50 சதவீதத்திற்கு மேல் 109 ஏரிகளும், 25 சதவீதத்திற்கு மேல் 251 ஏரிகளும், 25 சதவீதத்திற்கு கீழ் 300 ஏரிகளும் நிரம்பி உள்ளது. அதேபோல் ஊரக வளர்ச்சித் துறையில் 1257 ஏரிகள் உள்ளது. இதில் 45 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளது. 75 சதவீதத்திற்கு மேல் 213 ஏரிகளும், 50 சதவீதத்திற்கு மேல் 337 ஏரிகளும், 26 சதவீதத்திற்கு மேல் 239 ஏரிகளும், மற்ற ஏரிகள் 25 சதவீதத்திற்கு கீழ் தண்ணீர் நிரம்பி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக நேற்று முன்தினம் முதல் தொடர் மழை பெய்தது. நேற்று சில பகுதிகளில் சாரல் மழையும், மிதமான மழையும் பெய்தது. இந்த மழையின் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. நிவர் புயலால் சில இடங்களில் வீடுகள் இடிந்து சேதம் ஏற்பட்டு உள்ளது. 72 குடிசை வீடுகள் பகுதியாகவும், 14 குடிசை வீடுகள் முழுமையாகவும் சேதம் ஏற்பட்டு உள்ளது. மேலும் ஓட்டு வீடு, சீட்டு வீடுகள் 24 வீடுகள் பகுதியாகவும், 3 வீடுகள் முழுமையாகவும் சேதம் ஏற்பட்டு உள்ளது. மேலும் 7 மாடுகள், 4 கன்றுகள், 7 ஆடுகள் உயிரிழந்து உள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலையான மருத்துவ முகாம்கள் 9-ம், நடமாடும் மருத்துவ முகாம்கள் 11-ம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 100-க்கும் மேற்பட்டவர்கள் பயன்பெற்று உள்ளனர். மேலும் மாவட்டத்தில் 267 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் 7846 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் அவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உணவு பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
பலத்த காற்றினால் 66 மரங்களும், 237 மின் கம்பங்களும் சாய்ந்து உள்ளன. அதுமட்டுமின்றி மழையிலான மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெல், வாழை உள்பட 2 ஆயிரத்து 272.58 ஹெக்டர் பரப்பில் பயிர்கள் சேதம் ஏற்பட்டு உள்ளது.
தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. பொதுப்பணித் துறைக்கு சொந்தமாக 697 ஏரிகள் உள்ளது. இதில் 13 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளது. 75 சதவீதத்திற்கு மேல் 24 ஏரிகளும், 50 சதவீதத்திற்கு மேல் 109 ஏரிகளும், 25 சதவீதத்திற்கு மேல் 251 ஏரிகளும், 25 சதவீதத்திற்கு கீழ் 300 ஏரிகளும் நிரம்பி உள்ளது. அதேபோல் ஊரக வளர்ச்சித் துறையில் 1257 ஏரிகள் உள்ளது. இதில் 45 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளது. 75 சதவீதத்திற்கு மேல் 213 ஏரிகளும், 50 சதவீதத்திற்கு மேல் 337 ஏரிகளும், 26 சதவீதத்திற்கு மேல் 239 ஏரிகளும், மற்ற ஏரிகள் 25 சதவீதத்திற்கு கீழ் தண்ணீர் நிரம்பி உள்ளது.
வந்தவாசி பகுதியில் ஏரி தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனால் 150-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் வெள்ளத்தில் மிதக்கிறது.
வந்தவாசி:
நிவர் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. மழைகாரணமாக வந்தவாசி அடுத்துள்ளது பாதிரி ஏரி நிரம்பி உள்ளது. இந்த ஏரிக்கு அருகில் சவுரிபாளையம் என்ற இடத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். பாதிரி ஏரி நிரம்பி வெளியேறும் தண்ணீர் செல்லும் கால்வாய் பகுதி தூர்ந்துபோய் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனால் குடிசை வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன. இதன்காரணமாக குடிசை வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி இருக்கிறார்கள்.
புயல் மழைக்காரணமாக குடிசை மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தப்பகுதி மக்களை யாரும் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே, குடிசைகளை சூழ்ந்துள்ள நீரை அப்புறப்படுத்த வேண்டும், அரசு தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை வார்டுக்கு செல்லும் வழியில் உள்ள 40 ஆண்டு பழமையான மரம் சாய்ந்து விழுந்தது. அதேபோன்று மேல்மருவத்தூர் சாலை, புலிவாய், தெய்யார், வல்லம், கிருஷ்ணாபுரம், கூத்தம்பட்டு, தாலுகா அலுவலகம், வங்காரம், சத்யா நகர், நம்பேடு, நடுக்குப்பம் ஆகியபகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. மேல்மருவத்தூர் சாலையில் மின்கம்பத்தின் மீது மரம் விழுந்ததால் மின்சாரம் பாதிக்கப்பட்டது. தகவலறிந்த நகராட்சி, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை, காவல்துறையினர் ஒருங்கிணைந்து, மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஆரணியை அடுத்த மாமண்டூர் காலனி பகுதியை சேர்ந்த பாக்கியநாதன் என்பவருடைய வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்தது. வீட்டில் இருந்த பாக்கியநாதன் அவருடைய மனைவி, இரண்டு குழந்தைகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் சென்று மரத்தை அகற்றினர்.
மேலும் தகவல் அறிந்ததும் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பி.ஜெயராமன், தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் சென்று நிவாரண பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கினர். அமைச்சர் தனது சொந்த பணத்தில் இருந்து நிதி உதவி வழங்கினார். அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பி.ஆர்.ஜி.சேகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மாமண்டூர் பி.சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.
நிவர் புயல் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. போளூரில் 88 மி.மீ மழை பதிவாகி இருந்தது. இந்த மழைகாரணமாக மாம்பட்டு, வசூர் கிராமங்களில் வாழைமரங்கள், தென்னை மரங்கள் நாசமாயின. அரியாத்தூர் கிராமத்தில் ராதிகா, தனலட்சுமி, தருமன் ஆகியோரின் வீடுகள் சேதமடைந்தன. இதேபோல் கரைப்பூண்டியில் பாபு, கரிக்காத்தூரில் மின்னல் கொடி, புத்திராம்பத்தில் பஞ்சமூர்த்தி, பொத்தரையில் கங்கா, துரிஞ்சிகுப்பத்தில் தருமன், புதுப்பாளையத்தில் முருகய்யன், பெரியகரம் ரவிச்சந்திரன் ஆகியோரின் வீடுகளும், படவேடு கிராமத்தில் செல்வகுமார், வெங்கடேசன், கோமதி ஆகிய மூன்று பேரின் வீடுகள் என 13 வீடுகள் சேதமடைந்தன.
நேற்று முன்தினம் இரவு போளூர் சுயம்பு லட்சுமி நரசிம்மசாமி மலைக்கோவில் பகுதியில் ராட்சத பாறை ஒன்று திடீரென பயங்கர சத்தத்துடன் உருண்டு வந்தது. அப்போது அங்கிருந்த பெரிய மரத்தின்மீது பாறை மோதி நின்றுவிட்டது. மலை அடிவாரத்தில் பல வீடுகள் உள்ளன. பாறை மரத்தின்மீது மோதி நின்றதால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது.
செய்யாறு தாலுகாவில் பாராசூர், நாவல்பாக்கம், மாளிகைபட்டு, புளியரம்பாக்கம், ஏனாதவாடி, அருகாவூர் பெருங்கட்டூர், ராமகிருஷ்ணாபுரம் வெம்பாக்கம் தாலுகாவில் வடஇலுப்பை, புகை சமுத்திரம், நாட்டேரி, பிரம்மதேசம், வெங்களத்தூர், கீழ்நெல்லி, சித்தாத்தூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொடர் மழையின் காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. மேலும் அறுவடை செய்யப்பட்ட நெல் களங்களில் நனைந்து சேதமடைந்துள்ளன.
வந்தவாசியை அடுத்த வங்காரம், கீழ்வெள்ளியூர், கண்டவராட்டி, சாத்தப்பூண்டி ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலையை அடுத்த சேரியந்தல், அய்யப்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அங்கன்வாடி கட்டிடங்களில் மழை நீர் புகுந்தது. திருவண்ணாமலை தாலுகாவில் 2 மாடுகள் உயிரிழந்து உள்ளது. மேலும் ஒரு குடிசை வீடும் சேதமடைந்து உள்ளது. புயல் எச்சரிக்கையையொட்டி மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட நிவாரண முகாம்களில் ஆயிரகணக்கானோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு முகாம்களிலேயே உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக சேத்துப்பட்டில் 130.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கீழ்பென்னாத்தூர்- 119.2, வந்தவாசி- 112.2, வெம்பாக்கம்- 109.5, கலசபாக்கம்- 99, ஜமுனாமரத்தூர்- 92.1, போளூர்- 88.5, ஆரணி- 84.2, திருவண்ணாமலை- 69.2, செய்யாறு- 65, தண்டராம்பட்டு- 62.4, செங்கம்- 28.4.
நிவர் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. மழைகாரணமாக வந்தவாசி அடுத்துள்ளது பாதிரி ஏரி நிரம்பி உள்ளது. இந்த ஏரிக்கு அருகில் சவுரிபாளையம் என்ற இடத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். பாதிரி ஏரி நிரம்பி வெளியேறும் தண்ணீர் செல்லும் கால்வாய் பகுதி தூர்ந்துபோய் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனால் குடிசை வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன. இதன்காரணமாக குடிசை வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி இருக்கிறார்கள்.
புயல் மழைக்காரணமாக குடிசை மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தப்பகுதி மக்களை யாரும் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே, குடிசைகளை சூழ்ந்துள்ள நீரை அப்புறப்படுத்த வேண்டும், அரசு தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை வார்டுக்கு செல்லும் வழியில் உள்ள 40 ஆண்டு பழமையான மரம் சாய்ந்து விழுந்தது. அதேபோன்று மேல்மருவத்தூர் சாலை, புலிவாய், தெய்யார், வல்லம், கிருஷ்ணாபுரம், கூத்தம்பட்டு, தாலுகா அலுவலகம், வங்காரம், சத்யா நகர், நம்பேடு, நடுக்குப்பம் ஆகியபகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. மேல்மருவத்தூர் சாலையில் மின்கம்பத்தின் மீது மரம் விழுந்ததால் மின்சாரம் பாதிக்கப்பட்டது. தகவலறிந்த நகராட்சி, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை, காவல்துறையினர் ஒருங்கிணைந்து, மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஆரணியை அடுத்த மாமண்டூர் காலனி பகுதியை சேர்ந்த பாக்கியநாதன் என்பவருடைய வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்தது. வீட்டில் இருந்த பாக்கியநாதன் அவருடைய மனைவி, இரண்டு குழந்தைகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் சென்று மரத்தை அகற்றினர்.
மேலும் தகவல் அறிந்ததும் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பி.ஜெயராமன், தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் சென்று நிவாரண பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கினர். அமைச்சர் தனது சொந்த பணத்தில் இருந்து நிதி உதவி வழங்கினார். அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பி.ஆர்.ஜி.சேகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மாமண்டூர் பி.சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.
நிவர் புயல் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. போளூரில் 88 மி.மீ மழை பதிவாகி இருந்தது. இந்த மழைகாரணமாக மாம்பட்டு, வசூர் கிராமங்களில் வாழைமரங்கள், தென்னை மரங்கள் நாசமாயின. அரியாத்தூர் கிராமத்தில் ராதிகா, தனலட்சுமி, தருமன் ஆகியோரின் வீடுகள் சேதமடைந்தன. இதேபோல் கரைப்பூண்டியில் பாபு, கரிக்காத்தூரில் மின்னல் கொடி, புத்திராம்பத்தில் பஞ்சமூர்த்தி, பொத்தரையில் கங்கா, துரிஞ்சிகுப்பத்தில் தருமன், புதுப்பாளையத்தில் முருகய்யன், பெரியகரம் ரவிச்சந்திரன் ஆகியோரின் வீடுகளும், படவேடு கிராமத்தில் செல்வகுமார், வெங்கடேசன், கோமதி ஆகிய மூன்று பேரின் வீடுகள் என 13 வீடுகள் சேதமடைந்தன.
நேற்று முன்தினம் இரவு போளூர் சுயம்பு லட்சுமி நரசிம்மசாமி மலைக்கோவில் பகுதியில் ராட்சத பாறை ஒன்று திடீரென பயங்கர சத்தத்துடன் உருண்டு வந்தது. அப்போது அங்கிருந்த பெரிய மரத்தின்மீது பாறை மோதி நின்றுவிட்டது. மலை அடிவாரத்தில் பல வீடுகள் உள்ளன. பாறை மரத்தின்மீது மோதி நின்றதால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது.
செய்யாறு தாலுகாவில் பாராசூர், நாவல்பாக்கம், மாளிகைபட்டு, புளியரம்பாக்கம், ஏனாதவாடி, அருகாவூர் பெருங்கட்டூர், ராமகிருஷ்ணாபுரம் வெம்பாக்கம் தாலுகாவில் வடஇலுப்பை, புகை சமுத்திரம், நாட்டேரி, பிரம்மதேசம், வெங்களத்தூர், கீழ்நெல்லி, சித்தாத்தூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொடர் மழையின் காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. மேலும் அறுவடை செய்யப்பட்ட நெல் களங்களில் நனைந்து சேதமடைந்துள்ளன.
வந்தவாசியை அடுத்த வங்காரம், கீழ்வெள்ளியூர், கண்டவராட்டி, சாத்தப்பூண்டி ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலையை அடுத்த சேரியந்தல், அய்யப்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அங்கன்வாடி கட்டிடங்களில் மழை நீர் புகுந்தது. திருவண்ணாமலை தாலுகாவில் 2 மாடுகள் உயிரிழந்து உள்ளது. மேலும் ஒரு குடிசை வீடும் சேதமடைந்து உள்ளது. புயல் எச்சரிக்கையையொட்டி மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட நிவாரண முகாம்களில் ஆயிரகணக்கானோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு முகாம்களிலேயே உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக சேத்துப்பட்டில் 130.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கீழ்பென்னாத்தூர்- 119.2, வந்தவாசி- 112.2, வெம்பாக்கம்- 109.5, கலசபாக்கம்- 99, ஜமுனாமரத்தூர்- 92.1, போளூர்- 88.5, ஆரணி- 84.2, திருவண்ணாமலை- 69.2, செய்யாறு- 65, தண்டராம்பட்டு- 62.4, செங்கம்- 28.4.
செண்பகத்தோப்பு அணையில் இருந்து உபரி நீரை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
கண்ணமங்கலம்:
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே படவேடு பகுதியில் செண்பகத்தோப்பு அணை உள்ளது. இதன் கொள்ளளவு 62 அடி உயரமாகும். இந்த அணை கட்டும் பணி 2007-ம் ஆண்டு நிறைவு பெற்றது. ஆனால் ஷட்டர்கள் இயங்காததால் தண்ணீர் சேமிக்க முடியாமல் போனது. இதனால் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஷட்டர் சீரமைக்க ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து ஷட்டர்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்றது.
இந்த நிலையில் நிவர் புயல் மழை காரணமாக நேற்று அணையில் 55 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது.
இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி நேற்று அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் உபரிநீரை திறந்து வைத்தார். அப்போது கலெக்டர் சந்தீப் நந்தூரி, பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., ஆவின் துணைத்தலைவர் பாரி பாபு, படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
உபரி நீர் திறந்து விடப்பட்டதால் கமண்டல நதி, நாகநதி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வருவாய்த்துறை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அணைக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி 7 ஷட்டர்கள் வழியாக 6 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே படவேடு பகுதியில் செண்பகத்தோப்பு அணை உள்ளது. இதன் கொள்ளளவு 62 அடி உயரமாகும். இந்த அணை கட்டும் பணி 2007-ம் ஆண்டு நிறைவு பெற்றது. ஆனால் ஷட்டர்கள் இயங்காததால் தண்ணீர் சேமிக்க முடியாமல் போனது. இதனால் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஷட்டர் சீரமைக்க ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து ஷட்டர்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்றது.
இந்த நிலையில் நிவர் புயல் மழை காரணமாக நேற்று அணையில் 55 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது.
இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி நேற்று அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் உபரிநீரை திறந்து வைத்தார். அப்போது கலெக்டர் சந்தீப் நந்தூரி, பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., ஆவின் துணைத்தலைவர் பாரி பாபு, படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
உபரி நீர் திறந்து விடப்பட்டதால் கமண்டல நதி, நாகநதி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வருவாய்த்துறை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அணைக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி 7 ஷட்டர்கள் வழியாக 6 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘நிவர்’ புயலால் தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சென்னைக்கு செல்லும் பஸ்கள் அடியோடு நிறுத்தப்பட்டன.
திருவண்ணாமலை:
‘நிவர்’ புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் இருந்து மழை விட்டு, விட்டு பெய்தது. இதையடுத்து காலை சுமார் 10 மணியிலிருந்து விடாமல் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. அத்தியாவசிய பணிக்கு வெளியில் செல்பவர்கள் குடைபிடித்தபடியே செல்கின்றனர். இந்த தொடர் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. மேலும் புயல் எச்சரிக்கை காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது.
புயல் முன்னெச்சரிக்கையால் பாதிப்புகளை தடுக்கும் பணியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பேரில் அனைத்து துறை அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் ஊராட்சி ஒன்றியங்களில் மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் எந்திரங்கள், பொக்லைன் எந்திரங்கள் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. தீயணைப்பு துறையில் பேரிடர் தடுப்பு பணிக்கு தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து நேற்றும் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. மேலும் சென்னைக்கு செல்லும் பஸ்களும் அடியோடு நிறுத்தப்பட்டன. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
செங்கம் பகுதியில் நிவர் புயலின் காரணமாக சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. நேற்று பகல் பொழுதில் செங்கம் நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் சாரல் மழை ஆங்காங்கே செய்து கொண்டிருந்தது. மேலும் நிவர் புயல் காரணமாக செங்கம் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. அதேபோல் நேற்று செங்கம் உழவர் சந்தையில் பொதுமக்கள் புயல் எச்சரிக்கை காரணமாக தங்களுக்கு தேவையான காய்கறிகளை முன்கூட்டியே வாங்கி சென்றனர். செங்கம் பேருந்து நிலையம் மற்றும் பேருந்துகளில் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து வேலூர் டி.ஐ.ஜி. நேரில் பார்வையிட்டு ஆய்வு பணி மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை :
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. வழக்கமாக 7-ம் நாள் விழாவின்போது மாடவீதியில் தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 7-நாளான இன்று (வியாழக்கிழமை) தேரோட்டத்திற்கு பதிலாக பஞ்ச மூர்த்திகள் உலா கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது.
மேலும் வருகிற 29-ம் தேதி அதிகாலையில் கோவிலில் சாமி சன்னதி முன்பு பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. நிகழ்ச்சிகளை முன்னிட்டு கோவில் வளாகத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் போலீசார் நேரில் பார்வையிட்டு ஆய்வு பணி மேற்கொண்டனர். மேலும் கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து கோவில் அலுவலர்கள் உடனும் போலீசார் ஆலோசனை நடத்தினர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவின் 6-ம் நாளில் 63 நாயன்மார்கள் வீதி உலா ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கோவிலில் நாயன்மார்களுக்கு பூஜைகள் நடந்தன. கொட்டும் மழையிலும் விநாயகர், சந்திரசேகரர் உலா நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் உலாவும் நடக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் கோவிலில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், அருணாசலேஸ்வரர் சமேத உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 5-ம் பிரகாரத்தில் உலா வந்தனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக உற்சவ நிகழ்ச்சி நடைபெறும் போது பக்தர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் சாமி தரிசனம் செய்ய வரும் குறிப்பிட்ட நபர்களை அனுமதித்து உள்ளனர். 3-ம் பிரகாரத்தில் இருந்து பஞ்சமூர்த்திகள் 5-ம் பிகாரத்திற்கு செல்லும் போது சாமியுடனே அவர்களும் செல்ல முயன்றனர்.
மேலும் 5-ம் பிரகாரத்தில் நடைபெற்ற சாமி புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் கோவிலின் ராஜகோபுரத்தின் முன்பு திரண்டு இருந்தனர். ராஜகோபுரத்தின் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு இருந்தால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
தொடர்ந்து 6-ம் நாள் விழா நேற்று நடைபெற்றது. வழக்கமாக 6-ம் நாள் விழாவின்போது காலையில் 63 நாயன்மார்கள் உலா நடைபெறும். இந்த ஆண்டு 63 நாயன்மார்கள் விழா நடைபெறவில்லை. ஆனால் கோவிலில் உள்ள நாயன்மார்கள் உற்சவத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மேலும் திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் உற்சவத்திற்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து 5-ம் பிரகாரத்தில் கொட்டும் மழையில் நால்வருடன் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா நடைபெற்றது.
நேற்று திருவண்ணாமலையில் மழை பெய்தது. சாமியின் உற்சவ உலா மழையில் நனைந்தபடி நடைபெற்றது.
தொடர்ந்து இரவு 9 மணியளவில் பஞ்சமூர்த்தி உலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) ஆகம விதிகளின் படி கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற உள்ளது. தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வருகிற 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஏற்றப்படுகிறது. மகா தீபம் ஏற்றுவதற்கு தீப கொப்பறை தயார் செய்யப்பட்டு நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவிலில் ஒப்படைக்கப்பட்டது.
கீழ்பென்னாத்தூரில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை தொப்புள்கொடி கூட அறுக்கப்படாமல் புதரில் பிணமாக யாரோ வீசிச்சென்றுள்ளனர். அதனை நாய் ஒன்று கவ்விச்சென்ற சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் குளக்கரை மேடு அருகில் செயல்படாத உழவர் சந்தை உள்ளது. இதன் எதிர்ப்புறம் உள்ள குடியிருப்புகளின் பின்புறம் செடி கொடிகளுடன் மண்டிக்கிடந்த புதரில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பிறந்த ஆண் குழந்தையை தொப்புள் கொடியுடன் யாரோ வீசிவிட்டுச் சென்றுள்ளனர். அந்த குழந்தை பிணமாக கிடந்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை அந்த குழந்தையின் உடலை நாய் ஒன்று புதரிலிருந்து கவ்விச்சென்று குழந்தையின் காலை கொடூரமாக கடித்து துண்டித்ததை பார்த்தவர்களின் நெஞ்சு பதைபதைத்தது. அவர்கள் நாயை விரட்டிவிட்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
குழந்தையை வீசிச் சென்றவர்கள் யார்? என்பது தெரியவில்லை. கள்ளக்காதலால் குழந்தை பிறந்ததால் அதனை பெற்ற பெண் வீசினாரா? அல்லது வளர்க்க முடியாமல் வீசினாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் கீழ்பென்னாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தை திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) சந்தோஷ் பாண்டியன் ஆகியோரும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
போளூர் அருகே சுவர் இடிந்து விழுந்த விபத்தில் தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:
போளூரை அடுத்த அரும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் குள்ளம்மாள். சமீபத்தில் பெய்த மழையால் இவரது வீடு வலுவிழந்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காளி (வயது 60) என்ற கூலித்தொழிலாளி குள்ளம்மாள் வீட்டை ஒட்டி நின்று கொண்டு இருந்தார். அப்போது குள்ளமாள் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் காளி சிக்கி படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அக்கம் பக்கம் இருந்தவர்கள் விரைந்து சென்று காளியை இடிபாடுகளிலிருந்து மீட்டு கொம்மனந்தல் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்தபின் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜுவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து போளூர் சப்இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
போளூரை அடுத்த அரும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் குள்ளம்மாள். சமீபத்தில் பெய்த மழையால் இவரது வீடு வலுவிழந்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காளி (வயது 60) என்ற கூலித்தொழிலாளி குள்ளம்மாள் வீட்டை ஒட்டி நின்று கொண்டு இருந்தார். அப்போது குள்ளமாள் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் காளி சிக்கி படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அக்கம் பக்கம் இருந்தவர்கள் விரைந்து சென்று காளியை இடிபாடுகளிலிருந்து மீட்டு கொம்மனந்தல் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்தபின் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜுவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து போளூர் சப்இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
களம்பூர் அருகே மொபட்டில் சென்ற பள்ளி மாணவன் சாலையோர பனைமரத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
வேலூர் தொரப்பாடியை அடுத்த மேட்டுப்பகுதியைச் சேர்ந்தவர் பலராமன். இவரின் மகன் தினேஷ் (வயது 17). இவர், பிளஸ்-1 படித்து வந்தார். இவரும், அண்ணன் கணேசும் களம்பூரை அடுத்த அரியாத்தூர் கிராமத்தில் உள்ள பாட்டி சிவகாமிஅம்மாளை பார்ப்பதற்காக வந்தனர்.
அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவரும், நண்பருமான விக்னேஷ் என்ற விக்கி என்பவருடன் தினேஷ் சேர்ந்து ஒரு மொபட்டில் நேற்று மாலை அரியாத்தூரில் இருந்து புறப்பட்டு கூடலூர் கூட்ரோடை நோக்கி வந்து கொண்டிருந்தனர். கூடலூர் கூட்ரோட்டுக்கு முன்னாலேயே கட்டுப்பாட்டை இழந்து ஓடிய மொபட் சாலையோரம் இருந்த ஒரு பனைமரத்தில் மோதி இருவரும் கீழே விழுந்தனர். மொபட்டை ஓட்டிய தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த விக்கி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம், அவரின் வீட்டுக்கு சென்று தினேசின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வேலூர் தொரப்பாடியை அடுத்த மேட்டுப்பகுதியைச் சேர்ந்தவர் பலராமன். இவரின் மகன் தினேஷ் (வயது 17). இவர், பிளஸ்-1 படித்து வந்தார். இவரும், அண்ணன் கணேசும் களம்பூரை அடுத்த அரியாத்தூர் கிராமத்தில் உள்ள பாட்டி சிவகாமிஅம்மாளை பார்ப்பதற்காக வந்தனர்.
அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவரும், நண்பருமான விக்னேஷ் என்ற விக்கி என்பவருடன் தினேஷ் சேர்ந்து ஒரு மொபட்டில் நேற்று மாலை அரியாத்தூரில் இருந்து புறப்பட்டு கூடலூர் கூட்ரோடை நோக்கி வந்து கொண்டிருந்தனர். கூடலூர் கூட்ரோட்டுக்கு முன்னாலேயே கட்டுப்பாட்டை இழந்து ஓடிய மொபட் சாலையோரம் இருந்த ஒரு பனைமரத்தில் மோதி இருவரும் கீழே விழுந்தனர். மொபட்டை ஓட்டிய தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த விக்கி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம், அவரின் வீட்டுக்கு சென்று தினேசின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவிழாவின் 4-ம் நாளை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மங்கல வாத்தியங்களுடன் 5-ம் பிரகாரத்தில் உலா வந்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று 4-ம் நாள் விழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க விநாயகரும், சந்திரசேகரரும் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் வலம் வந்து அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு எழுந்தருளினர்.
பின்னர் அங்கிருந்து 5-ம் பிரகாரத்திற்கு கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் இருந்த வாகனங்களில் விநாயகரும், சந்திருசேகரரும் எழுந்தருளினர். அப்போது சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கோவில் 5-ம் பிரகாரத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவ உலா நடைபெற்றது.
பின்னர் இரவு சுமார் 9 மணியளவில் கோவில் வளாகத்தில் பஞ்சமூர்த்திகள் உற்சவ உலா நடைபெற்றது. கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவையொட்டி வருகிற 27-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு வெளியூர் நபர்கள் தங்குவதற்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை :
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. சிகர நிகழ்ச்சியாக வருகிற 29-ந் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) 2 ஆயிரத்து 668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை நகரத்தில் உள்ள திருமண மண்டப உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலகத்தில் உதவி கலெக்டர் ஸ்ரீதேவி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் திருமண மண்டபம், மடத்தின் உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் கொரோனா தொற்று பரவல் இல்லாமல் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுவதற்கு ஏதுவாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
29-ந் தேதி நடைபெற உள்ள தீபத் திருநாளையொட்டி 27-ந் தேதியில் இருந்து 3 நாட்களுக்கு எந்தவித நிகழ்ச்சிகளும், வெளியூர் நபர்கள் தங்குவதற்கு அனுமதியும் அளிக்கக் கூடாது. அடுத்து 4 நாட்கள் தங்குவதற்கு பதிவு செய்தவர்கள் குறித்த விவரங்களை போலீசாருக்கும், வருவாய் துறைக்கும் அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை சுபமுகூர்த்தம் இருப்பதால் அன்று மாலை வரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்க அனுமதிக்க வேண்டும் என்று திருமண மண்டப உரிமையாளர்கள் கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து திருமண மண்டபம், மடம் மற்றும் தங்கும் விடுதியில் வருகிற 27-ந் தேதியன்று காலை வரை நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ளவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அன்று இரவு 12 மணி வரை தங்கிக் கொள்ள அனுமதித்தும், இரவு 12 மணிக்கு மேல் வெளியூர் நபர்கள் அனைவரும் மடம், திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் 28-ந் தேதி மற்றும் 29-ந் தேதி ஆகிய 2 நாட்கள் எவ்வித நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என்றும், அன்னதானத்திற்காக உணவு சமைக்கவும், வழங்கவும், உணவு பொருட்கள் வெளியிலிருந்து பெற தடை விதித்தும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.






