என் மலர்
திருவண்ணாமலை
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 2,668 அடி உயர மலை உச்சியில் கார்த்திகை மாகாதீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று மாலை 6 மணிக்கு நகரின் மையப் பகுதியில் உள்ள மலை உச்சியில் கார்த்திகை மாகாதீபம் ஏற்றப்பட்டது.
கொரோனா காரணமாக முதல் முறையாக பக்தர்கள் இன்றி தி. மலையில் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டுள்ளது. 1,500 கிலோ நெய் மற்றும் 1,000 மீட்டர் காடா துணியை பயன்படுத்தி மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக இன்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதனால் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக நேற்றில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவில் முழுவதும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
கோவிலை சுற்றி பேரிகார்டுகள் மூலம் போலீசார் தடுப்பு அமைத்து உள்ளனர். மேலும் கோவில் சுற்றி மட்டுமே ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று கோவிலில் பக்தர்கள் நடமாட்டம் உள்ள அனைத்து பகுதிகளிலும் மோப்ப நாய் மூலம் சோதனை செய்யப்பட்டது. மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை செய்யப்பட்டது.
திருண்ணாமலை நகர பகுதியில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும், நாளையும் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் மூலம் தடை விதிக்கப்பட்டு உள்ளதால் நேற்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றனர்.
காளசமுத்திரம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் நிவர் புயலுக்கு முன் 20 அடி தண்ணீர் மட்டுமே இருந்தது. தற்போது ஒரே நாளில் 40 அடி உயர்ந்து 60 அடி தண்ணீர் உள்ளது.
கண்ணமங்கலம்:
நிவர் புயலால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கண்ணமங்கலம் அருகே கொளத்தூர் கிராமத்தில் உள்ள நல்ல தண்ணீர் குளத்தில் பல ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் தேங்கியுள்ளது.
மேலும் காளசமுத்திரம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் நிவர் புயலுக்கு முன் 20 அடி தண்ணீர் மட்டுமே இருந்தது. தற்போது ஒரே நாளில் 40 அடி உயர்ந்து 60 அடி தண்ணீர் உள்ளது. இதேபோல் கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குளங்களும் நிரம்பி உள்ளன.
செங்கம் பகுதியில் உள்ள ஏரி மற்றும் நீர் நிலைகள் பெரும்பாலும் நிரம்பி உள்ளது. குப்பநத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் செங்கம் அருகே உள்ள தீத்தாண்டப்பட்டு, காயம்பட்டு மற்றும் தோக்கவாடி ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நிவர் புயல் காரணமாக குப்பநத்தம், புதுப்பாளையம், அரட்டவாடி, கரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான வாழை பயிர்கள், நெற்பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிவர் புயலால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கண்ணமங்கலம் அருகே கொளத்தூர் கிராமத்தில் உள்ள நல்ல தண்ணீர் குளத்தில் பல ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் தேங்கியுள்ளது.
மேலும் காளசமுத்திரம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் நிவர் புயலுக்கு முன் 20 அடி தண்ணீர் மட்டுமே இருந்தது. தற்போது ஒரே நாளில் 40 அடி உயர்ந்து 60 அடி தண்ணீர் உள்ளது. இதேபோல் கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குளங்களும் நிரம்பி உள்ளன.
செங்கம் பகுதியில் உள்ள ஏரி மற்றும் நீர் நிலைகள் பெரும்பாலும் நிரம்பி உள்ளது. குப்பநத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் செங்கம் அருகே உள்ள தீத்தாண்டப்பட்டு, காயம்பட்டு மற்றும் தோக்கவாடி ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நிவர் புயல் காரணமாக குப்பநத்தம், புதுப்பாளையம், அரட்டவாடி, கரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான வாழை பயிர்கள், நெற்பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர் பக்தர்கள் வருவதை தடுக்க போலீசார் மூலம் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலி்ல் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மகா தீபம் இன்று ஏற்றப்படுகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவிலில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
தொடர்ந்து இன்றும், நாளையும் (திங்கட்கிழமை) பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வழக்கமாக மகா தீபத்தின் போது கிரிவலம் செல்லவதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள். இந்த ஆண்டு வெளியூர் பக்தர்கள் நேற்று முதல் நாளை வரை என 3 நாட்கள் திருவண்ணாமலை நகருக்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் வெளியூரில் இருந்து வரும் பக்தர்களை தடுக்கும் வகையில் போலீஸ் தரப்பில் திருவண்ணாமலை மாவட்ட எல்லை மற்றும் திருவண்ணாமலை நகர எல்லை சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது போலீசார் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வருபவர்களிடம் உள்ளூர் மக்கள் தானா என்று விவரங்கள் கேட்டறிந்தும், அவர்களிடம் வீட்டு முகவரியை குறித்து கொண்டும் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் இரவு, பகலாக சோதனையில் ஈடுபட்டனர்.
வாணாபுரம் அருகே உள்ள வாழவச்சனூர் தென்பெண்ணை ஆற்றின் அருகே சோதனைச்சாவடி உள்ளது. இதில் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாகன தணிக்கையில் வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து வருகிறார்களா? என்றும் கண்காணித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலி்ல் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மகா தீபம் இன்று ஏற்றப்படுகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவிலில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
தொடர்ந்து இன்றும், நாளையும் (திங்கட்கிழமை) பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வழக்கமாக மகா தீபத்தின் போது கிரிவலம் செல்லவதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள். இந்த ஆண்டு வெளியூர் பக்தர்கள் நேற்று முதல் நாளை வரை என 3 நாட்கள் திருவண்ணாமலை நகருக்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் வெளியூரில் இருந்து வரும் பக்தர்களை தடுக்கும் வகையில் போலீஸ் தரப்பில் திருவண்ணாமலை மாவட்ட எல்லை மற்றும் திருவண்ணாமலை நகர எல்லை சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது போலீசார் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வருபவர்களிடம் உள்ளூர் மக்கள் தானா என்று விவரங்கள் கேட்டறிந்தும், அவர்களிடம் வீட்டு முகவரியை குறித்து கொண்டும் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் இரவு, பகலாக சோதனையில் ஈடுபட்டனர்.
வாணாபுரம் அருகே உள்ள வாழவச்சனூர் தென்பெண்ணை ஆற்றின் அருகே சோதனைச்சாவடி உள்ளது. இதில் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாகன தணிக்கையில் வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து வருகிறார்களா? என்றும் கண்காணித்து வருகின்றனர்.
தேவிகாபுரத்தில் ஆசிரியர் வீட்டில் 61 பவுன் நகைகள் திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு அருகே தேவிகாபுரம் மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 45), இவர் மதுரை பெரும்பட்டூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நிர்மலா மூங்கில்தாங்கல் அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி அப்பேடு கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு செல்வதற்கு நிர்மலா பீரோவில் வைத்திருந்த நகைகளை எடுக்க திறந்தார். ஆனால் பீரோவில் 61 பவுன் நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் நகைகள் மாயமானது குறித்து அவர் கணவர் ஏழுமலையிடம் கூறினார்.
இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசில் ஏழுமலை புகார் செய்தார். அதைத்தொடர்ந்து போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பூட்டி வைக்கப்பட்டிருந்த பீரோவில் இருந்த நகைகள் மாயமானதால் ஏழுமலை, நிர்மலா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர்கள் யாராவது பீரோவை திறந்து நகைகளை திருடி சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை தீபத்திருவிழாவின் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்ற்பட்டது.
திருவண்ணாமலை :
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இக்கோவிலுக்கு பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையை பக்தர்கள் அண்ணாமலை என்று பெயர் சூட்டி சிவனாக வணங்கி வருகின்றனர். பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்வார்கள்.
கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று மாலை 6 மணிக்கு மலையுச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவின் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக அதிகாலையிலேயே கோவில் நடைதிறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது.
ஆரணி ஆற்றில் பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தில் பெண் பிணம் அடித்து வரப்பட்டு அழுகிய நிலையில் கிடந்த உடலை போலீசார் மீட்டு அவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
ஆரணி:
தமிழகத்தையே உலுக்கி வந்த ‘நிவர்’ புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக ஆரணி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் கன மழை பெய்தது. மேலும் செண்பகத்தோப்பு அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது, அமிர்தி வன உயிரியல் பூங்கா பகுதியில் இருந்து காட்டாற்று வெள்ளம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக ஆரணி கமண்டல நதி ஆற்றில் அதிகப்படியான உபரி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை சேவூர் ஊராட்சிக்குட்பட்ட சாணார்பாளையம் ஆற்றுப்பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை.
இது தொடர்பாக சமீபத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும் ஆற்றுப்பகுதியில் ஆற்றங்கரை அருகே புதைக்கப்பட்ட பிணங்கள் ஏதேனும் ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதா, காணாமல் போனவர்கள் அடித்துச் செல்லப்பட்டார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்
தகவல் அறிந்த ஆரணி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பி.ஜெயராமன், ஆரணி தாசில்தார் செந்தில்குமார், ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார், வருவாய்த் துறையினர் பிணம் மீட்கப்பட்ட இடத்தை பார்வையிட்டனர்.
பிரேத பரிசோதனை செய்வதற்கு தகுதியான நிலையில் உடல் இல்லை என்பதனை அறிந்து அழுகிய நிலையில் உள்ள உடலை புகைப்படம் எடுத்துக்கொண்டு அந்த இடத்திலேயே மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கண்ணமங்கலம் அருகே சீரமைப்பு பணியின்போது மின்கம்பம் சாய்ந்து ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள ராமச்சந்திரபுரம் கொல்லமேட்டை சேர்ந்த சங்கர் மகன் ஹேமச்சந்திரன் என்ற நவீன் (வயது 20). இவர் மின் வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலைசெய்து வந்தார். நேற்று மாலை கண்ணமங்கலம்- ரெட்டிபாளையம் சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகே சாய்ந்து கிடந்த மின் கம்பத்தை ஹேமசந்திரன் சரி செய்யும்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்கம்பம் சாய்ந்து அவர் மீது விழுந்தது. அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர் பரிசோதித்தபோது ஹேமசந்திரன் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம் அருகே மின் கம்பத்தில் மோதி வேன் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலத்தை அடுத்த அழகுசேனை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பு (வயது 55). அதே ஊரைச் சேர்ந்த சிவகாமி (55), காவியா (13), ராணி (54), மல்லிகா (55), மகேஸ்வரி (55), உமா (36) ஆகியோர் சம்பவத்தன்று போளூர் ரெண்டேரிப்பட்டில் நடந்த உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வேனில் சென்றனர். பின்னர் இரவு சுமார் 9.30 மணி அளவில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
முனியந்தாங்கல் ஏரிக்கரை அருகே வந்தபோது சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி அருகே இருந்த பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் 7 பேரும் காயமடைந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து சுப்பு சந்தவாசல் போலீசில் புகார் செய்ததன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் பக்தர்கள் மலையேறவும், கிரிவலம் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை :
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இக்கோவிலுக்கு பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையை பக்தர்கள் அண்ணாமலை என்று பெயர் சூட்டி சிவனாக வணங்கி வருகின்றனர். பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்வார்கள்.
கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியளவில் 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதனை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடைதிறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற உள்ளது. தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படும்.
இதையடுத்து பிரம்ம தீர்த்தத்தில் சுப்பிரமணியர் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாலையில் பஞ்சமூர்த்திகள், சாமி சன்னதி முன்பாக எழுந்தருள்வார்கள். அதைத்தொடர்ந்து 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.
அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணியளவில் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும். அதேநேரத்தில் மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாளை முழுவதும் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது.
மேலும் இன்று முதல் மகா தீபம் காண திருவண்ணாமலை நகருக்கு வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண பக்தர்கள் மலையேறவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கார்த்திகை மாதத்துக்கான பவுர்ணமி நாளை மதியம் 1.17 மணிக்கு தொடங்கி மறுநாள் (30-ந் தேதி) மதியம் 2.23 மணிக்கு நிறைவு பெறுகிறது. கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் அமலில் உள்ளதால் நாளையும், நாளை மறுநாளும் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து 30-ந் தேதி (நாளை மறுநாள்) சந்திரசேகரர் தெப்பல் உற்சவம், 1-ந் தேதி பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம், 2-ந் தேதி சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது. வழக்கமாக தெப்பல் உற்சவ நிகழ்ச்சிகள் அய்யங்குளத்தில் நடைபெறும். இந்த ஆண்டு தெப்பல் உற்சவம் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 3-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
வேட்டவலம் அருகே நிவர் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாய், போர்வை, உடைகள், அரிசி மற்றும் உணவு பொருட்கள், ரூ.5000 ஆகியவற்றை வழங்கி அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆறுதல் கூறினார்.
வேட்டவலம்:
வேட்டவலம் அருகே பிடாரன்கொட்டாய் பகுதியில் நிவர் புயல் மழையால் பெருமாள் என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது. அதேபோல் சுனைமேட்டுத்தெருவில் வசிக்கும் சுரேஷ் என்பவர் வீடும் மழையால் சேதமடைந்தது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நகர செயலாளர் கே.செல்வமணி ஏற்பாட்டில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், மாவட்ட ஆவின் தலைவருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி பாய், போர்வை, உடைகள், அரிசி மற்றும் உணவு பொருட்கள், ரூ.5000 ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறினார்.
இதையடுத்து வேட்டவலம் பேரூராட்சிக்கு உட்பட்ட நடுத்திட்டு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முகாமில் தங்கி உள்ளவர்களுக்கு பாய், போர்வை, பிரட், பிஸ்கட் போன்ற பொருட்களை வழங்கினார்.
இதில் முன்னாள் கவுன்சிலர் சோழன், இளைஞர் பாசறை செயலாளர் ரஜினி, இளைஞர் அணி செயலாளர் அரிவளவன் ஆகியோர் உடனிருந்தனர்.
வேட்டவலம் அருகே பிடாரன்கொட்டாய் பகுதியில் நிவர் புயல் மழையால் பெருமாள் என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது. அதேபோல் சுனைமேட்டுத்தெருவில் வசிக்கும் சுரேஷ் என்பவர் வீடும் மழையால் சேதமடைந்தது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நகர செயலாளர் கே.செல்வமணி ஏற்பாட்டில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், மாவட்ட ஆவின் தலைவருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி பாய், போர்வை, உடைகள், அரிசி மற்றும் உணவு பொருட்கள், ரூ.5000 ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறினார்.
இதையடுத்து வேட்டவலம் பேரூராட்சிக்கு உட்பட்ட நடுத்திட்டு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முகாமில் தங்கி உள்ளவர்களுக்கு பாய், போர்வை, பிரட், பிஸ்கட் போன்ற பொருட்களை வழங்கினார்.
இதில் முன்னாள் கவுன்சிலர் சோழன், இளைஞர் பாசறை செயலாளர் ரஜினி, இளைஞர் அணி செயலாளர் அரிவளவன் ஆகியோர் உடனிருந்தனர்.
போளூர் தாலுகா களம்பூர் அருகே பிளஸ்-2 மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆரணி:
போளூர் தாலுகா களம்பூர் பகுதியில் பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 15-ந் தேதி கடத்தி செல்லப்பட்டார். இது தொடர்பாக மாணவியின் தந்தை களம்பூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வம்பலூர் கிராமத்தை சேர்ந்த மெக்கானிக் கவியரசன் (வயது 26) என்பவர் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. கார் டிரைவர் பாபு, நாகராஜன் ஆகியோர் கடத்தலுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
கடத்தப்பட்ட மாணவி, அவரை கடத்திய கவியரசன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
போளூர் தாலுகா களம்பூர் பகுதியில் பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 15-ந் தேதி கடத்தி செல்லப்பட்டார். இது தொடர்பாக மாணவியின் தந்தை களம்பூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வம்பலூர் கிராமத்தை சேர்ந்த மெக்கானிக் கவியரசன் (வயது 26) என்பவர் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. கார் டிரைவர் பாபு, நாகராஜன் ஆகியோர் கடத்தலுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
கடத்தப்பட்ட மாணவி, அவரை கடத்திய கவியரசன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 7-ம் நாள் விழாவான அருணாசலேஸ்வரர், பஞ்சமூர்த்திகள் உலா நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று கோவிலில் 7-ம் நாள் விழா நடைபெற்றது. வழக்கமாக 7-ம் நாள் விழாவின் போது தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக கோவிலின் 5-ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் உலா நடந்தது.
முன்னதாக காலையில் திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், அருணாசலேஸ்வரர் சமேத உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பஞ்சமூர்த்திகள் கோவில் ராஜகோபுரத்தின் முன்பு வந்தனர்.
அதை தொடர்ந்து விநாயகர் மற்றும் முருகர் மர விமானங்களிலும், அருணாசலேஸ்வரர் சமேத உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் வெள்ளி விமானங்களிலும் எழுந்தருளினர். காலை சுமார் 7.50 மணியளவி்ல் மேளதாளங்கள் முழங்க 5-ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் உலா தொடங்கி 9 மணியளவில் நிறைவடைந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான வருகிற 29-ந் தேதி(நாளை மறுநாள்) அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவிலின் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.






