என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா: பாதுகாப்புப் பணிகள் குறித்து டி.ஐ.ஜி. ஆய்வு
Byமாலை மலர்26 Nov 2020 7:02 AM GMT (Updated: 26 Nov 2020 7:02 AM GMT)
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து வேலூர் டி.ஐ.ஜி. நேரில் பார்வையிட்டு ஆய்வு பணி மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை :
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. வழக்கமாக 7-ம் நாள் விழாவின்போது மாடவீதியில் தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 7-நாளான இன்று (வியாழக்கிழமை) தேரோட்டத்திற்கு பதிலாக பஞ்ச மூர்த்திகள் உலா கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது.
மேலும் வருகிற 29-ம் தேதி அதிகாலையில் கோவிலில் சாமி சன்னதி முன்பு பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. நிகழ்ச்சிகளை முன்னிட்டு கோவில் வளாகத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் போலீசார் நேரில் பார்வையிட்டு ஆய்வு பணி மேற்கொண்டனர். மேலும் கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து கோவில் அலுவலர்கள் உடனும் போலீசார் ஆலோசனை நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X