search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா 4-ம் நாளில் விநாயகர், சந்திரசேகரர் உலா
    X
    அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா 4-ம் நாளில் விநாயகர், சந்திரசேகரர் உலா

    அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா 4-ம் நாளில் விநாயகர், சந்திரசேகரர் உலா

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவிழாவின் 4-ம் நாளை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மங்கல வாத்தியங்களுடன் 5-ம் பிரகாரத்தில் உலா வந்தார்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று 4-ம் நாள் விழா நடைபெற்றது. 

    இதனை முன்னிட்டு கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க விநாயகரும், சந்திரசேகரரும் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் வலம் வந்து அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு எழுந்தருளினர். 

    பின்னர் அங்கிருந்து 5-ம் பிரகாரத்திற்கு கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் இருந்த வாகனங்களில் விநாயகரும், சந்திருசேகரரும் எழுந்தருளினர். அப்போது சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கோவில் 5-ம் பிரகாரத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவ உலா நடைபெற்றது. 

    பின்னர் இரவு சுமார் 9 மணியளவில் கோவில் வளாகத்தில் பஞ்சமூர்த்திகள் உற்சவ உலா நடைபெற்றது. கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×