என் மலர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த கஸ்தம்பாடியை சேர்ந்தவர் ராஜா (வயது 32) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கவுதமி (28) இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
ராஜா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாகவும், மது குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்த கவுதமியின் தாய் தனது மகள் கஷ்டப்படக்கூடாது என்று வெளிநாட்டில் வேலை பார்த்ததில் கிடைத்த ரூ.3 லட்சத்தை கவுதமிக்கு அனுப்பியுள்ளார்.
இதுபற்றி தெரியவந்ததும் ராஜா ரூ.3 லட்சத்தையும் தன்னிடமே தர வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். அதற்கு கவுதமி மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே நேற்றுமுன்தினம் தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் வெளியில் சென்ற கவுதமி வீடு திரும்பவில்லை. அவர் குடும்ப தகராறு காரணமாக மாயமாகி விட்டதாக கணவர் ராஜா தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று மாயமான கவுதமி கரும்புத் தோட்டத்தில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். எரிந்த நிலையில் கிடந்த கவுதமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது தொடர்பாக ராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மனைவியை ராஜா அடித்து கொலை செய்து கரும்பு தோட்டத்தில் வைத்து எரித்தது தெரியவந்தது.
ராஜா வாக்குமூலத்தில் மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதால் அவரை போலீசார் கைது செய்தனர்.
மனைவியை கணவரை கொலை செய்து நாடகமாடிய சம்பவம் கஸ்தம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
இந்த ஓவியத்தில் முருகர் மயில் மீது உத்குடிகாசனத்தில் அமர்ந்து சதுர்புஜத்துடன் காட்சி தர, அவரின் வலது பக்கம் வள்ளியும், இடப்பக்கம் தெய்வானையும் காட்சி தருகின்றனர்.
முருகர் தனது இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்டு, தொடைவரை ஆடை அணிந்து தனது வாகனமான மயிலின் மீது உத்குடிகாசனத்தில் அமர்ந்து "சிகிவாகனராக" நீள்வட்ட பிரபையினுள் காட்சி தருகிறார். கந்தபுராணம் கூறும் முருகனின் 16 கோலங்களில் ஒன்று "சிகிவாகனர்" என்பது குறிப்பிடதகுந்தது.
முருகரின் வலப்புறம் வள்ளியும், இடப்புறம் தெய்வானையும் சேதமுற்று இருப்பதால் தெளிவாகக் காணக்கிடைக்கவில்லை.
இடப்புறம் தெய்வானையின் அருகே சேடிப்பெண் ஒருவர் அக்காலத்திய உடை மற்றும் கொண்டை அணிந்து சாமரம் வீசும் காட்சி உள்ளது. அதற்கு மேல் இடப்புறம் உள்ள ஓவியம் முற்றிலும் சிதைந்துள்ளது.
அதே போல வலப்புறம் வள்ளியின் அருகே காட்டப்பெற்றுள்ள சாமரம் வீசும் சேடிப்பெண் மிகவும் சிதைந்து கால்கள் மட்டும் தெரிகிறது. அதற்கு மேல் வலப்புறமும் ஓவியம் சேதாரமாகி உள்ளது.இவ்ஓவியத்தில் சுண்ணாம்பு, கருப்பு மை மற்றும் உலோக வண்ணங்களான சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய ஐந்து வர்ணங்களையும் சேர்த்து பஞ்சவர்ண ஓவியமாகத் தீட்டியுள்ளனர்.
இங்குள்ள ஓவியத்தில் தீட்டப்பட்டுள்ள வண்ணம் மற்றும் காட்டப்பட்டுள்ள ஆபரணங்கள் யாவும் தஞ்சை பெரிய கோவிலின் நாயக்கர்கால ஓவியத்துடனும், ஆந்திர மாநிலம் லேபாஷி வீரபத்திரர் கோவில் ஓவியத்துடனும் ஒத்துப் போவதால் இதனை நாயக்கர்கால ஓவியமாகக் கருதலாம்.
திருவண்ணாமலை கோவிலின் ராஜகோபுர திருப்பணி மற்றும் மதில்களில் எல்லாம் தஞ்சை நாயக்க மன்னரான சேவப்ப நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டவையே ஆகும். எனவே இவ்ஓவியத்தை 16-ம் நூற்றாண்டின் கடை பகுதியான சேவப்ப நாயக்கர் காலத்தை ஓட்டியதாக இதனைக் கருதலாம்.
400 ஆண்டு பழமையான இவ்ஓவியத்தை சிதைவிலிருந்து மீட்டு தமிழக தொல்லியல் துறையும், இந்து சமய அறநிலையத்துறையும் முறையாக ஆவணம் செய்து இதனை புனரமைத்து இவ்ஓவியத்தைப் பாதுகாத்திட முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையொட்டி விநாயகர், உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் உற்சவ மூர்த்திகள் தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளி அருள்பாலித்தனர். பின்னர் வேதமந்திரம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது மங்கல இசை முழங்கப்பட்டது.
தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு வழிபாடுகள் செய்தனர். அதன் பின்னர் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் பிரகாரத்தில் வலம் வந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்டோர் மட்டும் கலந்து கொண்டனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
கொடியேற்றம் நடந்தபோது பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாததால் ஏமாற்றமடைந்தனர். சிறப்பு வழிபாடுகள் அனைத்தும் முடிவடைந்ததும் பக்தர்கள் மீண்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அய்யப்ப பக்தர்கள், செவ்வாடை பக்தர்கள் அதிக அளவில் தரிசனம் செய்தனர். பக்தர்கள் 20 ரூபாய் தரிசன கட்டணத்தில் அனுமதிக்கப்படவில்லை, ரூ.50 கட்டணத்தில் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் பொது தரிசனம் வழியாகவும் ஏராளமான பக்தர்கள் சென்று வழிபட்டனர்.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் 10,11,12-ம் வகுப்புகளில் படிக்கும் 15 முதல் 18 வயது வரையுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முதல் நாளில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் திருவண்ணாமலை முதலிடம் பிடித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 544 பள்ளிகள், 17 பாலிடெக்னிக், 22 ஐ.டி.ஐ.களில் 15 முதல் 18 வயது வரையுள்ளவர்கள் 1 லட்சத்து 13 ஆயிரத்து 800 பேர் உள்ளனர். இவர்களில் நேற்று ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து இலக்கில் 19 சதவீதம் கடந்த நிலையில் மாநில அளவில் திருவண்ணாமலை மாவட்டம் தடுப்பூசி செலுத்துவதில் முதலிடத்தை பிடித்துள்ளது.
விரைவில் 100 சதவீத இலக்கை அடைய மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






