search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் எ.வ.வேலு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய போது எடுத்த படம்.
    X
    அமைச்சர் எ.வ.வேலு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய போது எடுத்த படம்.

    7.76 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
    திருவண்ணாமலை:

    தமிழர் பண்டிகை என்று போற்றப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 லட்சத்து 76 ஆயிரத்து 391 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

    இதையொட்டி திருவண்ணாமலையை அடுத்த தச்சம்பட்டு கிராமத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 

    கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார்.துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி. சரவணன், எஸ். அம்பேத்குமார், ஓ.ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியைத் தொடங்கி வைத்து பேசியதாவது:-
     
    திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ 7 லட்சத்து 76 ஆயிரத்து 391 குடும்பங்களுக்கு 1,627 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. 

    இந்த பரிசு தொகுப்பு எல்லா குடும்பங்களுக்கும் சென்று சேர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த பணியை முறையாக கண்காணிக்க வேண்டும் என்றார்.
    Next Story
    ×