என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
7.76 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
Byமாலை மலர்5 Jan 2022 10:48 AM GMT (Updated: 5 Jan 2022 10:48 AM GMT)
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
திருவண்ணாமலை:
தமிழர் பண்டிகை என்று போற்றப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 லட்சத்து 76 ஆயிரத்து 391 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இதையொட்டி திருவண்ணாமலையை அடுத்த தச்சம்பட்டு கிராமத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார்.துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி. சரவணன், எஸ். அம்பேத்குமார், ஓ.ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியைத் தொடங்கி வைத்து பேசியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ 7 லட்சத்து 76 ஆயிரத்து 391 குடும்பங்களுக்கு 1,627 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
இந்த பரிசு தொகுப்பு எல்லா குடும்பங்களுக்கும் சென்று சேர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த பணியை முறையாக கண்காணிக்க வேண்டும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X