என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்ட காட்சி.
    X
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்ட காட்சி.

    திருவண்ணாமலை கோவிலில் உண்டியல் வசூல் ரூ.1.78 கோடி

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உண்டியல் வருமானமாக ரூ.1.78 கோடி வசூலானது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில். இக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.

    வெளிமாநில பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு பக்தர்களும் வருகை தருவார்கள்.

    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. 

    இதனால் ஒவ்வொரு மாதமும் மாதம் ரூ.1கோடிக்கு மேல் இருக்கும் உண்டியல் வசூல் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதியாக குறைந்தது. 

    கடந்த கார்த்திகை மாதம் பவுர்ணமி கிரிவலம் செல்ல 2 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கார்த்திகை மாத உண்டியல் வசூல்ரூ.1கோடியை தாண்டியது.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக வெளிமாநில அய்யப்ப பக்தர்கள் மற்றும் செவ்வாடை பக்தர்கள் அதிகளவில் வருகை தந்தனர். 

    இதைத்தொடர்ந்து மார்கழி மாத பவுர்ணமி, முடிவடைந்த நிலையில் நேற்று கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. காணிக்கை பணத்தை கோவில் ஊழியர்கள் மற்றும் மகளிர் குழு பெண்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 

    இதில் பக்தர்கள் ரூ 1 கோடியே 78 லட்சத்து 89 ஆயிரத்து 38ரொக்கம், 363 கிராம் தங்கம், 1,109 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்திஇருப்பது தெரியவந்தது.

    உண்டியல் திறப்பின் போது கோவில் இணை ஆணையர் அசோக்குமார், மாவட்ட உதவி ஆணையர் ஜான்சிராணி, கோவில் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஊழியர்கள், பக்தர்கள் உடனிருந்தனர்.
    Next Story
    ×