என் மலர்
திருவண்ணாமலை
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் திருமலை (வயது50). இவரது மனைவி அதே கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் என்பவர் போலீஸ்காரராக உள்ளார். இவருக்கும் திருமலைக்கும் கடந்த 6 ஆண்டாக முன்பகை இருந்து வந்தது.
நேற்று திருமலை அவரது நண்பர் சுப்பிரமணியுடன் மகாஜன பக்கம் சாலையிலிருந்து பெரும்புள்ளி மேடு கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று அங்கு ஒரு கார் வந்தது. காரில் இருந்த 4 பேர் கும்பல் திருமலை கத்தியால் மிரட்டி கடத்தி சென்றனர்.
மடிப்பாக்கம் பாண்டியன் பக்கம் செல்லும் சாலையில் தோப்பில் பாழடைந்த மண்டபத்தில் அவரை அடைத்து வைத்தனர். அவர்களிடம் இருந்து திருமலை நைசாக தப்பி வந்துள்ளார்.
இதுகுறித்து தூசி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் ராஜாராம் என்பவரை கைது செய்தனர்.இது தொடர்பாக மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
சென்னையை அடுத்த கோவளம் பகுதியில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவி ஒருவர் தங்கி படித்து வந்தார். 6-ம் வகுப்பில் இருந்து தொடர்ந்து விடுதியிலேயே அவர் தங்கி படிப்பை தொடர்ந்தார்.
தற்போது 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவி சில நாட்களுக்கு முன்பு பெற்றோருக்கு போன் செய்து பேசி உள்ளார். அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் எனவே என்னை கோவளம் வந்து அழைத்து செல்லுங்கள் எனவும் கூறினார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் கோவளம் விடுதிக்கு தங்கள் மகளை அழைத்து வரச்சென்றனர்.
திருவண்ணாமலையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மகளை அழைத்து சென்று பெற்றோர் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அதுபற்றி திருவண்ணாமலை மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
மாணவியின் கர்ப்பத்துக்கு யார் காரணம் என உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக மாணவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உண்டு உறைவிட பள்ளியில் படித்தபோது அங்கு யாருடனாவது மாணவி பழகி அதன் மூலமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பம் ஆனாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மகள் கர்ப்பமாகி இருக்கும் நிலையில் அதற்கு காரணம் யார் என தெரியாமல் பெற்றோர் தவித்து வருகிறார்கள். போலீசாரும் மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்பது பற்றிய விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
மாணவி தங்கியிருந்த பள்ளி விடுதி மாமல்லபுரம் மகளிர் போலீஸ் எல்லைக்குள் வருகிறது. திருவண்ணாமலை மகளிர் போலீசார் விரைவில் கோவளம் பள்ளி விடுதிக்கு வந்து நேரில் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
அப்போது அவர் திருவண்ணாமலைஅருணாசலேஸ்வரர் கோவில் எதிரே மாட வீதியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கலெக்டர் முருகேஷ் கூறுகையில், இன்று (திங்கட்கிழமை) முதல் 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை சாமி மாட வீதிஉலா பக்தர்கள் இன்றி போலீஸ் பாதுகாப்புடன் நடைபெறும். 15-ந் தேதி (சனிக்கிழமை) திருவூடல் நிகழ்ச்சி கோவில் வளாகத்திலேயே நடைபெறும்.
மேலும் இன்று (திங்கட்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியவர்கள் மட்டுமே அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். சாமி தரிசனம் செய்ய வருகை தருபவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியதற்கான சான்று அல்லது செல்போனில் பெறப்பட்ட குறுஞ்செய்தியை காண்பித்தால் மட்டுமே கோவில் வளாக்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிக்கலாம்...வினை தீர்க்கும் விநாயகருக்கு உகந்த விரதங்கள்






