என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பஞ்.தலைவியின் கணவரை கடத்தி கொலை மிரட்டல் விடுத்த போலீஸ்காரர் கைது
Byமாலை மலர்11 Jan 2022 7:29 AM GMT (Updated: 11 Jan 2022 7:29 AM GMT)
வெம்பாக்கம் அருகே பஞ்.தலைவியின் கணவரை காரில் கடத்தி கொலை மிரட்டல் விடுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் திருமலை (வயது50). இவரது மனைவி அதே கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் என்பவர் போலீஸ்காரராக உள்ளார். இவருக்கும் திருமலைக்கும் கடந்த 6 ஆண்டாக முன்பகை இருந்து வந்தது.
நேற்று திருமலை அவரது நண்பர் சுப்பிரமணியுடன் மகாஜன பக்கம் சாலையிலிருந்து பெரும்புள்ளி மேடு கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று அங்கு ஒரு கார் வந்தது. காரில் இருந்த 4 பேர் கும்பல் திருமலை கத்தியால் மிரட்டி கடத்தி சென்றனர்.
மடிப்பாக்கம் பாண்டியன் பக்கம் செல்லும் சாலையில் தோப்பில் பாழடைந்த மண்டபத்தில் அவரை அடைத்து வைத்தனர். அவர்களிடம் இருந்து திருமலை நைசாக தப்பி வந்துள்ளார்.
இதுகுறித்து தூசி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை சப்&இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் ராஜாராம் என்பவரை கைது செய்தனர்.
இது தொடர்பாக மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X