search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    வெம்பாக்கம் அருகே பஞ்.தலைவியின் கணவரை காரில் கடத்தி கொலை மிரட்டல் விடுத்த போலீஸ்காரர் கைது

    வெம்பாக்கம் அருகே பஞ்.தலைவியின் கணவரை காரில் கடத்தி கொலை மிரட்டல் விடுத்த போலீஸ்காரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் திருமலை (வயது50). இவரது மனைவி அதே கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

    அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் என்பவர் போலீஸ்காரராக உள்ளார். இவருக்கும் திருமலைக்கும் கடந்த 6 ஆண்டாக முன்பகை இருந்து வந்தது.

    நேற்று திருமலை அவரது நண்பர் சுப்பிரமணியுடன் மகாஜன பக்கம் சாலையிலிருந்து பெரும்புள்ளி மேடு கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென்று அங்கு ஒரு கார் வந்தது. காரில் இருந்த 4 பேர் கும்பல் திருமலை கத்தியால் மிரட்டி கடத்தி சென்றனர்.

    மடிப்பாக்கம் பாண்டியன் பக்கம் செல்லும் சாலையில் தோப்பில் பாழடைந்த மண்டபத்தில் அவரை அடைத்து வைத்தனர். அவர்களிடம் இருந்து திருமலை நைசாக தப்பி வந்துள்ளார்.

    இதுகுறித்து தூசி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் ராஜாராம் என்பவரை கைது செய்தனர்.இது தொடர்பாக மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×