என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கிராம மக்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த விழிப்புணர்வு

    திருவண்ணாமலை பகுதியில் உள்ள கிராமங்களில் பொதுமக்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஒன்றிய குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.

    ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி தலைமை தாங்கினார் .துணைத்தலைவர் ரமணன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தராஜ், எல்.எஸ். லட்சுமி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் திருவண்ணாமலை உட்பட்ட கிராமப் பகுதி களில் ஒன்றிய பொது நிதி மற்றும் மாநில நிதிக்குழு மானிய நிதி ஆகியவற்றின் மூலம் அடிப்படை வசதிகளை செய்வது எனவும், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்கான பணிகளை கண்டறிந்து அவற்றுக்கு முன்னுரிமை அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    மேலும் கொரோனா 3-வது அலை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒன்றியத்துக்கு உட்பட்ட 69கிராம ஊராட்சிகளிலும் முழுமையாக நிறைவேற்ற அந்தந்த பகுதியில் உள்ள ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

    கிராம பகுதிகளிலும் பொதுமக்கள் முக கவசம் அணிவதையும், 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதையும், அவசியமின்றி கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தடுப்பூசி சிறப்பு முகாம்களை ஒருங்கிணைத்து பொதுமக்கள் பங்கேற்பதை உறுதி செய்தல் ஆகியவற்றில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×