என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று நடந்த உத்ராயண புண்ணிய கால கொடியேற்றம்
Byமாலை மலர்5 Jan 2022 4:40 AM GMT (Updated: 5 Jan 2022 4:40 AM GMT)
கொடியேற்றம் நடந்தபோது பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாததால் ஏமாற்றமடைந்தனர். சிறப்பு வழிபாடுகள் அனைத்தும் முடிவடைந்ததும் பக்தர்கள் மீண்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதில் உத்ராயண புண்ணிய கால உற்சவம் முக்கியமான நிகழ்வாகும். இந்த ஆண்டுக்கான உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவ கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது.
இதையொட்டி விநாயகர், உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் உற்சவ மூர்த்திகள் தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளி அருள்பாலித்தனர். பின்னர் வேதமந்திரம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது மங்கல இசை முழங்கப்பட்டது.
தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு வழிபாடுகள் செய்தனர். அதன் பின்னர் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் பிரகாரத்தில் வலம் வந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்டோர் மட்டும் கலந்து கொண்டனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
கொடியேற்றம் நடந்தபோது பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாததால் ஏமாற்றமடைந்தனர். சிறப்பு வழிபாடுகள் அனைத்தும் முடிவடைந்ததும் பக்தர்கள் மீண்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அய்யப்ப பக்தர்கள், செவ்வாடை பக்தர்கள் அதிக அளவில் தரிசனம் செய்தனர். பக்தர்கள் 20 ரூபாய் தரிசன கட்டணத்தில் அனுமதிக்கப்படவில்லை, ரூ.50 கட்டணத்தில் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் பொது தரிசனம் வழியாகவும் ஏராளமான பக்தர்கள் சென்று வழிபட்டனர்.
இதையொட்டி விநாயகர், உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் உற்சவ மூர்த்திகள் தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளி அருள்பாலித்தனர். பின்னர் வேதமந்திரம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது மங்கல இசை முழங்கப்பட்டது.
தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு வழிபாடுகள் செய்தனர். அதன் பின்னர் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் பிரகாரத்தில் வலம் வந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்டோர் மட்டும் கலந்து கொண்டனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
கொடியேற்றம் நடந்தபோது பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாததால் ஏமாற்றமடைந்தனர். சிறப்பு வழிபாடுகள் அனைத்தும் முடிவடைந்ததும் பக்தர்கள் மீண்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அய்யப்ப பக்தர்கள், செவ்வாடை பக்தர்கள் அதிக அளவில் தரிசனம் செய்தனர். பக்தர்கள் 20 ரூபாய் தரிசன கட்டணத்தில் அனுமதிக்கப்படவில்லை, ரூ.50 கட்டணத்தில் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் பொது தரிசனம் வழியாகவும் ஏராளமான பக்தர்கள் சென்று வழிபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X