என் மலர்
திருவள்ளூர்
- ஊர்வலத்துக்கு மாநில விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
- எஸ். சீனிவாசன் உட்பட திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அம்பத்தூர்:
அயனாவரம் திருக்குடை சேவா சமிதி அறக்கட்டளையும் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவம் ஊர்வலத்தில் 21 அழகிய திருக்குடைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று சமர்ப்பிப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் சிறப்பு பூஜைகளுடன் 21 திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பிக்கப்படுகிறது. அதற்காக திருக்குடை ஊர்வலம் இன்று காலை பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜை புனஸ்காரங்களுடன் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று பக்தர்களின் கரகோஷத்துடன் ஊர்வலமாக புறப்பட்டது. ஊர்வலத்துக்கு மாநில விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
திருக்குடை சேவா சமிதி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஜி.ராமலிங்கம் வரவேற்றார்.
விஷ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத வழக்கறிஞர் பிரிவு சு.சீனிவாசன் முன்னிலை வகிக்தார். திருக்குடை ஊர்வலத்தை அகில பாரத சன்னியாசிகள் சங்க அறங்காவலர் சுவாமி ஈஸ்வரானந்தா ஆசியுரையுடன் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் அறங்காவலர்கள் தணிகைவேல், எஸ். சீனிவாசன் உட்பட திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த திருக்குடை ஊர்வலமானது
என்.எஸ்.சி.போஸ் ரோடு, வால்டாக்ஸ் ரோடு, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா ரோடு, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, ஸ்டாரன்ஸ் ரோடு, கொன்னூர் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் பக்தர்கள் புடை சூழ ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு இன்று இரவு அயனாவரத்தில் உள்ள காசி விசுவநாதர் ஆலயம் சிவசக்தி சத்சங் மண்டபத்தில் தங்குகிறது.
- நகராட்சி வாகனம் அல்லது நகராட்சியில் உரிமம் பெற்ற வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- மீறினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.2 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
பூந்தமல்லி:
திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு மனிதர்களை பயன்படுத்தினால் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா கூறியதாவது:-
திருவேற்காடு நகராட்சி பகுதியில் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு நகராட்சி வாகனம் அல்லது நகராட்சியில் உரிமம் பெற்ற வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இந்த சேவையை பெற 14420 என்ற கட்டணமில்லா தொலைபேசி உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டத்தின் படி, எக்காரணம் கொண்டும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மனிதர்களை கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தக் கூடாது.
இதனை மீறினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.2 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். 2-வது முறையும் தவறு செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது உயிரிழப்பு ஏற்பட்டால் தொழிலாளியின் குடும்பத்திற்கு தொடர்புடைய உரிமையாளர் ரூ .10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறைக்காவலர்கள் விரைந்து வந்து கைதிகளை சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
- புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை:
புழல் சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் கடந்த 9 மாதத்துக்கு முன்பு அடிதடி வழக்கில் புரசைவாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்ட இம்மானுவேல் (வயது 21) என்பவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் அவர் சிறையின் வெளியே அமர்ந்திருந்த போது அங்கு ஏற்கனவே விசாரணை சிறையில் இருந்த ஓட்டேரியை சேர்ந்த சூர்யா(23) மற்றும் புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்த நித்தின்குமார் (23) ஆகியோர் வந்து திடீரென தகராறில் ஈடுபட்டனர். பின்னர் இது மோதலாக மாறியது. கைதிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் சிறைவளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சிறைக்காவலர்கள் விரைந்து வந்து கைதிகளை சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த தாக்குதலில் கைதிகளுக்கு காயம் ஏற்பட்டது.அவர்களுக்கு சிறை மருத்துவர்கள் சிசிச்சை அளித்தனர். கஞ்சா விற்பனை தொடர்பாக இம்மானு வேலுடம் மற்ற இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே ஜெயிலின் சிறை வெளிப்புற காம்பவுண்ட் சுவர் அருகில் வெளியில் இருந்து வீசப்பட்ட பார்சலை சிறை காவலர்கள் கண்டெடுத்தனர். அதனை பிரித்து பார்த்தபோது 3 செல்போன்கள் இருந்தது. அதனை சிறைக்குள் வீசியது யார்? எந்த கைதிக்கு கொடுக்க வீசப்பட்டது என்பது குறித்து சிறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
- மணல் ஏற்றி சென்ற லாரிகளை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பள்ளி நேரங்களில் லாரிகள் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த கோளூர் ஏரியில் சவுடு மண் குவாரி செயல்பட்டு வருகிறது. இதனால் தினமும் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, திருப்பாலைவனம், ஏலியம்பேடு உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று வருகின்றன.
பொன்னேரி அடுத்த பெரியகாவனம் பகுதியில் மணல் ஏற்றிசெல்லும் லாரிகளால் சாலைகள் சேதம் அடைந்து வருவதுடன் போக்கு வரத்து நெரிசல், மாசு, காரணமாக காலை-மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி, மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.
மேலும் லாரிகளில் அளவுக்கு அதிகமான சவுடு மண் ஏற்றி செல்லும் போது அதனை தார்பாய்மூலம் மூடாமல் செல்வதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிப்பதாகவும் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் இன்று காலை அப்பகுதி மக்கள் கவுன்சிலர் செந்தில்குமார் தலைமையில் மணல் ஏற்றி சென்ற லாரிகளை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 8 மணி முதல் 10 மணி வரை பள்ளி நேரங்களில் லாரிகள் செல்லக்கூடாது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தாசில்தார் மதியழகன், இன்ஸ்பெக்டர் சின்னதுரை மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளி நேரங்களில் லாரிகள் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பல்வேறு தெருக்களில் சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது.
- சாலைகளை தற்காலிகமாக செப்பனிடுமாறு பல்வேறு தரப்பு மக்களும் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்றத் தொகுதி, சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இந்நிலையில் இந்த பேரூராட்சியில் உள்ள ஜி.என்.செட்டி தெரு, பஜார் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது.
இந்த சாலைகளை தற்காலிகமாக செப்பனிடுமாறு பல்வேறு தரப்பு மக்களும் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை. இந்நிலையில் ஜி.என்.செட்டி சாலையில் இருந்து புதுவாயல் நோக்கிச் செல்லும் சாலை வளைவு குண்டும், குழியுமாக உள்ளது.
இந்த சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளும், ஏராளமான பள்ளி-கல்லூரிக்கு செல்லும் பஸ்கலும், அரசு போக்குவரத்துக் கழக பஸ்களும், தனியாருக்கு சொந்தமான வேன்களும், இரு சக்கர வாகனங்களும் சென்று வருகின்றது. எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக மாவட்ட நிர்வாகம் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் டிசம்பர் மாதம் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள்.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
ஆவடி:
திருவள்ளூர் மாவட்ட அளவிலான 26-ம் ஆண்டு கராத்தே போட்டி திருநின்றவூர் ஜெயா கலை கல்லூரியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. போட்டியில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 700 மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.
வயது அடிப்படையில் 70- பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இறுதி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
முன்னதாக சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும் ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான சா.மு.நாசர் மற்றும் ஜெயா கல்வி குழும தலைவர் பேராசிரியர் கனகராஜ் ஆகியோர் பங்கேற்று போட்டியை கண்டுகளித்தனர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் உதவித்தொகை வழங்கினர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட சி. ஆர். பி. எப். டி.ஐ.ஜி. எஸ்.ஜெயபாலன், திருவள்ளூர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் எஸ்.மூர்த்தி ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் டிசம்பர் மாதம் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள்.
மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிக்கான ஏற்பாடுகளை கராத்தே தொழில்நுட்ப இயக்குனர் விஜயராகவன், செயலாளர் தக்ஷிணா மூர்த்தி, தலைவர் ராஜா, சேர்மன் லட்சுமி காந்தன், துணை செயலாளர் ஏ. ரமேஷ்குமார், பொருளாளர் தனசேகர், மற்றும் பயிற்சியாளர்கள்,டி. தியாகராஜன், எஸ்.தீபன், டி.ஏமலதா, ஆர்.சித்ரா, சந்தோஷ் குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.
- மோசஸ், தேவன் ஆகியோர் விஷ வாயு தாக்கி பலியானார்கள்.
- கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.
திருநின்றவூர்:
ஆவடி, ஓ.சி.எப். பகுதியில் உள்ள குடியிருப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது தொழிலாளர்கள் மோசஸ், தேவன் ஆகியோர் விஷ வாயு தாக்கி பலியானார்கள். இது தொடர்பாக தேசிய தூய்மைபணியாளர்கள் பாதுகாப்பு ஆணைய தலைவர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.
மேலும் அவர்கள், ஆவடி மாநகராட்சி அதிகாரிகளிடம் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.
- சந்தேகத்திற்கிடமாக சுற்றிய 3 வட மாநில வாலிபர்களை போலீசார் பிடித்து உள்ளனர்.
- சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பில்லா குப்பம் பகுதியை சேர்ந்த 55 வயது பெண் கணவர் மற்றும் மகன்களுடன் வசித்து வருகிறார்.
நேற்று மாலை அந்த பெண் தனக்கு சொந்தமான ஆடுகளை பில்லா குப்பம் பகுதியில் உள்ள கங்கை அம்மன் கோவில் பின்புறம் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு யாரும் இல்லை. இதனை நோட்டமிட்டு வட மாநில வாலிபர்கள் 3 பேர் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை மிரட்டினர். பின்னர் அவரை குண்டு கட்டாக தூக்கி கடத்தி சென்றனர்.
பின்னர் அங்குள்ள மறைவான பகுதியில் பெண்ணை கற்பழித்துவிட்டு மிரட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அலறி கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது வடமாநில வாலிபர்கள் 3 பேர் தன்னை கடத்தி சென்று கற்பழித்ததாக அந்த பெண் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அதே பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய 3 வட மாநில வாலிபர்களை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் புகார் கூறிய பெண்ணுக்கு சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
கற்பழிப்பு தொடர்பாக நேற்று இரவே புகார் செய்தும் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதனை கண்டித்து அப்பகுதி மக்களும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரி நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த போலீசாரிடமும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிருஷ்ணகுமாரின் மனைவி சுகந்தி மற்றும் உறவினர்கள் சிலர் பூண்டி ஏரியில் குளித்தனர்.
- மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்ட அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
திருவள்ளூர்:
சென்னை கோயம்பேடு அடுத்த பாடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண குமார். இவரது மனைவி சுகந்தி(வயது39). இவர்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலுக்கு சென்றனர்.
சாமி தரிசனம் முடிந்ததும் அனைவரும் பூண்டி ஏரிக்கு சென்று அங்கு சமைத்து சாப்பிட்டனர். இதைத்தொடர்ந்து கிருஷ்ணகுமாரின் மனைவி சுகந்தி மற்றும் உறவினர்கள் சிலர் பூண்டி ஏரியில் குளித்தனர்.
ஆழமான பகுதிக்கு சென்ற சுகந்தி தண்ணீரில் மூழ்கினார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டனர். மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்ட அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுகந்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பென்னலூர் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
- கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்து பட்டாசுகளும் படபடவென வெடித்து சிதறியது.
- இரண்டு பேர் கண் சிகிச்சைக்காக பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள சித்தம்பாக்கம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஜெகதீசன்(வயது56) என்பவர் மாரடைப்பால் நேற்று முன்தினம் பலியானார்.
இந்நிலையில், அவரது இறுதி ஊர்வலம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள அவரது வீட்டில் இருந்து சித்தம்பாக்கம் கிராமத்தில் உள்ள மயானத்துக்கு கொண்டு சென்று அன்று மாலை அடக்கம் செய்தனர். அவரது உடலை கொண்டு சென்ற வாகனத்தின் முன் பகுதியில் பட்டாசுகள் இருந்த பையை மாட்டி வைத்திருந்தனர். அப்பொழுது ஒரு ராக்கெட் வெடித்ததில் அதிலிருந்து நெருப்பு சிதறி பட்டாசு வைத்திருந்த பையில் விழுந்தது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்து பட்டாசுகளும் படபடவென வெடித்து சிதறியது.
இதனால் இறுதி ஊர்வலத்தின் வாகனத்தின் அருகே நின்று கொண்டிருந்த ஜெகதீசனின் மகன் விவேக் என்பவரது நண்பர்களான முகேஷ்(வயது18), சுரேஷ், அஸ்வின் உள்ளிட்ட ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆறு பேரையும் மீட்டு சென்று திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில், ஜெகதீசனின் உடல் அடக்கமும் நடைபெற்றது.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பேரில் முகேஷ் என்பவர் போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இரண்டு பேர் கண் சிகிச்சைக்காக பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் இப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
- 21 வேட்டைக்கார இன மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கியுள்ளனர்.
- பிரச்சினையால் சுமார் மூன்று மணி நேரம் இப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், விளாப்பாக்கம் ஊராட்சியில் வசித்து வரும் 21 வேட்டைக்கார இன மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கியுள்ளனர். ஆனால், 2 ஆண்டுகள் ஆகியும் அதற்கான இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வழங்காமல் உள்ளனர். வெள்ளியூர், விளாப்பாக்கம் ஊராட்சியில் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வரும் 42 வேட்டைக்கார இன மக்களுக்கு குடிமனை பட்டா வருவாய்துறை அதிகாரிகள் வழங்காமல் மின் இணைப்பு பெற இயலாமல் அவதிக்கு உள்ளாகின்றனர் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வெள்ளியூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், தமிழ்நாடு வேட்டைக்கார இன பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் தமிழரசு தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கெங்காதுரை, மாநிலத் துணைத் தலைவர் சண்முகம், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், சிபிஐஎம் வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன், டி.டில்லி, எஸ்.கலையரசன், கே.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பட்டா கிடைக்கும் வரை இங்கேயே சமைத்து, இங்கேயே உண்டு, இங்கேயே உறங்குவோம் என கண்டன உரை ஆற்றினர். சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் தாசில்தார் சுரேஷ்குமார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.மேலும், வெள்ளியூர்,விளாப்பாக்கம் ஊராட்சியில் வசித்து வரும் வேட்டைக்கார இன மக்களுக்கு மின்இணைப்பு வசதியை ஏற்படுத்தி தர கலெக்டரின் ஒப்புதலுடன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். மேலும், மந்தைவெளி புறம்போக்கு இடம் என்பதால் உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இந்நிகழ்ச்சியின் போது, வருவாய் ஆய்வாளர்கள் தினேஷ், பொன்மலர், கிராம நிர்வாக அதிகாரி ராதிகா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். வருவாய்த்துறை அதிகாரிகளின் உறுதி மொழியை ஏற்று அனைவரும் போராட்டத்தை விளக்கிக் கொண்டு அமைதியாக
கலைந்து சென்றனர். இப்பிரச்சினையால் இன்று காலை சுமார் மூன்று மணி நேரம் இப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.
- பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து மாசுகட்டுப்பாட்டு வாரியம் வழிமுறைகள் அறிவித்து உள்ளது.
- விநாயகர் சிலை அமைக்கும் இடத்தில் எளிதில் தீப்பிடிக்காத தகட்டால் குடில்கள் நிறுவப்பட வேண்டும்.
பொன்னேரி:
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொது இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படும் விநாயகர் சிலைகளை பின்னர் நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து மாசுகட்டுப்பாட்டு வாரியம் வழிமுறைகள் அறிவித்து உள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொன்னேரி பகுதியில் 2 அடிமுதல் 10 அடி உயரம் வரையிலான 500-க்கும் மேற்பட்ட சிலைகள் பல வண்ணங்களில் தயார் நிலையில் உள்ளன. பொன்னேரி பகுதியில் மட்டும் 55 விநாயகர் சிலைகள் பொது இடத்தில் வைக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் விநாயகர் சிலை வழிபாடு மற்றும் அதனை நீர் நிலைகளில் கரைப்பது தொடர்பாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இந்து அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம் பொன்னேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னத்துரை தலைமை தாங்கினார். அப்போது போலீசார் கூறும்போது, விநாயகர் சிலை களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை செய்துள்ள பொருட்களை உபயோகிக்க கூடாது. விநாயகர் சிலை அமைக்கும் இடத்தில் எளிதில் தீப்பிடிக்காத தகட்டால் குடில்கள் நிறுவப்பட வேண்டும் . எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது. பொது இடங்களில் நிறுவப்படும் சிலைகள் 5 நாட்களுக்குள் குறிப்பிட்ட இடத்தில் கரைக்க வேண்டும். விநாயகர் சிலையை கரைக்க அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் எடுத்துச் செல்ல வேண்டும். விநாயகர் சிலையை கரைக்க மினி லாரி டிராக்டர் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். மாட்டு வண்டி, மீன் பாடி வண்டி ஆட்டோகளில் எடுத்துச் செல்லக்கூடாது. சிலைகளை எடுத்து செல்லும் இடங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை. பழவேற்காடு கடலில் கரைக்க விநாயகர் சிலை கொண்டு செல்லும் வாகனங்களில் அதிகமான ஆட்களை ஏற்றக் கூடாது என்றனர். இதில் காவல் உதவி ஆய்வாளர்கள் வெங்கடேசன், கலைத்தோழன் மற்றும் விநாயகர் சிலை குழு அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.






