என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

பெரியபாளையம் கோவிலுக்கு சென்று திரும்பியபோது பூண்டி ஏரியில் மூழ்கி சென்னை இளம்பெண் பலி

- கிருஷ்ணகுமாரின் மனைவி சுகந்தி மற்றும் உறவினர்கள் சிலர் பூண்டி ஏரியில் குளித்தனர்.
- மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்ட அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
திருவள்ளூர்:
சென்னை கோயம்பேடு அடுத்த பாடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண குமார். இவரது மனைவி சுகந்தி(வயது39). இவர்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலுக்கு சென்றனர்.
சாமி தரிசனம் முடிந்ததும் அனைவரும் பூண்டி ஏரிக்கு சென்று அங்கு சமைத்து சாப்பிட்டனர். இதைத்தொடர்ந்து கிருஷ்ணகுமாரின் மனைவி சுகந்தி மற்றும் உறவினர்கள் சிலர் பூண்டி ஏரியில் குளித்தனர்.
ஆழமான பகுதிக்கு சென்ற சுகந்தி தண்ணீரில் மூழ்கினார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டனர். மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்ட அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுகந்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பென்னலூர் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
