என் மலர்
திருவள்ளூர்
- பைப் வழியாக 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
- குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரி கடந்த 2 ஆண்டுகளாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பொன்னேரி:
மீஞ்சூர் ஒன்றியம் வெள்ளி வாயல் சாவடி ஊராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு எம்.ஜி.ஆர். நகரில் குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி உள்ளது. 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி இங்கிருந்து எம்.ஜி.ஆர் நகர், சில்வர் நகர், சேக்கன் காலனி, கிருஷ்ணா நகர், உள்ளிட்ட பகுதிகளுக்கு பைப் வழியாக 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
கடந்த 2004-ம் ஆண்டுகட்டப்பட்ட குடிநீர் தொட்டி மிகவும் சேதம் அடைந்து உள்ளது. எனினும் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது. குடிநீர் தொட்டியின் நான்கு தூண்களின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து உள்ள கம்பிகள் வெளியே எலும்பு கூடாக காட்சி அளிக்கிறது.
மேலும் தொட்டியில் இருந்து தண்ணீர் கசிந்து பச்சைபாசிப் படிந்து உள்ளது. இந்த குடிநீர் தொட்டி எப்போது வேண்டுமானாலும் உயிர் பலி வாங்க இடிந்து விழும் நிலையில் காட்சி அளிப்பதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் பம்பு ஆப்பரேட்டர் குடிநீர் தொட்டியில் ஏறி சுத்தம் செய்ய அச்சப்படுவதால் சுகாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரி கடந்த 2 ஆண்டுகளாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
- கொடியேற்று விழா நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி உற்சவம் துவங்கியது. 18-ம் தேதி சனிக்கிழமை சூரசம்கார நிகழ்ச்சி நிகழ்ச்சியும், 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இன்று நடைபெற்ற கொடியேற்று விழா நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் ஊழியர்களும், பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
- 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தலா 3 கிலோ அரிசி, புடவை, மதிய உணவு வழங்கினார்.
- நிகழ்ச்சியில் ஆங்காடு பகுதி நிர்வாகிகள், மக்கள் கலந்து கொண்டனர்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆங்காடு ஊராட்சிக்குட்பட்ட பன்னீர்வாக்கம் கிராமத்தில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தலா 3 கிலோ அரிசி, புடவை, மதிய உணவு வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் கிரிஜா நித்யானந்தம், துணைத் தலைவர் மதன்ராஜ், செயலாளர் தனசேகர், பன்னீர்வாக்கம் பகுதி முன்னாள் வார்டு உறுப்பினர் மோகன், பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில செயலாளர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், தலைமை நிலைய செயலாளர் ஆர்.சிவகுமார், செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், நிர்வாகிகள் டி.உதயகுமார், கே.காமராஜ், நல்லதம்பி, எடப்பாளையம் செந்தில்குமார், மகாராஜன், இலங்காமணி, காந்திநகர் அந்தோணி, தட்சிணாமூர்த்தி, ஆனந்தகண்ணன், எம்.வைகுண்டராஜா, பாபாஜி, முருகேச பாண்டி, முருகக்கனி, முகமது அப்துல்காதர், சங்கரலிங்கம், சண்முகம், ஆர்.பாலமுருகன், சுப்பிரமணி, ராஜ்நாடார், சீனிப் பாண்டியன், ஆண்டனி பீட்டர், உத்திர குமார், ரமேஷ், சுரேஷ், வண்ணை மோகன், எம்.எம்.டி.ஏ.பாலமுருகன், ரமேஷ், மடிப்பாக்கம் ரவி, சி.பி.செல்வன், செல்வபாண்டி, ஆத்திசாமி, டாக்டர் பிரேம்சந்த், காசிராஜன், வசந்தகுமார் கலந்து கொண்டனர்.
- சிறப்பு அதிகாரிகள் நியமித்துள்ளது.
- அறிவுசார் நகரம் அமைதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே 1703 ஏக்கர் நில பரப்பில் அறிவுசார் நகரம் அமைப்பதை எதிர்த்து பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கல்பட்டு, ஏனம்பாக்கம், மேல் மாளிகைப்பட்டு, செங்காத்தாகுளம், எர்ணாகுப்பம், வெங்கல் ஆகிய கிராமங்கள் உள்ளடக்கி 1703 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தமிழ்நாடு அரசு அறிவுசார் நகரம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக பூர்வாங்க பணிகளை தொடங்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. சிறப்பு அதிகாரிகள் நியமித்துள்ளது. அறிவுசார் நகரம் அமைத்தால் மூன்று போகங்கள் விளையக்கூடிய விலை நிலங்கள், வீடுகள் பாதிப்பு அடைய வாய்ப்பு உள்ளது. அறிவுசார் நகரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், திட்டத்தை எதிர்த்தும் கண்டித்தும் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் எதிரே நேற்று கண்டனம் ஆர்ப்பாட்டத்தில் நடத்தினர். திருவள்ளூர் வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் தனசேகர், இளைஞர் அணி தலைவர் அன்பு, விவசாய சங்கத் தலைவர் முனுசாமி, ஒன்றிய செயலாளர் ஜெயபால், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சுதாகர், வன்னியர் சங்க செயலாளர் டில்லிபாபு, ஆவாஜி பேட்டை பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவுசார் நகரம் அமைத்தால் பாதிப்பு அடைவோர் மற்றும் ஏராளமான பா.ம.க. வினர் திருவோடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அறிவுசார் நகரம் அமைதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
- மப்பேடு கிராமத்தில் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
- கிராம மக்கள் நோய் தொற்றால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில் மப்பேடு கிராமத்தில் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் குடிநீருடன் கலந்து மாசுபட்டு துர்நாற்றம் வீசி வருகிறது.
இதனால் இந்த கிராம மக்கள் நோய் தொற்றால் அவதிப்பட்டு வருகிறார்கள். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் குடிநீருடன் கழிவுநீர் திறந்து விடப்படுவதை கண்டித்து அரக்கோணம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மப்பேடு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பின்னர் பின்னர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அரக்கோணம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பூண்டி ஏரியில் அதன் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 1860 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.
- சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 627 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
திருவள்ளூர்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு பலத்த மழை கொட்டி வருகிறது.
நேற்று இரவு தொடங்கிய மழை விடிய, விடிய நீடித்தது. இதனால் குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக 606 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. இதில் இப்போது 2745 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. மொத்தம் உள்ள 21 அடியில் 18.67 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி ஆகும். இதில் 3141 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரி 86 சதவீதம் நிரம்பி உள்ளது. மொத்த உயரமான 24 அடியில் 22.08 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 368 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.160 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் தண்ணீர் இருப்பை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
பூண்டி ஏரியில் அதன் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 1860 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. 80 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 68 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 627 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 26 கனஅடிதண்ணீர் வருகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 435 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரிக்கு 10 கனஅடி தண்ணீர் வருகிறது.
தொடர்ந்து மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் வரும் நாட்களில் குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு கலந்துகொண்டு கும்மிடிப்பூண்டி கி.வேணு உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- பல்வேறு கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், பன்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மிசா.கும்மிடிப்பூண்டி கி.வேணு. தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும் முன்னாள் திருவள்ளூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.வுமான இவர் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மகன் கி.வே.ஆனந்தகுமார் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக பதவி வகித்து வருகிறார். மகள் உமாமகேஸ்வரி திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக பதவி வகித்து வருகிறார். காலமான மிசா.கும்மிடிப்பூண்டி கி.வேணு உருவப்படத்திறப்பு நிகழ்ச்சி அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு கலந்துகொண்டு அவரது உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், எம்.வி.பேரடைஸ் திருமண மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கி.வேணு படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. கி.வே.ஆனந்தகுமார், கே.வி.ஜி.உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைவரையும் மாவட்ட அவைத் தலைவர் மு.பகலவன் வரவேற்றார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பாளருமான ராணிப்பேட்டை காந்தி, எம்.எல்.ஏ.க்கள் ஆ.கிருஷ்ணசாமி, பரந்தாமன் ஆகியோர் கலந்துகொண்டு கி. வேணு உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தி பேசினர்.
நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், இ.ஏ.பி.சிவாஜி, பா.சே.குணசேகரன், ஏ.வி.ராமமூர்த்தி, வெ.அன்புவாணன், கே.வி.லோகேஷ், ஏன்னம்பாக்கம் சம்பத், வக்கீல் வெங்கடாஜலபதி, டி.ஜே.ஜி.தமிழரசன், மு.மணிபாலன், டி.கே.சந்திரசேகர், ஜான் பொன்னுசாமி, ஆ.சத்தியவேலு, தங்கம்முரளி, பரிமளம், செல்வசேகரன், ரமேஷ்ராஜ், பரிமளம்விஸ்வநாதன், ரவிக்குமார், அறிவழகன், பி.முத்து, டி.கண்ணதாசன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பல்வேறு கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- 50-க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
- அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள போலீசாரின் செல்போன் எண்கள் அங்கிருந்த பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.
பொன்னேரி:
மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரவுடிகளை ஒழிக்க ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் படி தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ரவுடிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில், உதவி கமிஷனர் ராஜா ராபர்ட் இன்ஸ்பெக்டர் காளிராஜ் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அத்திப்பட்டு புது நகர் பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரவுடிகளின் செயல்பாடுகள் பற்றி அப்பகுதிமக்களிடம் கேட்டறிந்தனர். மேலும் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள போலீசாரின் செல்போன் எண்கள் அங்கிருந்த பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.
- ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாவட்டங்களுக்கு மீன் ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
- தற்காலிக முகத்து வாரம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொன்னேரி:
பழவேற்காடு ஏரியில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க ரூ.27 கோடியில் திட்டமிடப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டன. பின்னல் பல்வேறு காரணங்களால் முகத்துவரப்பணி நிறத்தப்பட்டது.
இந்நிலையில் முகத்துவார பகுதியில் மணல் சேர்ந்து அடைத்து உள்ளால் மீனவர்களால் படகுகளை அவ்வழியாக கொண்டு செல்ல முடியவில்லை.
இதனால் கடந்த 2 வாரமாக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன் பிடி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பழவேற்காடு மீன் மார்க்கெட்டிற்கு மீன், நண்டு வரத்து முற்றிலும் குறைந்து விட்டதால் அதன் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. மேலும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாவட்டங்களுக்கு மீன் ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே பழவே ற்காட்டில் முகத்துவாரம் அடைப்பட்டு இருப்பதை மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குநர் சந்திரா, மீன்வளத்துறை பொன்னேரி உதவி இயக்குநர் கங்காதரன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். பின்னர் பழவேற்காடு பகுதி மீனவ கிராம நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது நான்கு இடங்களில் முகத்துவாரம் வெட்டுவதற்காக இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் தற்காலிக முகத்து வாரம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கா ன பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- பயந்துபோன மாணவி தனக்கு நேர்ந்து வரும் கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்தார்.
- கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்த மாணவிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர், கசவநல்லாத்தூரை சேர்ந்த 15 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரது வீட்டுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஆரா என்கிற ஆரோக்கியராஜ் (23) என்பவர் பால் பாக்கெட் போட்டு வந்தார். அப்போது மாணவியுடன், ஆரோக்கியராஜ் நெருங்கி பழகினார். மேலும் காதலிப்பதாகவும் ஆசைவார்த்தை கூறினார். இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது மாணவியுடன் ஆரோக்கியராஜ் உல்லாசமாக இருந்தார். தொடர்ந்து அவர் காதல் ஆசை காட்டி மாணவியுடன் நெருக்கமாக இருந்தார்.
இதற்கிடையே இதுபற்றி அறிந்த அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுவன் மற்றும் சுப்பு என்கிற சுகுவனேஸ்வரன் (22) ஆகிய இருவரும் நெருங்கி பழகினர். அவர்கள் மாணவியின் காதல் விவகாரம் தெரிந்து இதுபற்றி வெளியில் சொல்லி விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் காதல் ஆசைவார்த்தை கூறி மாணவனும், ஆரோக்கியராஜூம் மாணவியை சீரழித்தனர். பயந்துபோன மாணவி தனக்கு நேர்ந்து வரும் கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்தார்.
இதற்கிடையே கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்த மாணவிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவரை பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மாணவியின் நிலை குறித்து அவரது பெற்றோருக்கு தெரிவித்தார். அவர்கள் விசாரித்தபோதுதான் ஆரோக்கியராஜ், மாணவன் மற்றும் சுகுவனேஸ்வரன் ஆகியோர் தொடர்ந்து மாணவியை சீரழித்து வந்தது தெரிந்தது.
இதுகுறித்து திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் சுசிலா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆராக்கியராஜ், மாணவனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுகுவனேஸ்வரனை தேடி வருகின்றனர்.
விசாரணையில் மாணவியை கடந்த 2 ஆண்டாக அவர்கள் தொடர்ந்து சீரழித்து வந்திருப்பது தெரியவந்தது.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர், கசவநல்லாத்தூரை சேர்ந்த 15 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரது வீட்டுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஆரா என்கிற ஆரோக்கியராஜ் (23) என்பவர் பால் பாக்கெட் போட்டு வந்தார். அப்போது மாணவியுடன், ஆரோக்கியராஜ் நெருங்கி பழகினார். மேலும் காதலிப்பதாகவும் ஆசைவார்த்தை கூறினார். இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது மாணவியுடன் ஆரோக்கியராஜ் உல்லாசமாக இருந்தார். தொடர்ந்து அவர் காதல் ஆசை காட்டி மாணவியுடன் நெருக்கமாக இருந்தார்.
இதற்கிடையே இதுபற்றி அறிந்த அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுவன் மற்றும் சுப்பு என்கிற சுகுவனேஸ்வரன் (22) ஆகிய இருவரும் நெருங்கி பழகினர். அவர்கள் மாணவியின் காதல் விவகாரம் தெரிந்து இதுபற்றி வெளியில் சொல்லி விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் காதல் ஆசைவார்த்தை கூறி மாணவனும், ஆரோக்கியராஜூம் மாணவியை சீரழித்தனர். பயந்துபோன மாணவி தனக்கு நேர்ந்து வரும் கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்தார்.
இதற்கிடையே கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்த மாணவிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவரை பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மாணவியின் நிலை குறித்து அவரது பெற்றோருக்கு தெரிவித்தார். அவர்கள் விசாரித்தபோதுதான் ஆரோக்கியராஜ், மாணவன் மற்றும் சுகுவனேஸ்வரன் ஆகியோர் தொடர்ந்து மாணவியை சீரழித்து வந்தது தெரிந்தது.
இதுகுறித்து திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் சுசிலா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆராக்கியராஜ், மாணவனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுகுவனேஸ்வரனை தேடி வருகின்றனர்.
விசாரணையில் மாணவியை கடந்த 2 ஆண்டாக அவர்கள் தொடர்ந்து சீரழித்து வந்திருப்பது தெரியவந்தது.
- நீர்வள ஆதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- பணிகள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலந்துரையாடினர்.
அம்பத்தூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் 7- க்குட்பட்ட 15 வார்டுகளில், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் தலைமையில் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. மண்டல குழு தலைவர் பி.கே. மூர்த்தி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மண்டல ஆணையர் விஜிலா மற்றும் மின்சாரத்துறை, வருவாய்த்துறை, நீர்வள ஆதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மண்டலத்துக்குட்பட்ட 15 வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலந்துரையாடினர். மேலும் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு தேங்கும் பட்சத்தில் அதனை உடனடியாக அப்புறப்படுத்த அதிக திறன் கொண்ட மோட்டார்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
அதேபோல் பெருமழை பெய்து வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் தங்குவதற்கான திருமண மண்டபங்கள், பள்ளி வகுப்பறைகள் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளும் செய்து தரவேண்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மண்டல குழு தலைவர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர். இதில் கவுன்சிலர்கள் டி.எஸ்.பி.ராஜகோபால், உஷா நாகராஜ், சாந்தகுமாரி, செயற்பொறியாளர்கள் சதீஷ்குமார்,குமாரசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மின்சாரம் தாக்கியததில் புஷ்பா பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சோழிங்கநல்லூர் அடுத்த பெரும்பாக்கம், எழில் நகரில் வசித்து வந்தவர் புஷ்பா (வயது54). இவர் நேற்று இரவு ஹீட்டர் பயன்படுத்தி வாளியில் வெந்நீர் வைத்தார். சிறிது நேரம் கழித்து வெந்நீர் சூடாகிவிட்டதா என்று அவர் தொட்டு பார்த்ததாக தெரிகிறது. அப்போது மின்சாரம் தாக்கியததில் புஷ்பா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






