search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உயிர் பலி வாங்க துடிக்கும் ஆபத்தான குடிநீர் தொட்டி- பொதுமக்கள் அச்சம்
    X

    உயிர் பலி வாங்க துடிக்கும் ஆபத்தான குடிநீர் தொட்டி- பொதுமக்கள் அச்சம்

    • பைப் வழியாக 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
    • குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரி கடந்த 2 ஆண்டுகளாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியம் வெள்ளி வாயல் சாவடி ஊராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு எம்.ஜி.ஆர். நகரில் குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி உள்ளது. 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி இங்கிருந்து எம்.ஜி.ஆர் நகர், சில்வர் நகர், சேக்கன் காலனி, கிருஷ்ணா நகர், உள்ளிட்ட பகுதிகளுக்கு பைப் வழியாக 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

    கடந்த 2004-ம் ஆண்டுகட்டப்பட்ட குடிநீர் தொட்டி மிகவும் சேதம் அடைந்து உள்ளது. எனினும் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது. குடிநீர் தொட்டியின் நான்கு தூண்களின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து உள்ள கம்பிகள் வெளியே எலும்பு கூடாக காட்சி அளிக்கிறது.

    மேலும் தொட்டியில் இருந்து தண்ணீர் கசிந்து பச்சைபாசிப் படிந்து உள்ளது. இந்த குடிநீர் தொட்டி எப்போது வேண்டுமானாலும் உயிர் பலி வாங்க இடிந்து விழும் நிலையில் காட்சி அளிப்பதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் பம்பு ஆப்பரேட்டர் குடிநீர் தொட்டியில் ஏறி சுத்தம் செய்ய அச்சப்படுவதால் சுகாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரி கடந்த 2 ஆண்டுகளாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×