என் மலர்
திருவள்ளூர்
- ரெயில்கள் இயக்கம், நிறுத்தம் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- 1 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளனர்.
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள், மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* திருவள்ளூர் அருகே சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரலில் அவசர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
* ரெயில்கள் இயக்கம், நிறுத்தம் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* பயணிகள் சிரமத்தை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* சரக்கு ரெயிலில் ஏற்பட்டுள்ள தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* 1 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளனர்.
* அருகிலுள்ள வீடுகளில் உள்ள மக்களையும் முகாம்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* அருகில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளையும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெங்களூருக்கு டீசல் ஏற்றிச் சென்றபோது சரக்கு ரெயிலில விபத்து ஏற்பட்டுள்ளது.
- பயணிகள் பாதுகாப்பிற்காக ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.
அதில், சென்னை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து பெங்களூருக்கு டீசல் ஏற்றிச் சென்றபோது சரக்கு ரெயிலில விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு ரெயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகியதில் எரிபொருள் கசிந்து தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடைபெறுகிறது.
தீ விபத்து காரணமாக விரைவு ரெயில் செல்லும் வழித்தடத்தில் எந்த பாதிப்பும் இல்லை. தீ விபத்து எதிரொலியால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வலியுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் பாதுகாப்பிற்காக ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. தீ விபத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதும் ரெயில் போக்குவரத்து தொடங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னைக்கு வந்து கொண்டிருந்த அதிவிரைவு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.
- பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரலில் அவசர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள் ஆய்வு செய்தார். சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு யாரும் வரவேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் எஸ்.பி. சீனிவாச பெருமாளிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அரக்கோணத்தில் இருந்து சென்னை வரும் அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு வந்து கொண்டிருந்த அதிவிரைவு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அருகே சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரலில் அவசர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டு ரெயில் சேவை பாதிக்கப்பட்ட நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருவள்ளூரில் இருந்து சென்னை, அரக்கோணம் மார்க்கத்தில் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
- சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு யாரும் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மாவட்ட ஆட்சியர் பிரதாப், எஸ்.பி. சீனிவாச பெருமாளிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள் ஆய்வு செய்தார். சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் அருகே உள்ள பொதுக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு யாரும் வரவேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் எஸ்.பி. சீனிவாச பெருமாளிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அரக்கோணத்தில் இருந்து சென்னை வரும் அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு வந்து கொண்டிருந்த அதிவிரைவு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர் அருகே சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் சென்னை சென்ட்ரலில் அவசர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அருகே சரக்கு ரெயில் 2 மணி நேரத்திற்கு மேலாக தீப்பற்றி எரிந்து வரும் நிலையில் தீயணைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள் ஆய்வு செய்தார்.
- அரக்கோணத்தில் இருந்து சென்னை வரும் அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
இதையடுத்து சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள் ஆய்வு செய்தார்.
சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் அருகே உள்ள பொதுக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு யாரும் வரவேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. அரக்கோணத்தில் இருந்து சென்னை வரும் அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு வந்து கொண்டிருந்த அதிவிரைவு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் எஸ்.பி. சீனிவாச பெருமாளிடம் சம்பவம் குறித்து அவர் கேட்டறிந்தார்.
அம்பத்தூர், ஆவடி, திருப்பெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.
- திருவள்ளூர் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.
- அரக்கோணத்தில் இருந்து சென்னை வரும் அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள் கூறுகையில்,
சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் அருகே உள்ள பொதுக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளனர். திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீ விபத்து ஏற்பட்ட சரக்கு ரெயிலில் 52 பெட்டிகள் உள்ளன. சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு யாரும் வரவேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்த கர்நாடகா, கொங்கு மண்டலத்திற்கு செல்லும் ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. அரக்கோணத்தில் இருந்து சென்னை வரும் அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு வந்து கொண்டிருந்த அதிவிரைவு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.
* சென்னையிலிருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூரு வந்தே பாரத் ரெயில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
* காலை 6 மற்றும் 6.10 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூரு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில், கோவை அதிவிரைவு ரெயில் சென்ட்ரலில் நிறுத்தப்பட்டுள்ளது.
* மங்களூரில் இருந்து காலை 6.10 மணிக்கு சென்னைக்கு வர வேண்டிய சென்ட்ரல் மெயில் திருவள்ளூரில் நிறுத்தப்பட்டுள்ளது.
* நீலகிரியில் இருந்து சென்னைக்கு காலை 6.25 மணிக்கு வர வேண்டிய நீலகிரி அதிவிரைவு ரெயில் திருவாலங்காட்டில் நிறுத்தப்பட்டுள்ளது.
* கர்நாடகாவிலிருந்து காலை 6.45 டணிக்கு சென்னை வரவேண்டிய காவிரி விரைவு ரெயில் அரக்கோணத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
* கோவையிலிருந்து காலை 7 மணிக்கு சென்னைக்கு வரவேண்டிய சேரன் அதிவிரைவு ரெயில் அரக்கோணத்தில நிறுத்தப்பட்டுள்ளது.
ரெயில் சேவை தடைபட்டதால் ரெயில் பயணிகள் பரிதவித்தனர்.
- சரக்கு ரெயிலில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
- திருவள்ளூர் பகுதியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயிலில் பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சரக்கு ரெயில் தீப்பற்றி எரியும் இடத்தில மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தீ பற்றி எரியும் இடத்தில வேடிக்கை பார்ப்பதற்காக பொதுமக்கள் யாரும் வரவேண்டாம்" என்று தெரிவித்தார்.
- ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் கட்சி தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
- கட்சி பெயர், கொடியை அறிமுகம் செய்த பொற்கொடி 32 அடி உயர கம்பத்தில் கொடியேற்றினார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நினைவேந்தல் சங்கமமாக நடந்தது. தென்னிந்திய புத்தவிகார் தலைவரும் ஆம்ஸ்ட்ராங் மனைவியுமான பொற்கொடி தலைமையில் அமைதிப் பேரணி காலையில் நடந்தது. பொத்தூர் கிராமத்தில் உள்ள வள்ளலார் கோவிலில் இருந்து நினைவிடம் வரை ஊர்வலம் நடந்தது. இதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியின் தாயார் கமலா கவாய் மற்றும் புத்த பிட்சுகள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் சிலை திறப்பு விழா நடந்தது. நினைவேந்தல் மலரும் வெளியிடப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் கட்சி தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்தநிலையில், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' என்ற புதிய கட்சியை அறிவித்தார். கட்சி பெயர், கொடியை அறிமுகம் செய்த பொற்கொடி 32 அடி உயர கம்பத்தில் கொடியேற்றினார்.
யானை தனது துதிக்கையில் பேனாவை பிடித்து எடுத்து செல்வதுபோல் உள்ள நீலம், வெண்மை நிறத்திலான கொடியை அறிமுகப்படுத்தினார்.
- பொத்தூர் கிராமத்தில் உள்ள வள்ளலார் கோவிலில் இருந்து நினைவிடம் வரை ஊர்வலம் நடந்தது.
- ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் கட்சி தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி செங்குன்றம் அருகே உள்ள பொத்தூரில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நினைவேந்தல் சங்கமமாக நடந்தது. தென்னிந்திய புத்தவிகார் தலைவரும் ஆம்ஸ்ட்ராங் மனைவியுமான பொற்கொடி தலைமையில் அமைதிப் பேரணி காலையில் நடந்தது. பொத்தூர் கிராமத்தில் உள்ள வள்ளலார் கோவிலில் இருந்து நினைவிடம் வரை ஊர்வலம் நடந்தது.
இதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியின் தாயார் கமலா கவாய் மற்றும் புத்த பிட்சுகள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் சிலை திறப்பு விழா நடந்தது. அதனை தொடர்ந்து நினைவேந்தல் மலர் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் கட்சி தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், புரட்சி பாரத கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ. மற்றும் முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்தினர்.
பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த மைக்கேல் தாஸ், பகுஜன் பிரேம், வெங்கட், பாக்சர் திரு உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நினைவேந்தல் நிகழ்ச்சி யில் தென்னிந்திய பவுத்த சங்கங்கள், அம்பேத்கர் அமைப்புகள், சமூக அமைப் புகள், எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.
- அஜித்குமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்தான் நிகிதா.
- முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையுடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நிகிதாவுடன் இணைத்து பேசுகிறார்கள்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (வயது 28). தனது காரில் இருந்த நகைகள் மாயம் என நிகிதா என்பவர் அளித்த புகாரின் பேரில், அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்ற தனிப்படை போலீசார், கொடூரமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கூறிய மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்த பேராசிரியை நிகிதா மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது நிகிதா தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில் நிகிதா பெயரில் தனது புகைப்படம் பரப்பப்படுவதாக திருவள்ளூர் கிழக்கு பா.ஜ.க. மாவட்ட செயலாளர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
என் பெயர் ராஜினி. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளேன்.
அஜித்குமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்தான் நிகிதா. என் மண் என் மக்கள் யாத்திரைக்காக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையுடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நிகிதாவுடன் புகைப்படத்துடன் இணைத்து பேசுகிறார்கள்.
சமூக வலைதளத்திலும், ஊடகத்திலும் தவறாக செய்தி பரப்புகிறார்கள். இதை கொண்டுபோனது செந்தில் சரவணன் என்பவர். பேஸ்புக், டுவிட்டரில் அவர் ID தான் வெளிவருகிறது. சில செய்திகளையும் வெளியிட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் மீது புகார் அளித்துள்ளேன். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அது என்னுடைய புகைப்படம். அண்ணாமலை என் அண்ணா. அவரை முன்னிறுத்தி தான் நாங்கள் உள்ளேயே வந்தோம். ஆனா அந்த போட்டோவை வைத்து இந்த மாதிரி அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள். இது ஒரு லேடீசை கலங்கப்படுத்தியதுபோல் இல்லை. எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்கு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் வேற லெவலில் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கணவருடன் மறுவீட்டிற்காக தாய் வீட்டிற்கு வந்த லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை
- கணவரின் குடும்பம் கூடுதல் நகை கேட்டு தொல்லை கொடுத்ததாக லோகேஸ்வரி குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருமணமான 4 நாட்களில் லோகேஸ்வரி (24) என்ற புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முஸ்லீம் நகரைச் சேர்ந்த இளம்பெண் லோகேஸ்வரி கடந்த 27-ந்தேதி பன்னீர் (37) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கணவருடன் மறுவீட்டிற்காக தனது தாய் வீட்டிற்கு நேற்று வந்த லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து லோகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 3 நாட்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.
இருசக்கர வாகனம், ஏசி, கூடுதல் நகை கேட்டு தொல்லை கொடுத்ததாக லோகேஸ்வரி குடும்பத்தினர் பன்னீர், அவரது தாய், தந்தை மீது குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், கணவர் பன்னீர் (37), மாமியார் பூங்கோதை (60) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மாமனார் மற்றும் நாத்தனாரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணம் ஆன 78 நாட்களில் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து பொன்னேரியில் லோகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கணவருடன் மறுவீட்டிற்காக தனது தாய் வீட்டிற்கு நேற்று வந்த லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
- லோகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருமணமான 4-வது நாளிலே லோகேஸ்வரி (24) என்ற புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முஸ்லீம் நகரைச் சேர்ந்த இளம்பெண் லோகேஸ்வரி கடந்த 27-ந்தேதி பன்னீர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கணவருடன் மறுவீட்டிற்காக தனது தாய் வீட்டிற்கு நேற்று வந்த லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து லோகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 3 நாட்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.
இருசக்கர வாகனம், ஏசி, கூடுதல் நகை கேட்டு தொல்லை கொடுத்ததாக லோகேஸ்வரி குடும்பத்தினர் பன்னீர், அவரது தாய், தந்தை மீது குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணம் ஆன 78 நாட்களில் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து பொன்னேரியில் லோகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






