என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சரக்கு ரெயில் விபத்து: தீ முற்றிலும் அணைக்கப்பட்ட நிலையில் டேங்கர்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரம்
- சரக்கு ரெயிலில் காலை 5 மணி அளவில் ஏற்பட்ட தீ தற்போது முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
- சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ முற்றிலும் அணைக்கப்பட்டு லாரிகளுக்கு டீசல் மாற்றப்பட்டது.
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடினர்.
இந்த நிலையில் சரக்கு ரெயில் டேங்கருக்கு 70,000 லிட்டர் வீதம் மொத்தமாக 18 டேங்கர்களில் 12.60 லட்சம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்தது. சரக்கு ரெயில் தீ விபத்தில் ரூ. 12 கோடி மதிப்பிலான டீசல் தீயில் எரிந்து நாசமாகி உள்ளது.
சரக்கு ரெயிலில் காலை 5 மணி அளவில் ஏற்பட்ட தீ தற்போது முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
விபத்துக்குள்ளான சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ முற்றிலும் அணைக்கப்பட்டு லாரிகளுக்கு டீசல் மாற்றப்பட்டது.
தீ அணைக்கப்பட்ட நிலையில், திருவள்ளூரில் தீ விபத்துக்குள்ளான சரக்கு ரயிலின் டேங்கர்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தண்டவாளத்தில் இருந்து விலகிய டேங்கர்களை கிரேன் மூலம் அப்புறத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.






