என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் தற்போது 22.31 அடிக்கு தண்ணீர் உள்ளது.
    • மீண்டும் கனமழை பெய்தால் மட்டும் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் மீண்டும் அதிகரிக்கப்படும்.

    பூந்தமல்லி:

    சென்னை மற்றும் புறநகர் நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 22 அடியை தாண்டியது.

    இதையடுத்து ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று 3 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. இதனால் அடையாறு ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று பலத்த மழை இல்லாததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது. இன்று காலை நிலவரப்படி முதலில் ஏரிக்கு 3382 கனஅடி தண்ணீர் வந்தது. பின்னர் நீரின் அளவு படிப்படியாக குறைய தொடங்கியது.

    இதையடுத்து இன்று காலை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியின் உத்தரவுப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு 1,500 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம்24 அடி. இதில் தற்போது 22.31 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3200 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி இருக்கிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் இதே அளவு தண்ணீரை தொடர்ந்து தேக்கி வைக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். வரும் நாட்களில் பலத்த மழை இருந்தால் மட்டும் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பலத்த மழை இல்லாததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் தண்ணீர் வரத்து குறைந்ததால் உபரி நீர் திறப்பு 1500 கனஅடியாக குறைக்கப்பட்டது. மீண்டும் கனமழை பெய்தால் மட்டும் உபரி நீர் மீண்டும் அதிகரிக்கப்படும்.

    கோடைக்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு, ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டது என்றனர்.

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் தண்ணீர் வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    • ரஜினி தனது 73-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
    • இந்த ஆண்டு தனது பேரன்களோடு நேரம் செலவழித்து ரஜினி கொண்டாடியிருக்கிறார்.

    ரஜினிகாந்த் 73-வது பிறந்த நாளை நேற்று தனது பேரன்களோடு கொண்டாடியிருக்கிறார். பிறந்த நாளின் போது ரஜினியை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் அவரது வீட்டின் முன் குவித்திருந்தனர். அதிகாலை முதலே திரண்ட ரசிகர்கள் ரஜினி வீட்டின் வெளியே வந்து கையசைப்பார் என்று காத்திருந்த நிலையில் வீட்டிலிருந்து லதா ரஜினிகாந்த் வந்து சார் ஊரில் இல்லை. அதனால் யாரும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

     

    பேரன்களோடு பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி

    பேரன்களோடு பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி

    ஆனால் அவர் நேற்று முழுவதும் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கி தனுஷ்-ஐஷ்வர்யாவின் மகன்களான லிங்கா, யாத்ராவுடன் பிறந்தநாளை கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படத்தை ஐஷ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் தனுஷின் மகன் லிங்கா கையில் காயம் ஏற்பட்டு கட்டு போட்டப்பட்டிருந்தது. இதனால் தனுஷின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    மழை, புயல் காரணமாக ரசிகர்கள் தொடர்ந்து தன்னை சந்திக்க வருவதைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவை எடுத்ததாகச் கூறப்ப்படுகிறது. 

    • பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 6 பேரையும் அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
    • கோவை கார் வெடிப்பு வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் 6 பேரையும் புழல் சிறையிலேயே அடைக்கவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

    பூந்தமல்லி:

    கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே அக்டோபர் 23-ந்தேதி கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் (28) என்பவர் பலியானார்.

    இதையடுத்து இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்தனர். இந்த வழக்கு தொடர்பாக முகமது அசாருதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமது நவாஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் நேற்று 6 பேரையும் கோவை சிறையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு கொண்டு வந்து அடைத்தனர்.

    இன்று காலை புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 6 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

    இந்த வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் 6 பேரையும் புழல் சிறையிலேயே அடைக்கவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

    • சாலை எப்போதும் வாகன போக்கு வரத்தால் பரபரப்பாக காணப்படும். இந்த
    • குண்டும் குழியுமாக சாலை மாறியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி ஏராளமான பொறியியல் கல்லூரி, பள்ளிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

    இதனால் இந்த சாலை எப்போதும் வாகன போக்கு வரத்தால் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக பூந்தமல்லி முதல் திருமழிசை கூட்டுசாலை வரை பல இடங்களில் சாலைகள் சேதம் அடைந்தன.

    குண்டும் குழியுமாக சாலை மாறியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இன்று காலை ஏராளமான வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்ததால் பூந்தமல்லி முதல் திருமழிசை கூட்டு சாலை வரை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இன்று காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. பின்னர் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

    பூந்தமல்லியில் இருந்து திருமழிசை கூட்டு சாலையை கடக்க ஒரு மணி நேரம் வரை ஆனதாக வாகன ஓட்டிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இப்பகுதியில் சேதம் அடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் மற்றும் போதிய போக்குவரத்து போலீசாரை பணியமர்த்தி போக்குவரத்தை சரி செய்து வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதேபோல் பூந்தமல்லி-ஆவடிசாலையில் கரையான் சாவடியில் இருந்து சென்னீர்குப்பம் வரை குண்டும் குழியுமான சாலையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    • மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
    • கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர் ஆவடி வசூல் நகர் வழியாக சென்று அயப்பாக்கம் ஏரியில் கலக்கும்.

    திருநின்றவூர்:

    மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் தொடர்ந்து பலத்த மழை நீடித்து வந்தது. ஆவடியில் 17 செ.மீட்டர் வரை பலத்த மழை பெய்தது.

    இதன் காரணமாக ஆவடி நகரின் மையப்பகுதியில் உள்ள பருத்திப்பட்டு ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தொடர்ந்து ஏரிக்கு வரும் நீர் அதிகரித்ததால் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது.

    பருத்திப்பட்டு ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்ல தற்போது பொதுப்பணித்துறையின் சார்பில் ஆவடி வசந்த் நகர் வழியாக ரூ.20 கோடி மதிப்பில் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்த கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர் ஆவடி வசூல் நகர் வழியாக சென்று அயப்பாக்கம் ஏரியில் கலக்கும்.

    இதற்கடையே கால்வாய் அமைக்கும் பணி இன்னும் முடிவடையாததால் பருத்திப்பட்டு ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் ஆவடி மாநகராட்சி 43-வார்டுக்கு உட்பட்ட வசந்தம் நகர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

    இதனால் அங்குள்ள சுமார் 2 ஆயிரம் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. தெருக்களிலும், சாலையிலும் தண்ணீர் வெளியேற முடியாமல் குளம்போல் தேங்கி நிற்கிறது. பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    தண்ணீர் வெளியேற வழியில்லாததால் பருத்திப்பட்டு ஏரியில் இருந்து வரும் தண்ணீர் தொடர்ந்து வீடுகளை சூழ்ந்தபடி உள்ளது. தண்ணீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடடினடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதேபோல் ஆவடி முழுவதும் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே சென்று வர முடியாமல் தவிக்கிறார்கள். முழங்கால் அளவு தேங்கி உள்ள தண்ணீரில் சென்று வரவேண்டிய நிலை உள்ளதாக பொது மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். ஏரி தண்ணீர் செல்லும் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கேசாவரம் அணைக்கட்டில் நீர் நிரம்பினால், நேரடியாக கொசஸ்தலை ஆற்றில், செல்லும் நீர், பூண்டி ஏரிக்கு செல்கிறது.
    • கேசாவரம் அணையில் இருந்து கூவம் ஆற்றிலும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    வேலுார் மாவட்டத்தில், தக்கோலம் வழியாக வரும் கல்லாறு, திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு என இரு ஆறுகளாக பிரிகிறது.

    கேசாவரம் அணைக்கட்டில் நீர் நிரம்பினால், நேரடியாக கொசஸ்தலை ஆற்றில், செல்லும் நீர், பூண்டி ஏரிக்கு செல்கிறது. இந்த அணைக்கட்டின் இன்னொரு புறம் அமைக்கப்பட்ட, 16 ஷட்டர்கள் வழியாக செல்லும் மழைநீர், கூவம் ஆறாக மாறி, பேரம்பாக்கம், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம் வழியாக சென்னைக்கு செல்கிறது.

    இந்த அணைக்கட்டில் கடந்த நவம்பர் மாதம் தண்ணீர் நிரம்பி வழிந்த நிலையில் தற்போது அணைக்கட்டில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இங்கிருந்து கெசஸ்தலை ஆற்றில் தண்ணீர் செல்கி றது. இந்த நீரும் பூண்டி ஏரிக்கு செல்கிறது.

    மேலும் கேசாவரம் அணையில் இருந்து கூவம் ஆற்றிலும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் கூவம் ஆற்றிலும் தண்ணீர் அதிக அளவு செல்கிறது.

    இதனால் கடம்பத்துார் ஒன்றியம் விடையூர் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    • பழவேற்காடு பகுதியிலும் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது.
    • சாலையை சீரமைக்க கோரி மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

    பொன்னேரி:

    வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் கடந்த 9-ந்தேதி இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. அப்போது சூறாவளி காற்றுடன் கன மழை கொட்டித்தீர்த்தது.

    பழவேற்காடு பகுதியிலும் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. பலஅடி உயரத்துக்கு அலைகள் எழும்பி கடல் நீர் கரையை கடந்து உள்ளது. அப்போது எண்ணூர் துறைமுகம்- பழவேற்காடு இடையே கருங்காலி என்ற இடத்தில் சாலை முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டது.

    பின்னர் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை கடல் மண்ணால் முழுவதுமாக நிரம்பி மூடப்பட்டது. இதனால் பழவேற்காட்டில் இருந்து காட்டுப்பள்ளி, எண்ணூர், துறைமுக சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    காட்டுப்பள்ளியில் இருந்து பழவேற்காடு, பொன்னேரி, ஆந்திர மாநிலத்திற்கு செல்லக் கூடிய பயணிகளும் பணிக்கு செல்வோரும் அவ்வழியாக செல்ல முடியாமல் பழவேற்காட்டில் இருந்து காட்டூர், மீஞ்சூர், வடசென்னை அனல்மின் நிலையம் வழியாக சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிற்கு சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சாலையை சீரமைக்க கோரி மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து மீஞ்சூர் ஒன்றிய சேர்மன் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன், மற்றும் அதிகாரிகள் கருங்காலி பகுதியில் முகாமிட்டு 2 ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் சாலையில் மூடிய மணலை தூர்வாரி அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    கடல் சீற்றத்தின் போது ஆண்டு தோறும் இந்த இடத்தில் கடல் நீர் சாலை மீது செல்வதும் அதன் பின்னர் மணல் தூர்ந்து அடைபடுவதுமாக இருந்து வருகிறது. எனவே இந்த இடத்தில் மேம்பாலம் ஒன்று அமைத்துக் கொடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். கடந்த ஆண்டு. 200 மீட்டர் மட்டுமே கடலுக்கும் ஆற்றுக்கும் இடைப்பட்ட தூரமாக இருந்த நிலையில். தற்போது 10 மீட்டர் அளவு கடலுக்கும் சாலைக்கும் இடையேயான தூரம் சுருங்கி இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே வரும் நாட்களில் ஆபத்தில் இருந்து தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். எண்ணூர் துறைமுகம்-பழவேற்காடு சாலையில் மூடிய மணலை அகற்றும் பணி தொடர்ந்து வருகிறது. அப்போது மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவு அமைப்பாளர் முகம்மது அலவி, ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வழகி எர்ணாவூரன், எம்.கே.தமின்சா, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஞானவேல், சேதுராமன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.
    • கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக பெய்த கனமழை மற்றும் தற்போது தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரி மொத்த உயரம் 35 அடியில் 34.10 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது.

    மொத்த கொள்ளளவான 3231 மி.கன அடியில் 2854 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    தொடர்மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று முன்தினம் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    நேற்று பெரிய அளவில் மழை இல்லாததால் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. இன்று காலை பூண்டி ஏரியில் இருந்து 7803 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஏரிக்கு 7500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 6 இடங்களில் தரைப்பாலங்கள் மூழ்கி உள்ளன. இதனால் சுமார் 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    வெள்ளம் காரணமாக பூண்டி தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதேபோல் ஒதப்பை தரைப்பாலம், பெரியபாளையம் அருகே உள்ள மெய்யூர் தரைப்பாலம், திருவாலங்காடு ஒன்றியம் பாகசாலை தரைப்பாலம், எல்.வி.புரம் ஆகிய பகுதிகளில் தரைப்பாலம் மூழ்கி உள்ளன. ஆர்.கே.பேட்டை பகுதியில் உள்ள வெளியகரத்தில் தரைப்பாலத்தின் மீது தண்ணீர் செல்கிறது. அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    பெரியபாளையம் அருகே மெய்யூர்-மொண்ணவேடு இடையே கொசத்தலை ஆற்றின் குறுக்கே இருந்த தரை பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

    இதனால் 20-க்கும் மேற்பட்ட கிராம பொது மக்களுக்கு போக்குவரத்து தடைப்பட்டது.மெய்யூர், ராஜபாளையம், ஆவாஜிப்பேட்டை, கல்பட்டு, ஏனம்பாக்கம் உள்ளிட்ட கிராம மக்கள் சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றிக் கொண்டு மாற்றுப் பாதையில் திருவள்ளூருக்கு சென்று வருகின்றனர்.

    மீஞ்சூர் ஒன்றியம் சுப்பாரெட்டி பாளையம் ஊராட்சியில் நேற்று தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் சென்றது. இன்று காலை தரைப்பாலத்திற்கு கீழ் தண்ணீர் செல்கிறது. கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்ததால் அங்கு வசிக்கும் 200-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள ஊராட்சி அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. கொசஸ்தலை ஆற்றில் தொடர்ந்து அதிக அளவு தண்ணீர் செல்வதால் கரையோர கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தேவையான நடவடிக்களை அதிகாரிகள் உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டு உள்ளார்.

    இதேபோல் ஆந்திரா பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பிச்சாட்டூர் அணையில் இருந்து நேற்று மாலை 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஆரணி ஆற்றிலும் அதிக அளவு தண்ணீர் செல்கிறது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் புதுப்பாளையம்- அஞ்சாத்தம்மன் கோவில் இடையே தரைப்பாலம் நீரில் மூழ்கியது. மேலும், மங்கலம்-ஆரணி இடையே மண் சாலை அமைக்கப்பட்டு இருந்தது.இதுவும் ஆரணி ஆற்று வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டது.

    இதனால் மங்களம், புதுப்பாளையம், காரணி, நெல்வாய், ஏருக்குவாய், எருக்குவாய் கண்டிகை உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெரியபாளையம் வழியாக மாற்றுப்பாதையில் பல கிலோமீட்டர் சுற்றி செல்கிறார்கள். எனவே,மெய்யூர் மற்றும் புதுப்பாளையம் மேம்பாலத்தை போர்க்கால அடிப்படையில் கட்டி முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கார்த்திகேயனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • கார்த்திகேயன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    போரூர்:

    விருகம்பாக்கம் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 50) சித்த வைத்தியர் இவரது நண்பர் கலியமூர்த்தி வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    கலியமூர்த்தி தான் சம்பளம் வாங்கி சேமித்து வைத்திருந்த ரூ.50ஆயிரம் பணத்தை நண்பர் கார்த்திகேயனிடம் கொடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கலியமூர்த்தி தனது அவசர தேவைக்காக கார்த்திகேயனிடம் ரூ.5 ஆயிரம் பணம் கேட்டார்.

    ஆனால் பணம் தர மறுத்த கார்த்திகேயன் கலியமூர்த்தியை தகாதவார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த கலியமூர்த்தி கீழே கிடந்த உருட்டுக் கட்டையால் சித்த வைத்தியர் கார்த்திகேயனை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த கார்த்திகேயன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் மற்றும் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து காவலாளி கலியமூர்த்தியை கைது செய்தனர்.

    மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கார்த்திகேயனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கார்த்திகேயன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.

    • ஏரிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4200 கன அடியாக அதிகரித்தது.
    • ஏரியை பார்க்க பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    பூந்தமல்லி:

    வங்ககடலில் உருவான மாண்டஸ்புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. புயல் கரையை கடந்த பின்னரும் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது.

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 3645 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். மழை காரணமாக ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து ஏரியில் இருந்து கடந்த 9-ந்தேதி முதல் வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் சென்னை புறநகர் பகுதியில் மீண்டும் பலத்த மழை கொட்டி வருகிறது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு வரும் நீரின் அளவு வினாடிககு 2,046 கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்தது.

    இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 24 அடியில் 22.43 அடியை எட்டியது. மேலும் தண்ணீர் இருப்பு 3,184 மில்லியன் கன அடியாக அதிகரித்தது.

    தொடர்ந்து ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்ததையடுத்து பாதுகாப்பு கருதி உபரி நீர் திறப்பை 1000 கன அடியாக உயர்த்த மாவட்ட கலெக்டர் ஆர்த்தி இன்று காலை உத்தரவிட்டார். இதையடுத்து இன்று காலை 9 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதற்கிடையே செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. இதனால் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை தாண்டும் நிலை ஏற்பட்டது. வழக்கமாக செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகபட்சமாக 23 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.

    இன்று காலை முதல் தொடர்ந்து புறநகர் பகுதிகளில் கன மழை கொட்டி வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு 3 ஆயிரத்து 407 கன அடியாக அதிகரித்தது.

    இதைத்தொடர்ந்து ஏரியின் பாதுகாப்பு கருதி எரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மீண்டும் அறிவித்தார்.

    அதன்படி இன்று மதியம் 12 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட் டது. மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறி வருகிறது.

    ஏரியில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் அடையாறு ஆற்றுகரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் சிறுகளத்தூர், வழுதிலம்பேடு, திருநீர்மலை, அனகா புத்தூர் வழியாக அடையாறு ஆற்றில் கலக்கி றது. ஏற்கனவே கடந்த மாதம் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்தபோது 2 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின்னர் நீர்வரத்து 4200 அடியாக உயாந்தது. இதையடுத்து நீர் திறப்பு 3000 கன அடியாக உயர்த்தப்பட்டது. 

    தொடர்ந்து பெய்து வரும் மழைகாரணமாக அடையாறு ஆற்றில் தண்ணீர் வெள்ளம் போல் செல்கிறது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் உபரி நீர் கூடுதலாக திறக்கப்பட்டு உள்ளதால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

    வழக்கமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்போது சிறு களத்தூர் அருகே குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் தண்ணீர் செல்லும். இதனால் அப்பகுதியில் சாலை துண்டிக்கப்பட்டு சிறுகளத்தூர், நத்தம்பேடு, அமரம்பேடு, சோமங்கலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்படும்.

    தற்போது சிறுகளத்தூர் பகுதியில் பாலம் கட்டப்பட்டு உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் பாதிப்பு இல்லை. எனினும் 5 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரி நீர் திறக்கப்பட்டால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பபெருக்கு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்பட்சத்தில், ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்படும். தொடர்ந்து ஏரிக்கு வரும் நீர்வரத்தை கண்காணித்து வருகிறோம் என்றார்.

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 23அடியை நெருங்கி உள்ளதால் ஏரி தற்போது கடல் போல் காட்சி அளிக்கிறது. ஏரியை பார்க்க பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என்று அதிகாரிகள் அறி வுறுத்தி உள்ளனர். மேலும் ஏரியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • அணையின் பாதுகாப்பு கருதி கடந்த 9 -ந்தேதி பூண்டி ஏரியில் இருந்து மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    • ஊத்துக்கோட்டை திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரி முழுவதுமாக நிரம்பினால் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    அப்படி திறந்து விடப்படும் தண்ணீர் ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, மெய்யூர், அணைக்கட்டு, ஜனப்பம் சத்திரம் வழியாக பாய்ந்து எண்ணூர் பகுதியில் வங்கக் கடலில் கலக்கிறது.

    இந்தநிலையில் வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகியது.

    மேலும் பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட தண்ணீரும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும் பூண்டி ஏரிக்கு வந்தது.

    இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடு என்று உயர்ந்தது. அணையின் பாதுகாப்பு கருதி கடந்த 9 -ந்தேதி பூண்டி ஏரியில் இருந்து மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று காலை ஏரியில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தரைப்பாலத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரைப்பாலம் வழியாக வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    பொது மக்கள் தரைப் பாலத்தை கடப்பதை தடுக்க இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மாற்று மார்க்கத்தில் இயக்கப்படுகின்றன.

    ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூருக்கு செல்லும் வாகனங்கள் சீத்தஞ்சேரி, வெங்கல், தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை வழியாக இயக்கப்படுகின்றன. அதேபோல் இதே மார்க்கத்தில் திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    இதனால் ஊத்துக்கோட்டை திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட் டுள்ளது. தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் இன்று 2-வது நாளாக ஒதப்பை தரைப்பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது.

    • போலீசார் திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    • ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பதுக்கி விற்பது தெரிந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் போலீசார் திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பதுக்கி விற்பது தெரிந்தது.

    இதையடுத்து அங்கிருந்த தமிம் அன்சாரி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    ×