என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தொடர் மழை- கேசாவரம் அணை நிரம்பி வழிகிறது
- கேசாவரம் அணைக்கட்டில் நீர் நிரம்பினால், நேரடியாக கொசஸ்தலை ஆற்றில், செல்லும் நீர், பூண்டி ஏரிக்கு செல்கிறது.
- கேசாவரம் அணையில் இருந்து கூவம் ஆற்றிலும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர்:
வேலுார் மாவட்டத்தில், தக்கோலம் வழியாக வரும் கல்லாறு, திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு என இரு ஆறுகளாக பிரிகிறது.
கேசாவரம் அணைக்கட்டில் நீர் நிரம்பினால், நேரடியாக கொசஸ்தலை ஆற்றில், செல்லும் நீர், பூண்டி ஏரிக்கு செல்கிறது. இந்த அணைக்கட்டின் இன்னொரு புறம் அமைக்கப்பட்ட, 16 ஷட்டர்கள் வழியாக செல்லும் மழைநீர், கூவம் ஆறாக மாறி, பேரம்பாக்கம், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம் வழியாக சென்னைக்கு செல்கிறது.
இந்த அணைக்கட்டில் கடந்த நவம்பர் மாதம் தண்ணீர் நிரம்பி வழிந்த நிலையில் தற்போது அணைக்கட்டில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இங்கிருந்து கெசஸ்தலை ஆற்றில் தண்ணீர் செல்கி றது. இந்த நீரும் பூண்டி ஏரிக்கு செல்கிறது.
மேலும் கேசாவரம் அணையில் இருந்து கூவம் ஆற்றிலும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் கூவம் ஆற்றிலும் தண்ணீர் அதிக அளவு செல்கிறது.
இதனால் கடம்பத்துார் ஒன்றியம் விடையூர் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.