என் மலர்
திருப்பூர்
- பணிக்கம்பட்டி ஊராட்சியில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
- வங்கி சம்பந்தமான பணிகளுக்கும் விவசாயிகள் பல்லடம் சென்று வர வேண்டிய நிலை உள்ளது.
பல்லடம்:
பல்லடம் ஒன்றியம் பணிக்கம்பட்டியில் கூட்டுறவு சங்கம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள், முதல்வர் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அந்தமனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- பல்லடம் ஒன்றியம் பணிக்கம்பட்டி ஊராட்சியில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இங்கு விவசாயம், விசைத்தறிகூடம் , கறிக்கோழி பண்ணை உள்ளிட்ட தொழில்கள் நடைபெற்று வருகின்றன.இந்தநிலையில் பணிக்கம்பட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் இல்லை. இதனால் விவசாயிகளுக்கான உரங்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை வெளி மார்க்கெட்டில் வாங்க வேண்டிய நிலை உள்ளது.
மேலும் வங்கி சம்பந்தமான பணிகளுக்கும் விவசாயிகள் பல்லடம் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. இதற்கிடையே மத்திய அரசு பட்ஜெட்டில் கிராமங்கள் தோறும் கூட்டுறவு சங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. எனவே பணிக்கம்பட்டி கிராமத்துக்கு முன்னுரிமை அளித்து கூட்டுறவு கடன் சங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இருதரப்பினரிடையே வாய் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.
- தன்னை தாக்கியதாக அரசன் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் ஊராட்சி சாமி கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் அரசன் (வயது 35). இவரது வீடு அருகே வசிக்கும் ஐயப்பன் ( 24), சதீஷ் ( 23) ஆகியோருக்கும் இடையே கிரிக்கெட் விளையாடியது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
சம்பவத்தன்று இருதரப்புக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இதில் அரசனை அவர்கள் இருவரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தன்னை தாக்கியதாக அரசன் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஐயப்பன் மற்றும் சதீஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- 67 விவசாயிகள் கலந்து கொண்டு 54,382 கிலோ சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.48.09க்கும், குறைந்தபட்சம் ரூ.43.56க்கும் கொள்முதல் செய்தனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும், வியாழனன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்வார்கள்.
நேற்று வியாழக்கிழமை 67 விவசாயிகள் கலந்து கொண்டு 54,382 கிலோ சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 6 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.48.09க்கும், குறைந்தபட்சம் ரூ.43.56க்கும் கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ.24 லட்சத்து 36ஆயிரத்து 879க்கு வணிகம் நடைபெற்றது என்று வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
- கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
- மருத்துவ முகாமில் 150 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகம் வழங்கப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி உப்பிலிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. உப்பிலிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், செம்மிபாளையம் வட்டார சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து இந்த சிறப்பு முகாமை நடத்தினர்.
இந்த முகாமிற்கு பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஆர். ரவி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி அனைவரையும் வரவேற்றார். இந்த மருத்துவ முகாமில் 150 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கணபதிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர்கள் கரைப்புதூர் கார்த்திகா மகேஸ்வரன் கணபதி பாளையம் முத்துக்குமார் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு மெம்பர்கள், சுகாதாரத் துறையினர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- மின்பாதைகளுக்கு அருகில் உள்ள மரங்களின் கிளையை வெட்ட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
உடுமலை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உடுமலை உதவி செயற்பொறியாளர் பெ.அய்யப்பராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
பூலாங்கிணர் துணை மின் நிலையம் டி.எம்.நகர் பீடருக்கு உட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை மொடக்குப்பட்டி, பாப்பனூத்து, அமண சமுத்திரம், திருமூர்த்தி நகர், பொன்னாலம்மன் சோலை ஆகிய பகுதியில் மின் வினியோகம் இருக்காது.
அப்போது மின்பாதைகளுக்கு அருகில் உள்ள மரங்களின் கிளையை வெட்டுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
- முகாம் காலை10மணி முதல் மதியம்1மணி வரை நடைபெற உள்ளது.
- அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் இந்த முகாமில் வழங்கப்பட உள்ளது.
திருப்பூர்:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநிலம் முழுவதும் 100 மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளில் இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாதவர்களுக்கு வழங்கும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
மாற்றத்திறனாளிகள் அடையாள அட்டை, யு.டி.ஐ.டி.-க்கு பதிவு செய்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் இந்த முகாமில் வழங்கப்பட உள்ளது.
ஏற்கனவே 2-வது சிறப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) தாராபுரத்தில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த முகாம் நாளை (சனிக்கிழமை) தாராபுரத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர், மனநல மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், மூளை நரம்பியல் மருத்துவர், கண் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து சான்று வழங்க உள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, அரசின் பிற நலத்திட்ட ஆலோசனைகள் பெற்று பயன்பெற ஆதார் அட்டை, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் சான்றுகளுடனும், மருத்துவ சிகிச்சை பெற்றால் அதற்கான ஆவணங்கள் மற்றும் மார்பளவு புகைப்படம்-5 ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- வார்டு பகுதிகளில் 1,200 புதிய குப்பை தொட்டி உட்பட பல பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
- நிறுவனத்துக்கு 15 நாள் சோதனை அடிப்படையில் தூய்மை பணி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது
திருப்பூர்:
தமிழகம் முழுவதும் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணி மேற்கொள்ள, தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.
அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சி பகுதியில், தனியார் நிறுவனம் தூய்மைப்பணிக்கு, அகற்றப்படும் குப்பை கழிவுகளின் டன் கணக்கீடு அடிப்படையில் உரிமம் பெற்றுள்ளது.மாநகராட்சி பகுதியில் முழுமையாக குப்பை கழிவுகள் சேகரித்து அவற்றை முறைப்படி அழிக்கும் வரையிலான முழுமையான பணியை அந்நிறுவனம் மேற்கொள்ளும். இதற்காக, தற்போது வார்டு பகுதிகளில் 1,200 புதிய குப்பை தொட்டி உட்பட பல பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இப்பணிக்கு இதற்கு முன்னர் மாநகராட்சி பயன்படுத்திய நிர்வாகத்துக்குச் சொந்தமான வாகனங்கள் வாடகை அடிப்படையில் பயன்படுத்தபடவுள்ளது. மேலும், வார்டு பகுதியில் தூய்மைப்பணிக்கு உரிய எண்ணிக்கையிலான ஆட்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெண்டர் எடுத்த நிறுவனத்துக்கு 15 நாள் சோதனை அடிப்படையில் தூய்மை பணி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. அவ்வகையில் கடந்த, 1-ந் தேதி முதல் நிறுவனம் நடத்திய சோதனை அடிப்படையிலான தூய்மைப் பணி நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், இன்று முதல் முழு வீச்சில் தனியார் நிறுவனம் திருப்பூர் மாநகராட்சி முழுவதும் தூய்மைப் பணியை மேற்கொள்ள தொடங்கி உள்ளது.
திருப்பூர் மாநகராட்சியில் தூய்மைப் பணி முழுமையாக தனியார் நிறுவனம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இதற்கான பணியாளர்களை நிறுவனம் முழுமையாக நியமித்துள்ளது. இந்நிலையில் மாநகராட்சியில் தற்போதுள்ள 685 நிரந்தர தூய்மை பணியாளர்கள் மாற்றுப்பணிக்கு அனுப்பப்பட உள்ளனர்.
- 1- வது வார்டு யூகேசி. நகர் பகுதி முதல் அப்துல் ஜாபர் வீடு வரை 115 மீட்டர் அளவிற்கு கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
- முன்னாள் அமைச்சருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்றது.
உடுமலை
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய கோட்டை ஊராட்சி 1- வது வார்டு யூகேசி. நகர் பகுதி முதல் அப்துல் ஜாபர் வீடு வரை 115 மீட்டர் அளவிற்கு கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் குடிமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் பெரிய கோட்டை முருகேசன், மாவட்ட இணை செயலாளர் சாஸ்திரி சீனிவாசன் , பெரிய கோட்டை ஊராட்சி துணைத்தலைவர் விஸ்வநாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர் இளம்பிறை சாதிக், செல்வராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் ஜாஹிர் உசேன் , பெரிய கோட்டை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிளை கழக செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- ஜோலார்பேட்டை - சோமநாயக்கன்பட்டி இடையே, சுரங்க பாலம் கட்டும் பணி நடக்கிறது.
- .இத்தகவலை தெற்கு ெரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:
சேலம் ெரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட, ஜோலார்பேட்டை - சோமநாயக்கன்பட்டி இடையே, சுரங்க பாலம் கட்டும் பணி நடக்கிறது. இப்பணி நடப்பதால் வருகிற 23-ந்தேதி கொச்சுவேலி - பெங்களூரு சூப்பர்பாஸ்ட் ெரயில் (எண்: 16319) மறுமார்க்கமாக 24-ந்தேதி பெங்களூரு - கொச்சுவேலி ெரயில் (எண்:16320) முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
இதே போல் எர்ணாகுளம் - பெங்களூரு சூப்பர்பாஸ்ட் ெரயில் (எண்: 12683) 24-ந்தேதியும், பெங்களூரு - எர்ணாகுளம் ெரயில் (எண்: 12684) மறுநாளும் ( 25-ந் தேதி) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.இத்தகவலை தெற்கு ெரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
- மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்பூர்:
பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழாவையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி, குணசேகரன், திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித்தலைவர் அன்பகம் திருப்பதி, பகுதி செயலாளர் கண்ணப்பன், கருணாகரன், ஹரிஹரசுதன், பட்டுலிங்கம், எம்ஜிஆர்., மன்ற செயலாளர் சிட்டி ஈஸ்வரன், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன், வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி. என். பழனிச்சாமி மற்றும் ஆண்டவர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- வாகன ஓட்டிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் நிபா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்
- பரிசோதனை செய்த 526 பயணிகளில் யாருக்கும் காய்ச்சல் கண்டறியப்படவில்லை.
உடுமலை:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உயிர்கொல்லி நோயான நிபா வைரசுக்கு இரண்டு பேர் பலியானார்கள். அதைத் தொடர்ந்து சுகாதாரத் துறையினரால் தமிழக கேரளா எல்லையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு உள்ளது.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையான ஒன்பதாறு சோதனைச் சாவடியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சல் கண்காணிப்பு பணியை தொடங்குமாறு மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில் ஒன்பதாறு சோதனை சாவடியில் பரிசோதனை மேற்கொள்வதற்கு மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர்,செவிலியர் அடங்கிய மருத்துவக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.அந்த குழுவினர் 24 நேரமும் கேரளாவில் இருந்து கேரளாவில் தமிழகத்திற்குள் வருகின்ற வாகன ஓட்டிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் நிபா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அப்போது காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடுமலை அரசு ஆஸ்பத்திரி மற்றும் அமராவதி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பரிந்துரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.நேற்று நடைபெற்ற முகாமில் 111 வாகனங்களில் தமிழகத்திற்கு வருகை தந்த 526 பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அப்போது யாருக்கும் காய்ச்சல் கண்டறியப்படவில்லை. இந்த பணியில் சுகாதாரத் துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள உடுமலை தீயணைப்பு துறை உபகரணங்களுடன் தயாராக உள்ளது.
- தீயணைப்புத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உடுமலை:
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு தீயணைப்புத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் படி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சென்னை இயக்குனர் உத்தரவின் படியும் திருப்பூர் மாவட்ட தீயணைப்பு அதிகாரி இரா. அப்பாஸ் அறிவுறுத்தலின்படி உடுமலை தீயணைப்பு நிலைய அதிகாரி கோபால் தலைமையில் நேற்று அலுவலகத்தில் தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட சிறப்பு உபகரணங்கள் சோதனை செய்யப்பட்டது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள உடுமலை தீயணைப்பு துறை உபகரணங்களுடன் தயாராக உள்ளதாக நிலைய அதிகாரி தெரிவித்தார்.






