search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருப்பூருக்கு 3 லட்சம் விண்ணப்பங்கள்
    X

    கோப்புபடம்

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருப்பூருக்கு 3 லட்சம் விண்ணப்பங்கள்

    • 18 வயது நிரம்பியவர்கள் இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
    • வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் அடுத்த மாதம் முதல் நடைபெற இருக்கிறது.

    திருப்பூர்:

    வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2024 பட்டியல் வருகிற அக்டோபர் மாதம் 17-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. 1-1-2024 அன்று 18 வயது நிரம்பியவர்கள் இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு சுருக்க முறை திருத்த பட்டியல் வெளியான பிறகு வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் அடுத்த மாதம் முதல் நடைபெற இருக்கிறது.

    இதற்காக திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பெயர் சேர்ப்பு, மாற்றம், திருத்தப்பணிகளை மேற்கொள்ளும் படிவங்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவுக்கு வந்துள்ளது. பெயர் சேர்த்தலுக்கான படிவம்-6 விண்ணப்பங்கள் 1 லட்சம் வரவழைக்கப்பட்டுள்ளது. இதுதவிர பெயர் நீக்கத்துக்கான படிவம்-7, முகவரி மாற்றம், சட்டமன்ற தொகுதி மாற்றம், திருத்தப்பணிகளுக்கான படிவம்-8 என மொத்தம் 3 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    இந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலகத்துக்கு திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகத்தில் இருந்து பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது.

    Next Story
    ×