search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மொடக்குப்பட்டியில் நாளை மின்தடை
    X

    கோப்புபடம்

    மொடக்குப்பட்டியில் நாளை மின்தடை

    • துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • மின்பாதைகளுக்கு அருகில் உள்ள மரங்களின் கிளையை வெட்ட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    உடுமலை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உடுமலை உதவி செயற்பொறியாளர் பெ.அய்யப்பராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    பூலாங்கிணர் துணை மின் நிலையம் டி.எம்.நகர் பீடருக்கு உட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை மொடக்குப்பட்டி, பாப்பனூத்து, அமண சமுத்திரம், திருமூர்த்தி நகர், பொன்னாலம்மன் சோலை ஆகிய பகுதியில் மின் வினியோகம் இருக்காது.

    அப்போது மின்பாதைகளுக்கு அருகில் உள்ள மரங்களின் கிளையை வெட்டுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×