search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Silkworm"

    • 1.65 லட்சம் புழுக்கள் திடீரென இறந்ததால் ரூ.1.75 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.
    • புழு வளர்ப்பு மனைக்கு 10 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    உடுமலை:

    தமிழகத்தில் 44 ஆயிரத்து 417 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு 25,259 புழு வளர்ப்பு மனைகளில் நாள் தோறும் 10 ஆயிரம் டன் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.பட்டு வளர்ச்சித்துறை சார்பில், கோவை, ஈரோடு, தாளவாடி ஆகிய வித்தகங்களில் முட்டை உற்பத்தி செய்யப்பட்டு இளம்புழு வளர்ப்பு மனைகளுக்கு வழங்கப்படுகிறது.

    இங்கு 7 நாட்கள் புழு வளர்க்கப்பட்டு, வினியோகம் செய்யப்படுகிறது. பட்டு புழு வளர்ப்பு மனைகளில் 22 நாட்கள் பராமரிக்கப்பட்டு பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது. இத்துறையில் அரசு சார்பில் உற்பத்தி செய்து வழங்கப்படும் முட்டைகள் தரமற்றதாக உள்ளதால் கூடு கட்டும் பருவத்தில் கூடு கட்டாமல் புழுக்கள் திடீரென இறந்து வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    கடந்த வாரம் உடுமலை கண்ணமநாயக்கனூர் விவசாயி யோகேஸ்வரனுக்கு சொந்தமான புழு வளர்ப்பு மனையில், ஒரு முட்டை தொகுதிக்கு 550 புழுக்கள் வீதம் 300 முட்டை தொகுதியில் 1.65 லட்சம் புழுக்கள் திடீரென இறந்ததால் ரூ.1.75 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.

    மேலும் இரு புழு வளர்ப்பு மனைகளில், புழுக்கள் திடீரென இறந்தன. ஆண்டியகவுண்டனூர் பெரிசனம்பட்டியை சேர்ந்த, விவசாயி லோகநாதன் புழு வளர்ப்பு மனையில் கூடு கட்டும் பருவத்தில் இருந்த புழுக்கள் இறந்தன. இங்கு 150 முட்டை தொகுதிகளில் 82 ஆயிரம் புழுக்கள் வரை இறந்துள்ளன.

    எலையமுத்தூர் செல்வராஜ் புழு வளர்ப்பு மனையில், 100 முட்டை தொகுதிகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் 55 ஆயிரம் புழுக்கள் வரை இறந்தன. இதனால் 3 லட்சம் ரூபாய் வரை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழக பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நல சங்கத்தலைவர் செல்வராஜ் கூறியதாவது:-

    தரமற்ற பட்டு புழு முட்டை வினியோகம், இளம்புழு வளர்ப்பு மனை கண்காணிப்பில் அதிகாரிகள் அலட்சியம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் பட்டுக்கூடு உற்பத்தி தொழில் வீழ்ச்சியடைந்து வருகிறது.ஏறத்தாழ 50 சதவீதம் விவசாயிகள் தற்போது இத்தொழிலை விட்டுச்செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தரமற்ற முட்டை உற்பத்தி செய்து வினியோகம் செய்வதால் புழுக்கள் கூடு கட்டாமல் திடீரென இறந்து வருகின்றன.

    புழு வளர்ப்பு மனைக்கு 10 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து புழு வளர்ப்பின் போது திடீரென இறப்பதால் ஒவ்வொரு மனைகளிலும் ரூ. 1.50 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை ஒரு பேட்ச் வளர்க்கும் போதும் நஷ்டம் ஏற்படுகிறது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் கடந்த சில மாதங்களில் பாதித்துள்ளனர். தரமான முட்டை வினியோகிக்கவும், இளம் புழு வளர்ப்பு மனைகளை கண்காணித்து விவசாயிகளுக்கு தரமான புழு வினியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

    பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கவும், பட்டு வளர்ச்சித்துறை சார்பில் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தப்பட்டு வந்த நிலையில் நடப்பாண்டு விவசாயிகளிடமிருந்து ரூ.290 வசூலிக்கப்பட்டது. 5 மாதமாகியும் இத்தொகையும் உரிய இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் செலுத்தி காப்பீடு செய்யவில்லை. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • பட்டு புழு வளர்ப்பு மனைகளில் 21 நாட்களில் புழு வளர்ந்து கூடு கட்டியதும் விற்பனைக்கு தயாராகிறது.
    • புழு வளர்ப்பு மனைகளில் 80 சதவீதம் வரை மகசூல் பாதித்து வருகிறது.

    உடுமலை:

    மாநில அளவில் வெண் பட்டுக்கூடு உற்பத்தியில் திருப்பூர் மாவட்டம் உடுமலை பிரதானமாக உள்ளது. உடுமலை, பல்லடம், பொள்ளாச்சி, பழனி உள்ளிட்ட பகுதிகளில் 2,778 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி செடி சாகுபடி செய்யப்பட்டு 1,221 பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் உள்ளன. இவற்றின் வாயிலாக மாதம் தோறும், பல டன் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.

    பட்டுப்புழு முட்டை உற்பத்தி மையங்களில் இருந்து முட்டை தொகுதிகளை பெற்று இளம் புழு வளர்ப்பு மனைகளில் 5 நாட்கள் வரை பாதுகாப்பாக வளர்த்து, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. பட்டு புழு வளர்ப்பு மனைகளில் 21 நாட்களில் புழு வளர்ந்து கூடு கட்டியதும் விற்பனைக்கு தயாராகிறது.

    இளம்பட்டு புழு வளர்ப்பு மனைகளில் இருந்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் புழு தரமற்றதாக உள்ளதால் தற்போது பெரும்பாலான மனைகளில் வளர்க்கப்பட்ட புழுக்கள் திடீரென இறக்கின்றன.நூற்றுக்கணக்கான புழு வளர்ப்பு மனைகளில் 80 சதவீதம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்க மாநில தலைவர் செல்வராஜ் கூறியதாவது:-

    தரமற்ற பட்டுப்புழு முட்டை வினியோகம், இளம் பட்டுப்புழு வளர்ப்பு மனைகளில் தரமற்ற புழு வழங்கப்படுவதால் ஒரு சில நாட்களிலும் ஒரு சில பகுதிகளில் கூடு கட்டும் பருவத்திலும் புழுக்கள் இறந்து வருகின்றன. இதனால் புழு வளர்ப்பு மனைகளில் 80 சதவீதம் வரை மகசூல் பாதித்து வருகிறது.

    ஒரு ஏக்கர் மல்பெரி சாகுபடி செய்தால் ஒரு முட்டை தொகுப்புக்கு 450 முதல் 500 முட்டைகள் என 125 முட்டை தொகுதிகள் வளர்த்தால் 21 நாட்களில் 125 கிலோ பட்டுக்கூடு உற்பத்தியாக வேண்டும்.தற்போது 25 கிலோ கூட உற்பத்தியாவதில்லை. உடுமலை கோட்டமங்கலம் பகுதியில் விவசாயிகள் பாதித்துள்ளனர். இது குறித்து பட்டு வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை.

    எனவே விஞ்ஞானிகள், அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து பாதிக்கப்பட்ட பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் அனைத்தையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வீரியம் மிக்க முட்டை தொகுதி உற்பத்தி செய்யவும், இளம்புழு வளர்ப்பு மனைகளை கண்காணித்து தரமான புழுக்களை வினியோகிக்க வேண்டும்.

    பட்டுப்புழு வளர்ப்பு மனைகளுக்கான இன்சூரன்ஸ், கடந்த ஜனவரி மாதம் காலாவதியாகியுள்ள நிலையில் உடனடியாக புதுப்பிக்க வேண்டும். அதேபோல் ஒரு கிலோ கூடு 500 ரூபாய்க்கு குறைவாக விற்பனையாகிறது. உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பட்டு புழுவிற்கு உணவான மல்பெரி 44 ஆயிரத்து 417 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • 22,269 விவசாயிகள் பட்டு புழு வளர்ப்பு மனை அமைத்து, கூடு உற்பத்தி செய்து வருகின்றனர்.

    உடுமலை :

    தமிழகத்தில் பட்டு கூடு உற்பத்தி வளர்ச்சியடைந்து வரும் தொழிலாக உள்ளது. இங்கு 22 ஆயிரத்து 269 விவசாயிகள் பட்டு புழு வளர்ப்பு மனை அமைத்து, கூடு உற்பத்தி செய்து வருகின்றனர்.பட்டு புழுவிற்கு உணவான மல்பெரி 44 ஆயிரத்து 417 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உடுமலை, பொள்ளாச்சி, பழநி, பல்லடம், சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வெண் பட்டுக்கூடு உற்பத்தி பிரதானமாக உள்ளது.

    தமிழகத்தில் தினமும் சராசரியாக 10 ஆயிரம் கிலோ பட்டுக்கூடு உற்பத்தி யாகிறது. மாநில பட்டு வளர்ச்சித்து றை சார்பில் அமைக்க ப்பட்டுள்ள, 8 விற்பனை கூடங்கள் மற்றும் கர்நாடக மாநில மார்க்கெட்களுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்று வருகின்றனர்.

    கடந்த பிப்ரவரி ஒரு கிலோ பட்டுக்கூடு 700 முதல், 800 ரூபாய் வரை விற்றது. வியாபாரிகள் சிண்டிகேட் காரணமாக திடீரென குறைந்த பட்டு நூல் விலையால், பட்டுக்கூ டுகளின் விலையும் கடும் சரிவை சந்தித்தது. இதனால் பட்டுக்கூடு உற்பத்தி விவ சாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து தமிழக பட்டுக்கூடு உற்பத்தி விவ சாயிகள் நலச்சங்க தலைவர் செல்வராஜ் கூறிய தாவது:- பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் சீதோஷ்ண நிலை மாற்றம், நோய் தாக்குதல், நிலையில்லாத விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வருகின்ற னர்.தமிழகத்திலுள்ள பட்டுக்கூடு அங்காடிகளில் உரிய விலை கிடைக்காததால் பெரும்பாலான விவசாயிகள் கர்நாடக மாநிலத்திற்கு விற்பனைக்கு கொண்டு செல்லும் சூழல் உள்ளது.கர்நாடக மாநிலத்தில் பட்டுக்கூடு, பட்டுநூல் உற்பத்தி பிரதானமாக உள்ள நிலையில் அம்மாநில அரசு, விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ. 50 ஊக்கத்தொகை வழங்கு கிறது.ஆனால் தமிழக மார்க்கெட்களில் பட்டுக்கூடுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. ஒரு கிலோவுக்கு 100 முதல் 200 ரூபாய் வரை குறைவாகவே கிடைத்து வருகிறது.

    இதனால் இங்குள்ள விவசாயிகள் 60 சதவீதம் பேர், கர்நாடக மார்க்கெ ட்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இதனால் தமிழக அரசு க்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுவதோடு விவ சாயிகளும் பல கி.மீ.,தூரம் கடந்து வேறு மாநிலத்திற்கு பட்டுக்கூடு விற்பனைக்கு கொண்டு செல்லும் அவலம் நீடிக்கிறது.கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடக மார்க்கெட்டிலும், அதனை தொடர்ந்து தமிழகத்திலும், பட்டு நூல்விலை திடீரென குறைந்தது, பட்டுக்கூடு விலை கடுமையான சரிவை சந்தித்தது. கிலோ ரூ. 400-450 ஆக குறைந்தது.

    உடனடியாக கர்நாடக மாநில விவசாயிகளிடம், அம்மாநில அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி கர்நாடக மாநில கச்சா பட்டு விற்பனை கமிட்டி வாயிலாக கச்சா பட்டு நூல் கொள்முதல் செய்யப்பட்டது.ஒரு சில நாட்களில் அம்மாநிலத்தில் பட்டுக்கூடு விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில், பட்டுக்கூடு விலை உயரவில்லை.

    தற்போதைய நிலவரப்ப டி, சராசரியாக ஒரு கிலோ, கோவை மார்க்கெட்டில் ரூ.469, உடுமலை ரூ.543, தேனி, ரூ.560 என்ற அளவிலேயே விலை காணப்பட்டது.

    இளம் புழு, இடு பொருள், மல்பெரி உரம், ஒரு மாதம் வளர்ப்பு மனை பராமரிப்பு, கூலி என உற்பத்தி செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில் விலை சரிவால் பட்டு க்கூடு உற்பத்தி விவசாயி கள் கடுமையாக பாதிக்க ப்பட்டுள்ளனர்.எனவே கர்நாடக அரசை, தமிழக அரசும் பின்பற்றி பட்டு க்கூடுகளுக்கு உரிய விலை கிடைக்கவும், ஊக்க த்தொகை வழங்கவும், வியாபாரிகள் சிண்டிகேட் காரணமாக, பட்டு நூல் விலை சரிவை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பட்டு வளர்ச்சித்துறை சார்பில் வழிகாட்டுதல் மற்றும் மானியத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
    • பருவ மழை சீசன் மற்றும் இதர காரணங்களால் வெண்பட்டுக்கூடு விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    உடுமலை :

    தமிழகத்தில் வெண்பட்டுக்கூடு உற்பத்தியில் உடுமலை பகுதி முன்னிலையில் உள்ளது. சுற்றுப்பகுதியில் 2,500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் மல்பெரி சாகுபடி செய்து விவசாயிகள் வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டுக்கூடு உற்பத்தி மட்டுமல்லாது அது சார்ந்த, இளம்புழு வளர்ப்பு மனை (ஜாக்கி சென்டர்), ரீலிங் யூனிட் அமைக்கவும், விவசாயிகளுக்கு மத்திய அரசின் பட்டுவாரியம் மற்றும் மாநில அரசின்  பட்டு வளர்ச்சித்துறை சார்பில் வழிகாட்டுதல் மற்றும் மானியத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    பட்டுக்கூடு விலை வீழ்ச்சியின் போதும் பருவ மழை சீசன் மற்றும் இதர காரணங்களால் வெண்பட்டுக்கூடு விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அப்போது மாற்றுத்தொழிலுக்கும் செல்ல முடியாமல் அதிக பாதிப்பை அவர்கள் சந்திக்கின்றனர்.

    இந்நிலையில் பட்டுக்கூடு உற்பத்தி சார்ந்து பெறப்படும் கழிவுகளையும், மதிப்பு கூட்டி வருவாய் ஈட்டலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த திட்டங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்தாலும் விவசாயிகளிடையே போதிய விழிப்புணர்வு இல்லை.

    தற்போது உடுமலை வட்டாரத்தில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பட்டுப்புழுவியல் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.இம்மாணவர்கள் உடுமலை பகுதியில் பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுடன் நேரடியாக கலந்தாய்வு நடத்தி பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளனர். மேலும் இத்தொழிலில் கூடுதல் வருவாய் கிடைப்பதற்கான வழிகாட்டுதல்களையும் பட்டு வளர்ச்சித்துறையினருடன் ஆலோசித்து, விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.மாணவர்கள் நந்தகுமார், அபிஷேக், அருண், அஸ்வின், இலியாஸ், மவுலிதர்ஷன் கூறியதாவது:-

    பட்டுக்கூடு உற்பத்தி செய்வதிலேயே விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அதிலிருந்து கிடைக்கும் மற்ற பொருட்களை கழிவுகளாகவே எண்ணுகின்றனர். இவ்வகையான பொருட்களை மதிப்பு கூட்டுவதால் கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.பெரும்பாலான பட்டு விவசாயிகள், புழுவளர்ப்பு மனை கழிவுகளான மல்பெரி குச்சிகள், இலைகள் போன்றவற்றை வீணாக எரிக்கின்றனர்.

    ஆனால் இவற்றை ப்ரிக்வெட் யூனிட்டுகளாக மாற்றி விற்பனை செய்யலாம். சுருக்கப்பட்ட மரக்கழிவுகள் எரிப்பொருள்களாக பயன்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக டன்னுக்கு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை மாத வருமானம் கிடைக்கும்.

    பட்டுக்கூடுகளை நூலாக மாற்றும், நூற்பாலைகளில் கூட்டுப்புழுக்களை பயன்படுத்துவதில்லை. இந்த புழுக்களை வீணடிப்பதை தவிர்த்து கூட்டுப்புழு எண்ணெய், கூட்டுப்புழு எண்ணெய் சோப்பு போன்றவற்றை தயாரிக்கலாம். மல்பெரி பழங்களில் இருந்து ஜாம், ஜெல்லி, ஜூஸ் மற்றும் மல்பெரி இலைகளில் இருந்து தேநீர் பொடி ஆகியவையும் தயார் செய்து பயன்படுத்தலாம்.வீணாகும் பட்டுக்கூடுகளிலிருந்து பட்டுக்கூடு மாலை, பட்டுப்பூக்கூடை போன்றவை தயாரிக்கலாம்.இத்தகைய தயாரிப்புகளுக்கு, மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பட்டுப்புழுவியல் துறையில் அனுபவம் பெற்ற ஆசிரியர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றனர்.

    • பட்டு புழு வளர்ப்பு மனைகளில் 21 நாட்களில் புழு வளர்ந்து கூடு கட்டி விற்பனைக்கு தயாராகும்.
    • பட்டுக்கூடுக்கு உரிய விலை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உடுமலை:

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் வெண் பட்டுக்கூடு உற்பத்தி தொழில் அதிக அளவு உள்ளது. மாவட்டத்தில் 2,778 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி செடி சாகுபடி செய்யப்பட்டு 1,221 பட்டு புழு வளர்ப்பு மனைகள் வாயிலாக மாதம் தோறும் பல டன் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.மத்திய, மாநில அரசுகளின் பட்டு வளர்ச்சித்துறையால் அமைக்கப்பட்டுள்ள முட்டை வித்தகங்களிலிருந்து இளம் புழு வளர்ப்பு மனைகளில் முட்டை பொரித்து 7 நாட்கள் பராமரித்து பட்டுக்கூடு உற்பத்தி மனை அமைந்துள்ள விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.பட்டு புழு வளர்ப்பு மனைகளில் 21 நாட்களில் புழு வளர்ந்து கூடு கட்டி விற்பனைக்கு தயாராகும்.

    கடந்த சில மாதங்களாக பட்டுக்கூடு கிலோ 500 ரூபாய் வரை மட்டுமே விற்று வந்த நிலையில் தற்போது விவசாயிகள் உற்பத்தி செய்யும் பட்டுக்கூடுகளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. கர்நாடக மாநிலம் ராம்நகர் மார்க்கெட்டில் கிலோ 750 முதல் 800 வரை விற்கிறது. உடுமலை மார்க்கெட்டில் 574 முதல் 650 ரூபாய் என தமிழக மார்க்கெட்களில் சராசரியாக 650 ரூபாய் வரை விற்று வருகிறது. ஆனால் விலை உயர்ந்தாலும் மகசூல் குறைவு காரணமாக விவசாயிகள் பாதித்துள்ளனர். சீதோஷ்ண நிலை மாறி பனிப்பொழிவு காணப்படுவதால் மல்பெரி செடிகளில் குருத்தடி புழு தாக்குதல் அதிகரித்துள்ளது.

    மேலும் பட்டுப்புழு வளர்ப்பு மனைகளில் பெருமளவு புழுக்கள் கூடு கட்டாமலும் இறந்தும் சுண்ணாம்பு கட்டி நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் 25 சதவீதம் வரை உற்பத்தி குறைந்துள்ளது.

    இது குறித்து பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் கூறியதாவது:-

    குளிர் சீதோஷ்ண நிலை காரணமாக பட்டு புழு வளர்ப்பு மனைகளில் உற்பத்தி பெருமளவு பாதித்துள்ளது.100 முட்டை தொகுதியில் வழக்கமாக 80 முதல் 90 கிலோ வரை மகசூல் இருக்கும் மனைகளில் தற்போது 70-75 கிலோ மட்டுமே உற்பத்தியாகிறது. இதனால் விலை உயர்ந்தாலும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அதே போல் கர்நாடக மாநிலத்தில் கூடுதல் விலை கிடைத்து வரும் நிலையில் தமிழகத்தில் பட்டு நூல் உற்பத்தி நிறுவனங்கள் குறைவு காரணமாகவும் வியாபாரிகள் சிண்டிகேட் காரணமாகவும் போதிய விலை கிடைப்பதில்லை. எனவே பட்டுக்கூடுக்கு உரிய விலை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பட்டுக்கூடு விவசாயிகளுக்கு உரிய தொழில் நுட்ப உதவிகள், முட்டை, இளம்புழு வளர்ப்பு மனை, பட்டுப்புழு வளர்ப்பு மனை ஆகியவற்றின் பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட பட்டு புழு வளர்ப்பு தொழிலுக்கான உபகரணங்கள் மானிய விலையில் வழங்கவும், பட்டுக்கூடு அங்காடிகளுக்கு தேவையான நிதி உதவி, உற்பத்தியாளர்களுக்கு பட்டுக்கூடு கொள்முதல் மானியம் உள்ளிட்ட உதவிகளை அரசு வழங்க வேண்டும்.

    இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    • பட்டுக்கூடு வெளி மாநிலங்களுக்குச்செல்வதால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடமிருந்து வசூலிக்கும் 'செஸ்' வரியும் இழப்பு ஏற்படுகிறது.
    • நூல் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் சிண்டிகேட் அமைக்காமல் கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கும் கூடுதல் விலை கிடைக்கும்.

     உடுமலை : 

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் வெண்பட்டுக்கூடு உற்பத்தி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ 1,500 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்பெரி சாகுபடி உள்ளது.1,200க்கும் மேற்பட்ட பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் வாயிலாக, பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.இளம் புழு வளர்ப்பு மனைகளில், முட்டையில் இருந்து 7 நாட்கள் வளர்ந்த புழுக்கள் வாங்கி வந்து, மனைகளில் 22 நாட்கள் வளர்க்கும் போது கூடு உற்பத்தியாகிறது.

    இப்பகுதிகளில் உற்பத்தியாகும் பட்டுக்கூடுகள், உடுமலை மைவாடி, கோவை,சேலம், ஓசூர், ராசிபுரம் உள்ளிட்ட பட்டுக்கூடு மார்க்கெட்களுக்கு விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு சென்று வந்தனர்.

    தற்போது தமிழகத்தில் பட்டுவளர்ச்சித்துறை அதிகாரிகள் உரிய விலை நிர்ணயிப்பதில் குளறுபடி, தொகை வழங்குவதில் தாமதம் மற்றும் வியாபாரிகள் சிண்டிகேட் காரணமாக கர்நாடகா மாநிலம், ராம் நகர் பட்டுக்கூடு மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    இது குறித்து தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது: - தமிழகத்திலுள்ள பட்டுக்கூடு விவசாயிகள் உற்பத்தி செய்யும் பட்டுக்கூடுகளை அருகிலுள்ள பட்டு வளர்ச்சித்துறை கொள்முதல் மையங்களில் விற்பனை செய்து வந்தனர்.தற்போது விலை நிர்ணயிப்பதில் உள்ள குளறுபடி மற்றும் வியாபாரிகள் சிண்டிகேட் காரணமாக குறைந்த விலை மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது.

    தமிழக மையங்களில் 600 முதல் 650 வரை கிலோவுக்கு நிர்ணயிக்கப்படும் நிலையில் கர்நாடகா மாநிலம் ராம் நகரில் 800 முதல் 900 ரூபாய் வரை அதே பட்டுக்கூடு விற்பனையாகிறது.கடந்த சில நாட்களுக்கு முன் கோவை மார்க்கெட்டில் கிலோ 590 நிர்ணயிக்கப்பட்டது. அதே பட்டுக்கூட்டை 722 ரூபாய்க்கு ராம் நகரில் அதே விவசாயி விற்றுள்ளார்.

    இது குறித்து ஆவணங்களை, பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம். ஒரு விவசாயி ஆயிரம் கிலோ வரை பட்டுக்கூடு கொண்டு சென்றால், பல ஆயிரம் ரூபாய் கூடுதலாக கிடைக்கிறது. இவ்வாறு, தமிழகத்திலிருந்து ராம்நகருக்கு தற்போது நாள் தோறும் 100 டன் வரை பட்டுக்கூடு விற்பனைக்கு செல்கிறது.

    அதே போல் தமிழகத்தில் பட்டுக்கூடு வழங்கினால், உரிய தொகை வழங்க பல வாரங்கள் தாமதமாகிறது. ஆனால் கர்நாடகா மையங்களில் சில மணி நேரங்களில், விவசாயிகள் வங்கிக்கணக்கில் தொகை வரவு வைக்கப்படுகிறது.இதனால் இப்பகுதிகளிலுள்ள விவசாயிகள் தற்போது ஒருங்கிணைந்து லாரிகளை வாடகைக்கு ஏற்பாடு செய்து வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    கோலார், ராம்நகர் மட்டுமல்லாது திருநெல்வேலி பகுதியிலிருந்து ஆந்திரா மாநிலம் என அண்டை மாநிலங்களுக்கு உற்பத்தியாகும் பட்டுக்கூடுகள் 75 சதவீதம் அருகிலுள்ள மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் சூழல் உள்ளது. தூரம் அதிகரித்தாலும், ஒவ்வொரு விவசாயிகளுக்கும் கொண்டு செல்லும் பட்டுக்கூடுகளுக்கு ஏற்ப பல ஆயிரம் ரூபாய் கூடுதலாக கிடைக்கிறது.

    பட்டுக்கூடு வெளி மாநிலங்களுக்குச்செல்வதால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடமிருந்து வசூலிக்கும் 'செஸ்' வரியும் இழப்பு ஏற்படுகிறது.நூல் விலை உயர்ந்துள்ள நிலையில், நூல் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் சிண்டிகேட் அமைக்காமல் கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கும் கூடுதல் விலை கிடைக்கும்.

    வெளி மாநில மார்க்கெட் நிலவரம், உற்பத்தி செலவினத்தை கருத்தில் கொண்டு தமிழக பட்டுவளர்ச்சித்துறை அதிகாரிகள் விலை நிர்ணயம் செய்யவும் கொள்முதல் செய்யப்படும் பட்டுக்கூடுக்கு உடனடியாக தொகை வழங்கவும் நடவடிக்கை எடுத்தால் தமிழக பட்டுக்கூடு மார்க்கெட்களுக்கும் வரத்து அதிகரிக்கும்.விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு சட்டப்படி மறுபடியும் மல்பரி விவசாயத்திற்கும் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.
    • இயற்கை உரத்திற்கு மானியம் மற்றும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

    உடுமலை :

    உடுமலையில் தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் மத்தியப்பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி விரிவாக்க மையம் முன்பு கவன ஈர்ப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    உடுமலை அன்சாரி வீதி யில் உள்ள மத்தியப்பட்டு வளர்ப்பு விரிவாக்கம் மையம் முன்பு நடைபெற்ற கவன ஈர்ப்பு கூட்டத்திற்கு சங்க ஆலோசகர் ஏ. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில தலைவர் எம். செல்வராஜ் மாநிலச் செயலாளர் என். பொன்னுச்சாமி மாநில பொருளாளர் வி. கனகராஜ் சங்க ஒருங்கிணைப்பாளர் பி. செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.புதிய வீரியம்மிக்க தரமான முட்டைகள் வழங்க வேண்டும். பட்டுக்கூடுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஒரு கிலோ கூட்டிற்கு ரூ. 50 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். செயற்கை உரத்திற்கு மானியம் வழங்குவது போல் இயற்கை உரத்திற்கு மானியம் மற்றும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

    மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு சட்டப்படி மறுபடியும் மல்பரி விவசாயத்திற்கும் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும். காலசூழலுக்குஏற்ப விழிப்புணர்வு கூட்டங்களை விவசாயிகளுக்கு முன்கூட்டியே அறிவித்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பட்டுக்கூடு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் நாச்சிமுத்து, குமரவேல் ,நடராஜ் உட்பட தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாய நல சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    • பட்டு வளர்ச்சித்துறை சார்பில் மானியத்திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
    • மல்பெரி இலைகளே தரமான வெண்பட்டுக்கூடு உற்பத்திக்கு ஆதாரமாக உள்ளது.

    உடுமலை,

    உடுமலை சுற்றுப்பகுதியில் 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக,மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் வெண்பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வகை வெண்பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட முன்பு விவசாயிகள் அதிக தயக்கம் காட்டி வந்தனர்.

    இதையடுத்து மத்திய பட்டு வாரியத்தின் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம் மற்றும் மாநில அரசின் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் மானியத்திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.எனவேஇத்தொழிலில்ஈடுபடும் விவசாயிகள் எண்ணிக்கை அதிகரித்து தமிழகத்தில்வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியில், உடுமலை பகுதி முன்னிலை பெற்றது.பிற மாநிலங்களில் இருந்து உடுமலைக்கு வந்து மல்பெரி தோட்ட பராமரிப்பு, புழு வளர்ப்பு மனை பராமரிப்பு, அறுவடை தொழில்நுட்பங்கள் குறித்து கற்றுச்செல்லும் அளவுக்குஇப்பகுதி இத்தொழிலில் முன்னிலையில் இருந்தது.

    கடந்த சில ஆண்டுகளாக மல்பெரி வளர்ப்பு, இளம்புழு பராமரிப்பு, நோய்த்தாக்குதல் கட்டுப்பாடு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் முறையாக கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.பெருந்தொற்று பரவல் ஊரடங்கு காலத்தில் பட்டுக்கூடுகளை சந்தைப்படுத்த, சிரமம் நிலவியது.அப்போது விலை வீழ்ச்சி, விற்பனை சந்தை பிரச்னை காரணமாக இத்தொழிலை கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

    நீண்ட இடைவெளிக்குப்பிறகு வெண்பட்டுக்கூடுகள் விலை கிலோ 700 ரூபாய் அளவுக்கு உயர்ந்த போது உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.கடந்த சில மாதங்களாக உற்பத்தியை சீராக்க விவசாயிகள் பணிகளை மேற்கொண்டு வந்தனர். விலையும் நிலையாக கிடைக்கத்துவங்கியது. ஆனால் தற்போது, உடுமலை பகுதியிலுள்ள மல்பெரி தோட்டங்களில் இலைப்பேன் உள்ளிட்ட நோய்த்தாக்குதல் துவங்கி வேகமாக பரவி வருகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மல்பெரி இலைகளே தரமான வெண்பட்டுக்கூடு உற்பத்திக்கு ஆதாரமாக உள்ளது. பல்வேறு காரணங்களால், மல்பெரி செடிகளில் இலைப்பேன் தாக்குதல் வேகமாக பரவி வருகிறது. இவ்வகை பேன்கள் மல்பெரி இலைகளில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சிக்கொள்கிறது.எனவே தரமில்லாத மல்பெரி இலைகள் உருவாகிறது. இவ்வகை இலைகளை பட்டுப்புழுக்களுக்கு உணவாக அளித்தால், புழுக்களும் நோய்த்தாக்குதலுக்கு ஆளாகி தரமற்ற பட்டுக்கூடுகளே உற்பத்தியாகும்.கொழுந்து செடிகளில் இத்தாக்குதல் அதிகளவு காணப்படுகிறது. நோயை கட்டுப்படுத்த முடியாததால் இந்த சீசனில் பட்டுக்கூடு உற்பத்தி குறைந்து நஷ்டத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.பட்டு வளர்ச்சித்துறை சார்பில் முன்பு குறிப்பிட்ட இடைவெளிகளில் தொழில்நுட்ப விழிப்புணர்வு கூட்டங்கள் கிராமம் வாரியாக நடத்தப்படும். இதனால்அந்தந்த பகுதி விவசாயிகள் பயன்பெற்று வந்தனர்.மீண்டும் இத்தகைய கூட்டங்களை நடத்திதரமான மல்பெரி இலை, பட்டுக்கூடு உற்பத்திக்கு அரசு உதவ வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    ×