என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • கேமராவில் பதிவான திருடனை பிடிக்க தீவிரம்
    • பணத்தை அவரது ஸ்கூட்டர் இருக்கைக்கு அடியில் வைத்திருந்தார்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள மண்டலவாடி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்.முன்னாள் ராணுவ வீரர்.

    இவருடைய மனைவி சுவிதா (வயது 42) இவர் இன்று காலை ரூ.2½ லட்சம் பணத்துடன் சந்தை கோடியூரில் உள்ள வங்கிக்கு வந்தார். பணத்தை அவரது ஸ்கூட்டர் இருக்கைக்கு அடியில் வைத்திருந்தார்.

    வங்கியின் உள்ளே சென்று சுவிதா படிவத்தை நிரப்ப சென்றார். அந்த நேரத்தில் மர்ம நபர் ஒருவர் சுவீதாவின் ஸ்கூட்டரில் இருந்த ரூ.2½ லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டார். ஸ்கூட்டரில் இருந்த பணத்தை எடுப்பதற்காக சுவிதா வங்கியில் இருந்து வெளியே வந்தார்.

    அப்போது பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் .வங்கி முன்பு உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதில் பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் சுவிதாவின் ஸ்கூட்டரில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.இதன் மூலம் போலீசார் திருடனை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் ஜோலார்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 15-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் கோவிலை சுற்றி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தேசிய நெடுஞ்சாலைதுறையினர் பொக்லைன் எந்திரங்களை வைத்து அகற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் புத்துக்கோவில் பகுதியில் சென்னை - பெங்களூரு செல்லும் சர்வீஸ் சாலை யிலும், பெங்களூரு-சென்னை செல்லும் சர்வீஸ் சாலையிலும் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றும் பணிகள் 3-வது நாளாக நேற்று நடைபெற்றது.

    இதில் 15-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப் பட்டது. அம்பலூர் போலீசார் பாதுகாப்புடன் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

    • போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
    • வெளி மாநில மது கடத்திய தந்தை, மகன் கைது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே கர்நாடக மாநில மது பாட்டில்கள் கடத்தப்பட்டு வருவதாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு கிடைத்த தகவலின்பேரில் தனிப்படையினர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பால்நாங்குப்பம் பகுதியில் காரில் கடத்திவரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள 3,648 மது பாக்கெட்டுகள், 691லிட்டர் வெளிமாநில மதுபானம் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கடத்தலில் ஈடுபட்ட தந்தை - மகன் கைது செய்யப்பட்ட னர். சிறப்பாக செயல் பட்டு மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த சப்-இன்ஸ்பெக்டர் விஜய், முதல்நிலை காவலர் மனோகரன், காவலர்கள் ரூபன் மற்றும் சத்தி ஆகிய 4 பேரை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வரவழைத்து, போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், அவர் களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்ற அறிவுரைகள் வழங்கி ஊக்குவித்தார்.

    • டாக்டர்களுக்கு இணை இயக்குனர் அறிவுரை
    • நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் தினம்தோறும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதார மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து திடீரென நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    அங்கு டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் தங்களது ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்கின்றனரா என ஆய்வு செய்தார்.

    மேலும் புறநோயாளிகளிடமும் கர்ப்பிணிகள் அறுவை சிகிச்சை செய்து கொண்டு சிகிச்சை பெற்று வரும் தாய்மார்களிடமும் மற்றும் தங்கி உள்ள அனைத்து வார்டுகளில் நேரிடையாக சென்று டாக்டர்கள் அளிக்கும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

    அரசு மருத்துவமனை முழுவதும் தூய்மையாக வைத்து இருக்க இணை இயக்குனர் மாரிமுத்து டாக்டர்களிடம் கூறினார்.

    ஆய்வின் போது நாட்டறம்பள்ளி அரசு டாக்டர்கள் பாலகிருஷ்ணன், சுகாதார செவிலியர்கள் பணியாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்
    • ஜெயிலில் அடைப்பு

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது சின்ன பொன்னேரி பகுதியில் மது பாட்டில்கள் மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது சின்னபொன்னேரி பகுதியைச் சேர்ந்த கீதா (வயது 38) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மதுபாட்டில் களை மறைத்து விற்பனை செய்ததை கண்டுபிடித்து கீதாவை கைது செய்தனர்.

    அதேபோல் ரவிச்சந்திரன் மனைவி திலகவதியும் (45) மது விற்றபோது கைது செய்யப்பட்டார். இருவரிடமும் மதுபாட் டில்களை பறிமுதல் செய்தனர். கைதான இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு
    • மே தின பொதுக்கூட்டம் நடந்தது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் திருப்பத்தூர் சேலம் கூட்ரோடு அருகே நடைபெற்றது.

    திருப்பத்தூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் என். முனுசாமி தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் டி.டி.குமார் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் என். திருப்பதி, செல்வம், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் மகேந்திரன், முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி, வாணியம்பாடி தொகுதி ஜி. செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பேசினார்கள்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-

    சென்னையில் சிங்காரவேலன் சிலை திறந்து வைத்து மே தினத்திற்கு விடுமுறை அளித்தவர் அண்ணா, மே தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் உள்ள நழிவுற்ற தொழிலாளர்களுக்கு ரூபாய் ஒன்றரை கோடி நிதி வழங்கி வருகிறோம்.

    தமிழக அரசு 12 மணி நேரம் வேலை சட்டம் கொண்டுவரப்பட்டு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்து உள்ளது ஏமாற்றும் செயல்.

    பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்தது தி.மு.க. நீட் தேர்வுக்கு மகளிருக்கு உரிமைத் தொகை ரூ.1000, வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை.

    நிதி அமைச்சர் பேசிய ஆடியோ குறித்து தற்போது உண்மைத் தன்மை தெரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் குமார் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ஜி.ரமேஷ், கோ.வி.சம்பத்குமார், சி.ஏ.டெல்லி பாபு, உட்பட பலர் பேசினார்கள்.

    நிகழ்ச்சியில் மாவட்ட இணைச்செயலாளர் டாக்டர் லீலா, முன்னாள் அரசு வழக்கறிஞர் ரமேஷ், சுப்பிரமணியம், இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர் தம்பா கிருஷ்ணன், பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இறுதியில் வேலன் நன்றி கூறினார்.

    திருப்பத்தூரில் மழை பெய்து கொண்டிருந்தது அப்போதும் தொடர்ந்து பொதுக் கூட்டம் நடைபெற்றது.

    • போலீசார் பாது காப்புடன் நடந்தது
    • சர்வீஸ் சாலையிலும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டது

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே புத் துக்கோவில் பகுதியில் கோவில் சுற்றி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட் டிடங்களை தேசிய நெடுஞ் சாலை துறையினர் பொக் லைன் எந்திரங்களை வைத்து நேற்று முன்தினம் அகற்றினர்.

    தொடர்ந்து நேற்று 2-வது நாளாக புத்துக்கோவில் பகு தியில் சென்னை-பெங்களூரு செல்லும் சர்வீஸ் சாலையி லும், பெங்களூர்- சென்னை செல்லும் சர்வீஸ் சாலையி லும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டிருந்த கடைகள் அகற் றும் பணிகள் நடைபெற்றது.

    இதில் 10-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற் றப்பட்டது. வாணியம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், பழனி மற்றும் அம்பலூர் போலீசார் பாது காப்புடன் தொடர்ந்து ஆக் கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

    • வேளாண்மை இணை இயக்குனர் வேண்டுகோள்
    • மழைநீரை வீணாக்காமல் தடுத்து மண்ணுக்குள் இறங்கி மழைநீரை சேமிக்க கோடை உழவு உதவுகிறது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாவட்டத்தில் தற்போது கோடை மழை பரவலாகபெய்ய ஆரம்பித்துள்ளது. கோடை மழையை பயன்படுத்தி நிலத்தை உழவு செய்வதால் பல நன்மை கிடைக்கும்.

    கோடை காலங் களில் சாகுபடி நிலத்தை தரிசாக விடாமல் கோடை உழவு செய்வதன் மூலம் மேல் மண்ணை கீழாகவும் கீழ்மண்ணை மேலாகவும் புரட்டி விடுவதால் மண்ணின் நாள்பட்ட இறுக்கம் தளர்த்தப்பட்டு மண் இலகுவாகிறது. இதனால், மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது. மண்ணில் நீர்பிடிப்புத்தன்மை அதிகரிப்பதோடு, மழைநீரை வீணாக்காமல் தடுத்து மண்ணுக்குள் இறங்கி மழைநீரை சேமிக்க கோடை உழவு உதவு கிறது.

    மேலும், பயிரின் வேர் நன்கு ஆழமாக செல்ல இது வழி செய்கிறது.

    மண்ணில் உள்ள நோய் கிருமிகளும் பூச்சிகளின் முட்டைகள் கூட்டுப்புழுக்களும் நிலத்தில் உள்ள களைச்செ டிகளின் விதைகளும் வெளியே தள்ளப்பட்டு வெயிலின் வெம்மையால் அழிக்கப்பட்டு வரும் பருவத்தில் பூச்சி, நோய் தாக்குதலை குறைக்க உதவுகிறது. கோடை உழவு உழும்போது பயிரின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மண்ணிலிருந்து பயிருக்கு எளிதில் கிடைக்க உதவுகிறது. இது தவிர மண் அரிமானத்தைக் கட்டுப்படுத்தி மண்ணிலுள்ள பேரூட்ட மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் விரயமாவதை தடுக்கிறது.

    எனவே, திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் அனைவரும் கோடை உழவை செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தந்தை-மகன் கைது
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் கிராமத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மது பாக்கெட்டுகளை கார் மூலம் கடத்தி வந்து, ஆள் நடமாட்டம் இல்லாத தனி ஒரு ஷெட்டில் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட எஸ்.பி. தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் ஜோலார்பேட்டை போலீசார் பால்நாங்குப்பம் பகுதிக்கு சென்று நேற்று மாலை சோதனை மேற்கொண்டனர். அப்போது நிலத்தில் உள்ள தனி ஷெட் ஒன்றில் கார் மற்றும் 86 பாக்ஸ்கள் கொண்ட மது பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

    இதனை யடுத்து போலீசார் காரில் பதுக்கி வைத்த அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் (வயது 61) மற்றும் அவரது மகன் இளவரசன் (வயது 32) ஆகிய 2 பேரும் கர்நாடக மாநிலத்திலிருந்து 4704 மது பாக்கெட்டுகள் வாங்கி வந்து பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

    இதனையெடுத்து போலீசார் தந்தை, மகன் இருவரையும் கைது செய்து மது பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 70 பாட்டில்கள் பறிமுதல்
    • ஜெயிலில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது ரெட்டியூர் பகுதியில் அரசு மது பாட்டில்கள் கள்ளத்தனமாக விற்று கொண்டிருந்த மேலும் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் ரெட்டியூர் பகுதியில் சோதனை செய்தனர்.

    சின்ன கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சேட்டு (வயது 40) என்பவரை பிடித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    மேலும் அவரிடமிருந்து சுமார் 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ஜோலார்பேட்டை போலீசார் சேட்டு மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதேபோல் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அதிபெரமனூர் பகுதியில் அரசு மது பாட்டில்கள் விற்பனை செய்த நந்தகுமார் (33) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து சுமார் 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • 460 பேர் முகாமில் பங்கேற்றனர்
    • கண்ணாடி மற்றும் மருந்து மாத்திரைகள் போன்ற வற்றை பயன்படுத்த பரிந்துரை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட வக்கணம்பட்டி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் சென்னை தனியார் மருத்துவமனை மற்றும் லயன் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடைபெற்றது.

    இதில் லைன் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்தனர். 460 பேர் முகாமில் பங்கேற்றனர்.

    இதில் 42 பேர் இலவச கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

    மீதமுள்ள நபர்களுக்கு தனியார் மருத்துவக் குழுவினர் மூலம் கண்களை பரிசோதனை செய்து கண்ணாடி மற்றும் மருந்து மாத்திரைகள் போன்ற வற்றை பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டது.

    • ெரயில்வே நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
    • பயணிகள் வலியுறுத்தல்

    ஆம்பூர்:

    ஆம்பூரில் உள்ள பல்வேறு தோல் தொழிற்சாலைகள், காலணி தொழிற்சாலைகளின் தலைமை அலுவலகங்கள் சென்னையில் அமைந்துள்ளது.

    அதனால் ஆம்பூரிலிருந்தும் சென்னைக்கு ரயில் மூலம் பணியாளா்கள் சென்று வருகின்றனா். அதே போல வியாபார நிமித்தமாக ஆம்பூரிலிருந்து, வெளியூா்களுக்கும், வெளியூரிலிருந்து ஆம்பூருக்கும்வரும் வியாபாரிகள் ெரயில் சேவையை பயன்படுத்துகின்றனா்.

    மேலும், ஆம்பூரை சோ்ந்த கல்லூரி மாணவா்கள் பல்வேறு ஊா்களில் உள்ள கல்லூரிகளுக்கு ெரயில் மூலம் சென்று வருகின்றனா்.

    கடந்த கொரோனா பொது முடக்கத்தின் போது ெரயில், பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. பிறகு படிப்படியாக பொது போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

    ெரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு பிறகு மீண்டும் தொடங்கிய போது சில ெரயில்கள் ஏற்கனவே நின்று சென்ற ெரயில் நிலையங்களில் நின்று செல்வது தவிா்க்கப்பட்டது. அதனால் பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

    ஏற்கனவே ஏற்காடு எக்ஸ்பிரஸ் (22649 - 22650) காவேரி எக்ஸ்பிரஸ் (16021 - 16022), திருப்பதி எக்ஸ்பிரஸ் (16219) ஆகிய ெரயில்கள் ஆம்பூா் ெரயில் நிலையத்தில் பல ஆண்டுகளாக நின்று சென்றன.

    இதில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ெரயில் சென்னையில் இருந்து ஈரோட்டுக்கும், ஈரோட்டிலிருந்து சென்னைக்கும் இயக்கப்படுகிறது.

    காவேரி எக்ஸ்பிரஸ் ெரயில் மைசூரிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து மைசூருக்கும் இயக்கப்படுகிறது. திருப்பதி எக்ஸ்பிரஸ் கா்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படுகிறது.

    இந்த ரயில்கள் ஆம்பூா் ெரயில் நிலையத்தில் இரவு நேரத்தில் நின்று செல்லக் கூடியதாகும். இரவு நேரங்களில் ஆம்பூருக்கு வரும் பயணிகளுக்கு இந்த ெரயில்கள் பயனுள்ளதாக இருந்தன.

    கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு ெரயில் சேவை தொடங்கிய போதிலும், ஆம்பூரில் நின்று செல்வது தடைபட்டது. அதனால் ெரயில் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

    ஏற்கனவே ஆம்பூரில் நின்று சென்று, தற்போது நிற்காமல் செல்லும் ெரயில்களை பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் ஆம்பூரில் நின்று செல்ல ெரயில்வே நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ெரயில் பயணிகள் வலியுறுத்தினர்.

    ×