என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காரில் பதுக்கிய 4,704 கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் கிராமத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மது பாக்கெட்டுகளை கார் மூலம் கடத்தி வந்து, ஆள் நடமாட்டம் இல்லாத தனி ஒரு ஷெட்டில் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட எஸ்.பி. தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் ஜோலார்பேட்டை போலீசார் பால்நாங்குப்பம் பகுதிக்கு சென்று நேற்று மாலை சோதனை மேற்கொண்டனர். அப்போது நிலத்தில் உள்ள தனி ஷெட் ஒன்றில் கார் மற்றும் 86 பாக்ஸ்கள் கொண்ட மது பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதனை யடுத்து போலீசார் காரில் பதுக்கி வைத்த அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் (வயது 61) மற்றும் அவரது மகன் இளவரசன் (வயது 32) ஆகிய 2 பேரும் கர்நாடக மாநிலத்திலிருந்து 4704 மது பாக்கெட்டுகள் வாங்கி வந்து பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனையெடுத்து போலீசார் தந்தை, மகன் இருவரையும் கைது செய்து மது பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்