search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச கண் சிகிச்சை முகாம்
    X

    இலவச கண் சிகிச்சை முகாம்

    • 460 பேர் முகாமில் பங்கேற்றனர்
    • கண்ணாடி மற்றும் மருந்து மாத்திரைகள் போன்ற வற்றை பயன்படுத்த பரிந்துரை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட வக்கணம்பட்டி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் சென்னை தனியார் மருத்துவமனை மற்றும் லயன் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடைபெற்றது.

    இதில் லைன் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்தனர். 460 பேர் முகாமில் பங்கேற்றனர்.

    இதில் 42 பேர் இலவச கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

    மீதமுள்ள நபர்களுக்கு தனியார் மருத்துவக் குழுவினர் மூலம் கண்களை பரிசோதனை செய்து கண்ணாடி மற்றும் மருந்து மாத்திரைகள் போன்ற வற்றை பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டது.

    Next Story
    ×