search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
    X

    3-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    • 15-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் கோவிலை சுற்றி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தேசிய நெடுஞ்சாலைதுறையினர் பொக்லைன் எந்திரங்களை வைத்து அகற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் புத்துக்கோவில் பகுதியில் சென்னை - பெங்களூரு செல்லும் சர்வீஸ் சாலை யிலும், பெங்களூரு-சென்னை செல்லும் சர்வீஸ் சாலையிலும் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றும் பணிகள் 3-வது நாளாக நேற்று நடைபெற்றது.

    இதில் 15-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப் பட்டது. அம்பலூர் போலீசார் பாதுகாப்புடன் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

    Next Story
    ×