என் மலர்
திருப்பத்தூர்
- நீதிபதிகள் பாராட்டு
- பரிசுகள் வழங்கினார்
பரிசுகள் வழங்கினார்திருப்பத்தூர்:
திருப்பத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.
அதில் தலைவராக ஏ.ஞானமோகன், செயலாளராக எம்.முத்தமிழ் செல்வி, துணைத் தலைவராக பி.பால மணவாளன், பொருளாளராக சி.சேரன், உட்பட பல்வேறு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிர்வாகிகளுக்கு மாவட்ட கூடுதல் நீதிபதி எஸ் மீனா குமாரி, சார்பு நீதிபதி எஸ். அசின்பானு, உட்பட நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள், மூத்த வழக்கறிஞர்கள், பொதுமக்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். பின்னர் மூத்த வழக்கறிஞர்களை நீதிபதிகள் பாராட்டி பரிசுகளை வழங்கினார்கள்.
- தளபதி அறிவாலய திடலில் நடந்தது
- ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
வாணியம்பாடி:
ஆலங்காயம் மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் மதனாஞ்சேரி கிராமத்தில் உள்ள தளபதி அறிவாலய திடலில் திமுக அரசின் 2 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஒன்றிய கழக செயலாளர் மற்றும் வி.எஸ்.ஞானவேலன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி, தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தம்மாள் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் கணல் சுப்பிரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
ஒன்றிய நிர்வாகிகள் எம்.சி. ராமநாதன், வி.ஜி.அன்பு, ஷோபா வெங்கடேசன், லட்சுமி பொண்ணம்பலம். ஒன்றிய கவுன்சிலர் சாவித்திரி மகேந்திரன், பாமிதா ஆசிப், ஊராட்சிமன்ற தலைவர் ஈச்சங்கால் ஏழுமலை, முருகன், செல்வம், பள்ளிபட்டு செல்வம், மெக்கானிக் நாகராஜ், பத்தாப்பேட்டை ஜெயராமன், கிளை கழக நிர்வாகிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- கடந்த 5 ஆண்டுகளாக நடைபெறவில்லை
- கலை நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
திருப்பத்தூர்:
ஏலகிரி மலைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். விடுமுறை நாட்களில் அதிகமானோர் வந்து செல்கின்றனர்.
ஆலோசனை கூட்டம்
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ் வொரு ஆண்டும் 2 நாட்கள் கோடை விழா நடத்துவது வழக்கம். ஆனால் கொரோனா மற்றும் கோடை விழா அரங்கம் கட்டுதல் உள்ளிட்ட சில காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளாக ஏலகிரி மலையில் கோடை விழா நடத்தவில்லை.
இந்த ஆண்டு கோடை விழா நடத்துவது குறித்து கலெக் டர் பாஸ்கரன் பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அதிகாரி களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
அப்போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது:-
ஏலகிரி மலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கோடை விழாக்கள் தொடர்ந்து 2 நாட்கள் சிறப்பாக நடத்த வேண்டும். விழாகலையரங்கம் முன்பும், ஏலகிரி மலை அடிவாரத்திலும் அலங்கார வளைவு அமைக்க வேண் டும்.
இயற்கை பூங்காவில் (நேச்சுரல் பார்க்) தோட் டக்கலைத் துறை சார்பில் காய்கறிகளைக் கொண்டு விலங்குகள் மற்றும் பற வைகள் உள்ளிட்ட உருவம் அமைக்க வேண்டும். சுற் றுலாப் பயணிகளின் வச திக்காக திருப்பத்தூர், வாணியம்பாடி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏலகிரி மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்.
போக்குவரத்தை கட்டுப்படுத்தும் விதமாக வெளியூர்களில் இருந்து கார்களில் வரும் சுற்றுலா பயணிகள் மலை அடிவாரத்தில் காரை நிறுத்திவிட்டு பஸ்சில் மலைக்கு வந்தால் அவர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும். கார் நிறுத்துவதற்காக மலை அடி வாரத்திலும் பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும்.
கலை நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைஞர் களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.அரசு திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சி நடத்த வேண்டும். மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை போலீஸ் பாதுகாப்பு பணி யில் ஈடுபடுத்த வேண்டும். ஒரு பைக்கில் இருவர் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள்.
மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை சாலை ஓரங்களில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். ஏலகிரி மலை வனப்பகு தியில் தற்போது கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள் ளது. குறிப்பாக சுவாமி மலை அருகே அதிக அளவில் கரடிகள் உள்ள தால், வனத்துறை அனுமதி யின்றி சுற்றுலாப் பயணி கள் அங்கு செல்வதை தடுக்க வேண்டும்.
சனி மற்றும் ஞாயிறு 2 நாட்கள் நடக்கும் இந்த விழாவில், ஞாயிற் றுக்கிழமை அன்று சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள் அதற்கேற்ற வாறு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பிறகு ஏலகிரி மலை அடிவாரத் தில் இருந்து மலை உச் சிக்கு அரசு பஸ் தவிர்த்து மற்ற வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கக் கூடாது.
கலெக்டர் தகவல்
குழந்தைகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர் களை கவரும் விதமாக கலை நிகழ்ச்சி நடத்த வேண்டும்.குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் கோடை விழா நிகழ்ச்சி இம்மாதம் இறுதி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் (சனி,ஞாயிறு) இரு நாட்கள் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இன் னும் உறுதி செய்யவில்லை. மற்றொரு ஆலோசனை கூட்டம் ஏலகிரி மலையில் விரைவில் நடத்தப்படும். அதில் கோடை விழா நடத்தும் குறிப்பிடப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர் மதி, மாவட்ட திட்ட இயக்குனர் செல்வ ராசு,கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜ சேகர், ஹரிகரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் முருகே சன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- நண்பர் வீட்டிற்கு சென்ற நிலையில் பரிதாபம்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்கலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் இவரது மகன் முருகன் (வயது 24) இவர் மெக்கானிக் வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த மாதம் 17-ந் தேதி ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது வரும் வழியில் நாட்டறம்பள்ளி அருகே கள்ளியூர் தீத்தான் கொல்லை பகுதியைச் சேர்ந்த நண்பர் சாந்தகுமார் என்பவரது வீட்டிற்கு சென்றார்.
வீட்டு அருகே சாந்தகு மாருக்கு சொந்தமான 3 அடி ஆழமுள்ள நீர் தேக்க தொட்டியை முருகன் சுவற்றின் மீது ஏறி நின்று எட்டி பார்த்தார்.
தொட்டியில் தவறி விழந்து தலையில் அடிப்பட்டு மயங்கி கிழே விழந்தார். அவரை நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த முருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தந்தை ஈஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ெரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் தகவல்
- மாற்று வழி மூலமாக மேம்பாலம் கட்ட ஆலோசனை
வாணியம்பாடி:
வாணியம்பாடி ெெரயில் நிலையத்தில் ரூ.1 கோடி 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டும் கட்டமான பணியை ெரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது அங்கிருந்து ஒப்பந்ததாரர்களிடமும், அதிகாரியிடமும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில் குமார் எம்எல்ஏ மற்றும் ெரயில்வே துறைகளில் உடன் இருந்தனர்.
சென்னை கோட்ட ெரயில்வே மேலாளர் கணேஷ் கூறியதாவது:-
வாணியம்பாடி நியூடவுன் ெரயில்வே கேட் பகுதியில் பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையின்படி சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுவதாக இருந்தது முதலில் நிறுத்தப்பட்டது அது இன்னும் நிலுவையில் உள்ளது.
ஏனெனில் ெரயில்வே சுரங்க பாதை அமைய உள்ள இடத்தின் மிக அருகில் ஏரி உள்ளது. மேலும் அதில் இருந்து வெளியேறும் உபரி நீர் பாலம் கட்டும் பகுதியின் அருகாமையில் தான் வெளியேறிச்செல்லும் நிலையும் உள்ளது.
இதனால் உபரி நீர் சுரங்கப் பாதையில் நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, ஆதலால் சுரங்கப்பாதை கட்டும் பணி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார் வழங்கி உள்ள மாற்று வழி மூலமாக மேம்பாலம் கட்ட ஆலோசனை வழங்கி உள்ளார். அதன் அடிப்படையில் மேம்பாலம் கட்டுவதற்கான ஆய்வு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். அதற்காக மாநில அரசு நெடுஞ்சாலை துறை மூலமாக ஆக்கிரமிப்பு அகற்றி இடத்தை ஒதுக்க வேண்டும்.
மேலும் ெரயில் நிலையம் வளர்ச்சிக்காக பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் முதல் கட்டமாக ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் புதிய ெரயில் நிலைய அலுவலக கட்டிடம் பணிகள் துவக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து வாணியம்பாடி ெரயில் நிலையத்தில் நவீன கட்டிடங்கள் கட்டப்படும், பயணிகள் நிற்பதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதி பணிகளும் செய்து தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- செந்தில்குமார் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
- இந்த ஆண்டு பணிகளை மேற்கொள்ளப்படும் என அவர்களிடம் உறுதி
வாணியம்பாடி:
வாணியம்பாடி நகரின் மையப்பகுதியில் மாவட்ட கிளை நூலகம் உள்ளது இந்த நூலகத்தின் கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்துள்ளதாகவும் மேற்கூறையில் உடைந்து விழுவதாகவும் பொதுமக்களும், வாசகர்களும் தொடர்ந்து புகார்களை கூறி வந்தனர்.
வாணியம்பாடி செந்தில்குமார் எம்.எல்.ஏ. நூலகத்திற்கு சென்று கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு இருந்த வாசகர்களிடம் குறை களையும் கேட்டு அறிந்தார்.
இங்கு புதியதாக கட்டிடம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு இந்த ஆண்டு பணிகளை மேற்கொள்ளப்படும் என அவர்களிடம் உறுதியளித்தார்.
- குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது
- நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து உள்ளது
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆலங்காயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள வனப்பகுதிகளிலும், பாலாறு நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக வாணியம்பாடி அருகே உள்ள புல்லூர் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பணை முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. பாலாற்றில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் அம்பலூர், கொடையாஞ்சி, ஆவாரங்குப்பம், மேட்டுபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் அதிகரித்து உள்ளது.
நேற்று மாலை 3 மணியளவில் வாணியம்பாடி, ஆலங்காயம், நிம்மியம்பட்டு, அம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது.
நிம்மியம்பட்டு அரசு மருத்துவமனை பகுதியில் மருத்துவமனைக்குள் போக முடியாத அளவு சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது.
நகரப் பகுதிகளில் தாழ்வான பகுதியில் சாலைகளில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. தொடர்மழை காரணமாக இப்பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.
- ஆம்பூரில் 14-ந் தேதி நடக்கிறது
- 13 முதல் 24 வயது வரையிலான இளம் விளையாட்டு வீராங்கனைகளை தேர்வு
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட கிரிக் கெட் மற்றும் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு கிரிக்கெட் சங் கம் நடத்தும் மகளிருக்கான 13 முதல் 24 வயது வரையி லான இளம் விளையாட்டு வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து மாநில மற்றும் தேசிய அளவில் பங்கு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தை சார்ந்த வீராங்கனைக்களுக்கு வருகிற 14-ந் தேதி மாவட்ட அணி தேர்வு முகாம் ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரி யில் நடைபெற உள்ளது.
திருப்பத்தூர் மாவட் டத்தை சேர்ந்தவர் இதில் பங்கு பெறுவதற்கான விண் ணப்பங்களை சங்க அலுவல கத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தாசில்தாருக்கு பொதுமக்கள் பாராட்டு
- வாகன ஓட்டிகள் கடும் அவதி
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த அம்மணாங்கோவில் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் நாட்டறம்பள்ளி திருப்பத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் பெய்த மழையின் காரணமாக சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.
இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் வருவாய் துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்தனர்.
இடையூறாக உள்ள மேட்டுப்பகுதியில் தண்ணீர் செல்வதற்கு வழிவகை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன் பிறகு உடனடியாக திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் மேற்படி பகுதியில் தேங்கிய நீரை வெளியேற்றுவதற்கு தேவையான பணிகளை மேற்கொண்டனர். குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
கொட்டும் மழையில் நின்று தண்ணீர் அகற்றும் பணியில் தாசில்தார் ஈடுபட்டார்.
இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து நாட்டறம்பள்ளி தாசில்தாரை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.
- பிளாஸ்டிக் பைகள் கால்வாய்களில் அடைத்துக் கொள்கின்றன
- நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தம் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை உடையாக அணிந்த பிளாஸ்டிக் வேடம் அணிந்து பொது மக்களுக்கு கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் நாம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் தோல்நோய், புற்று நோய், ஒவ்வாமை, மூச்சுக் குழாய் பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, நரம்புத்தளர்ச்சி, ரத்த, சிறுநீரகச் செயல் குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு போன்றவை ஏற்படக் கூடும் என விழிப்புணர்வு மூலம் செய்து காட்டினர்.
மேலும் பிளாஸ்டிக் பைகள் கால்வாய்களில் அடைத்துக் கொள்வதால் நீர் வழிகள் அடைபட்டு மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன.
நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன.
பயிர் வளர்ச்சியையும் பாதிக்கிறது. கடலில் எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கும், வனப்பகுதியில் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவித்து பல்லுயிர் பெருக்கச் சூழலைப் பெரிதும்பாதிக்கின்றன.
இனிவரும் காலங்களில் மஞ்சள் பையை கையில் எடுப்போம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- காரில் பயணம் செய்த நிலேஸ் பாபு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- படுகாயம் அடைந்த ஹரிசை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆம்பூர்:
சென்னை சேத்துப்பட்டை சேர்ந்தவர் நிலேஸ் பாபு (வயது 39). தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி அபூர்வா சென்னை தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் இன்று காலை ஏலகிரி மலைக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து காரில் புறப்பட்டனர். காரை ஹரிஷ் என்பவர் ஓட்டி சென்றார். ஆம்பூர் அருகே உள்ள மாதனூர் நெடுஞ்சாலையில் கார் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.
காரில் பயணம் செய்த நிலேஸ் பாபு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஹரிஷ் படுகாயம் அடைந்தார். அபூர்வா லேசான காயமடைந்தார்.
படுகாயம் அடைந்த ஹரிசை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிலேஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.
- வணிகர் தினத்தை முன் னிட்டு விடுமுறை அறிவிக்கப் பட்டு இருந்தது
- 75 சதவீத கடைகள் அடைக்கப் பட்டு இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்
ஆம்பூர்:
வணிகர் தினத்தை முன் னிட்டு ஆம்பூரில் கடைக ளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டு இருந்தது.
அதன்படி நேற்று நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்துக்கடை, பால் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டும் திறந்திருந்தன. பஜார் பகுதி யில் உள்ள காய்கறி மார்க் கெட் முழுவதுமாக மூடப் பட்டு இருந்தது.
மேலும் பஜாரில் அனைத்து ஜவுளிக்கடைகளும், மளிகைக்கடைகளும் அடைக்கப் பட்டு இருந்தன.
சுமார் 75 சதவீத கடைகள் அடைக்கப் பட்டு இருந்ததாக வியாபாரி கள் தெரிவித்தனர்






