என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • உடல் மீட்பு
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்,

    திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் கரும்பூர் ஊராட்சி சாமுண்டிம்மன் தோப்பு பெட்ரோல் பங்க் அருகில் உள்ள கிணற்றில் ருக்கம்மாள் வயது (66) என்பவர் பிணமாக மிதந்தார்.

    உமராபாத் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மர்ம பெண் கேமராவில் பதிவு
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை,

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த பி மோட்டூர் பகுதியை சேர்ந்த ஜெயம்மாள் (வயது 80).

    நேற்று மூதாட்டி ஜெயம்மாள் ஜங்கலாபுரம் பகுதியில் உள்ள தன் மகள் வீட்டிற்கு அருகாமையில் ஓலை பிண்ணிக் கொண்டிருந்தார்.

    அப்போது மொபட்டில் வந்த அடையாளம் தெரியாத மர்ம பெண் ஒருவர் மூதாட்டி ஜெயம்மா ளிடம் அரசு முதியவர்க ளுக்கு நல திட்ட உதவிகள் வழங்குவதாக ஆசை வார்த்தை கூறினார்.

    அதற்கான விண்ணப்பம் ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் பகுதியில் வழங்குவதாகவும் கூறினார்.

    நகை அணிந்து வந்தால் உதவி தொகை தரமாட்டார்கள். அதனால் நகையை வீட்டில் வைத்து விட்டு வந்துவிடலாம் என கூறி மூதாட்டியை பைக்கில் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    மூதாட்டி தான் அணிந்திருந்த 6½ சவரன் தங்க நகையை வீட்டில் கழட்டி வைத்துள்ளார். அதனை அடையாளம் தெரியாத பெண் ஜன்னல் வழியாக நகைகளை எங்கு வைக்கிறார் என நோட்டமிட்டார்.

    பின்னர் மர்ம பெண் மூதாட்டியை தனது மொபட்டில் உட்கார வைத்து கொண்டு ஜோலார்பேட்டை நோக்கி சென்றார்.

    சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்ற பிறகு அந்த பெண் தன்னுடைய மணி பர்சை மூதாட்டியின் வீட்டிலேயே மறந்து விட்டு விட்டதாக கூறினார்.

    அதனை நம்பி மூதாட்டி அவரிடம் வீட்டு சாவியை கொடுத்தார். அதனை பயன்படுத்தி அந்த பெண்

    வீட்டை திறந்து 6 ½ சவரன் தங்க நகையை கொள்ளையடித்து சென்று விட்டார்.

    மூதாட்டி ஜெயம்மாள் மீண்டும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் கழட்டி வைத்த தங்க நகை கொள்ளை போனது தெரியவந்தது.

    மூதாட்டி உடனடியாக நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    கேமராவில் பதிவு

    தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் பெண் மூதாட்டியை பைக்கில் அழைத்து செல்வது வீட்டின் கதவை திறக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதன் மூலம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத பெண்ணை தேடி வருகின்றனர்.

    • எ.வ.வே. கம்பன் தொடங்கி வைத்தார்
    • 50 ஆயிரம் பேர் சேர்க்க வேண்டும்

    திருப்பத்தூர்,

    திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர், கந்திலி, ஒன்றியத்தில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி மாடப்பள்ளி, ப.முத்தம்பட்டி, நத்தம், ஆவநாயக்கன்பட்டி, ராஜாவூர் பகுதிகளில் நடைபெற்றது.

    சேர்க்கை படிவம்

    திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் நல்லதம்பி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் கே. ஏ. குணசேகரன், ஆர்.முருகேசன், கே. எஸ் ஏ.மோகன்ராஜ், முன்னிலை வகித்தனர், திருப்பத்தூர் தொகுதி பார்வையாளரும் மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் எ.வ.வே.கம்பன் கலந்துகொண்டு புதிய உறுப்பினர் படிவங்களை வழங்கினார். அவர் பேசியதாவது:-

    தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் பெண்களுக்கு சொத்துரிமை கொண்டு வந்தது கருணாநிதி, தற்போது தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம், 10-ம் வகுப்பு படித்து பிளஸ் 1, சேரும் மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை, 18 லட்சம் ஆரம்பக் கல்வி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு, சுய உதவிகளுக்கு குழுக்களுக்கு கடன் உதவி தொகை, நகை கடன் தள்ளுபடி 23 தொழிற்சங்கங்களை இணைத்து கட்டுமான சங்கம் உருவாக்கியது.

    திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் எஸ் ராஜேந்திரன் மாவட்ட துணைச் செயலாளர் டி. கே.மோகன், ஒன்றிய குழு தலைவர்கள் விஜியா அருணாச்சலம், திருமதி திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
    • போலீசார் பந்தல் அமைத்து கண்காணிப்பு

    வாணியம்பாடி,

    திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கவும், வாகன விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

    அதைத்தொடர்ந்து நேற்று வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டியப்பனூர் கூட்ரோட்டில் வாகன சோதனை சாவடியில் போலீசார் பந்தல் அமைத்து வாகன தணிக்கை செய்து வருகின்றனர்.

    தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இத்தகைய சோதனைகளில் ஈடுபடுவதால் குற்றங்கள் தடுக்க முடியும் என போலீசார் தெரிவித்தனர்.

    • சி.சி.டி.வி. காட்சியால் பரபரப்பு
    • மர்ம நபர் குறித்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த சடலை குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் நேற்று நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையம் அருகே உள்ள நகை கடைக்கு பைக்கில் வந்தார்.

    நகைக்கடையின் முன்பு பைக்கை நிறுத்திவிட்டு அடகு வைத்த நகையை மீட்க கடைக்கு உள்ளே சென்றார். பின்னர் வெளியே வந்து பார்த்தார். அப்போது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடையினுள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் ஒருவர் பைக்கை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ் பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாட்டறம்பள்ளி மகாத்மா காந்தி தெருவை சேர்ந்த ஆனந்தன் (வயது 52), நேரு தெருவை சேர்ந்த முருகேசன் (58) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் கள் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் நாட்டறம் பள்ளி மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப் போது சுண்ணாம்பு குட்டை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது சூதாடிக் கொண்டிருந்த லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த கமலநாதன் (வயது 62), வேட்டப்பட்டு வட்ட கொல்லை பகுதியை சேர்ந்த மூர்த்தி (47) ஆகிய இருவரையும் பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பாக் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்
    • பெற்றோரை போலீசார் வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்களாபுரம் அடுத்த சின்ன பூசாரியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்தில் பூக் கடை நடத்தி வருகிறார்.

    இவருடைய மகன் கீர்த்திவாசன் (வயது 25) இவரும், ஏழரைப்பட்டி பகு தியைச் சேர்ந்த திவ்யா (25) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பெற்றோர்கள் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கீர்த்தி வாசனும், திவ்யாவும் வீட்டை விட்டு வெளியேறி நேற்று சூளகிரி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பாதுகாப்பு கேட்டு நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

    இது சம்பந்தமாக இருவரின் பெற்றோரையும் போலீசார் வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தி இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டனர் என தெரிவித்து, காதல் கணவருடன் இளம் பெண்ணை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    • நீதிபதிகள் பாராட்டு
    • பரிசுகள் வழங்கினார்

    பரிசுகள் வழங்கினார்திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.

    அதில் தலைவராக ஏ.ஞானமோகன், செயலாளராக எம்.முத்தமிழ் செல்வி, துணைத் தலைவராக பி.பால மணவாளன், பொருளாளராக சி.சேரன், உட்பட பல்வேறு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    நிர்வாகிகளுக்கு மாவட்ட கூடுதல் நீதிபதி எஸ் மீனா குமாரி, சார்பு நீதிபதி எஸ். அசின்பானு, உட்பட நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள், மூத்த வழக்கறிஞர்கள், பொதுமக்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். பின்னர் மூத்த வழக்கறிஞர்களை நீதிபதிகள் பாராட்டி பரிசுகளை வழங்கினார்கள்.

    • தளபதி அறிவாலய திடலில் நடந்தது
    • ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    வாணியம்பாடி:

    ஆலங்காயம் மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் மதனாஞ்சேரி கிராமத்தில் உள்ள தளபதி அறிவாலய திடலில் திமுக அரசின் 2 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    ஒன்றிய கழக செயலாளர் மற்றும் வி.எஸ்.ஞானவேலன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி, தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தம்மாள் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் கணல் சுப்பிரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    ஒன்றிய நிர்வாகிகள் எம்.சி. ராமநாதன், வி.ஜி.அன்பு, ஷோபா வெங்கடேசன், லட்சுமி பொண்ணம்பலம். ஒன்றிய கவுன்சிலர் சாவித்திரி மகேந்திரன், பாமிதா ஆசிப், ஊராட்சிமன்ற தலைவர் ஈச்சங்கால் ஏழுமலை, முருகன், செல்வம், பள்ளிபட்டு செல்வம், மெக்கானிக் நாகராஜ், பத்தாப்பேட்டை ஜெயராமன், கிளை கழக நிர்வாகிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 5 ஆண்டுகளாக நடைபெறவில்லை
    • கலை நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

    திருப்பத்தூர்:

    ஏலகிரி மலைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். விடுமுறை நாட்களில் அதிகமானோர் வந்து செல்கின்றனர்.

    ஆலோசனை கூட்டம்

    இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ் வொரு ஆண்டும் 2 நாட்கள் கோடை விழா நடத்துவது வழக்கம். ஆனால் கொரோனா மற்றும் கோடை விழா அரங்கம் கட்டுதல் உள்ளிட்ட சில காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளாக ஏலகிரி மலையில் கோடை விழா நடத்தவில்லை.

    இந்த ஆண்டு கோடை விழா நடத்துவது குறித்து கலெக் டர் பாஸ்கரன் பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அதிகாரி களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

    அப்போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது:-

    ஏலகிரி மலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கோடை விழாக்கள் தொடர்ந்து 2 நாட்கள் சிறப்பாக நடத்த வேண்டும். விழாகலையரங்கம் முன்பும், ஏலகிரி மலை அடிவாரத்திலும் அலங்கார வளைவு அமைக்க வேண் டும்.

    இயற்கை பூங்காவில் (நேச்சுரல் பார்க்) தோட் டக்கலைத் துறை சார்பில் காய்கறிகளைக் கொண்டு விலங்குகள் மற்றும் பற வைகள் உள்ளிட்ட உருவம் அமைக்க வேண்டும். சுற் றுலாப் பயணிகளின் வச திக்காக திருப்பத்தூர், வாணியம்பாடி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏலகிரி மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்.

    போக்குவரத்தை கட்டுப்படுத்தும் விதமாக வெளியூர்களில் இருந்து கார்களில் வரும் சுற்றுலா பயணிகள் மலை அடிவாரத்தில் காரை நிறுத்திவிட்டு பஸ்சில் மலைக்கு வந்தால் அவர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும். கார் நிறுத்துவதற்காக மலை அடி வாரத்திலும் பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும்.

    கலை நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைஞர் களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.அரசு திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சி நடத்த வேண்டும். மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை போலீஸ் பாதுகாப்பு பணி யில் ஈடுபடுத்த வேண்டும். ஒரு பைக்கில் இருவர் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள்.

    மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை சாலை ஓரங்களில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். ஏலகிரி மலை வனப்பகு தியில் தற்போது கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள் ளது. குறிப்பாக சுவாமி மலை அருகே அதிக அளவில் கரடிகள் உள்ள தால், வனத்துறை அனுமதி யின்றி சுற்றுலாப் பயணி கள் அங்கு செல்வதை தடுக்க வேண்டும்.

    சனி மற்றும் ஞாயிறு 2 நாட்கள் நடக்கும் இந்த விழாவில், ஞாயிற் றுக்கிழமை அன்று சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள் அதற்கேற்ற வாறு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பிறகு ஏலகிரி மலை அடிவாரத் தில் இருந்து மலை உச் சிக்கு அரசு பஸ் தவிர்த்து மற்ற வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கக் கூடாது.

    கலெக்டர் தகவல்

    குழந்தைகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர் களை கவரும் விதமாக கலை நிகழ்ச்சி நடத்த வேண்டும்.குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் கோடை விழா நிகழ்ச்சி இம்மாதம் இறுதி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் (சனி,ஞாயிறு) இரு நாட்கள் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இன் னும் உறுதி செய்யவில்லை. மற்றொரு ஆலோசனை கூட்டம் ஏலகிரி மலையில் விரைவில் நடத்தப்படும். அதில் கோடை விழா நடத்தும் குறிப்பிடப்படும்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர் மதி, மாவட்ட திட்ட இயக்குனர் செல்வ ராசு,கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜ சேகர், ஹரிகரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் முருகே சன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • நண்பர் வீட்டிற்கு சென்ற நிலையில் பரிதாபம்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்கலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் இவரது மகன் முருகன் (வயது 24) இவர் மெக்கானிக் வேலை செய்து வந்தார்.

    இவர் கடந்த மாதம் 17-ந் தேதி ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது வரும் வழியில் நாட்டறம்பள்ளி அருகே கள்ளியூர் தீத்தான் கொல்லை பகுதியைச் சேர்ந்த நண்பர் சாந்தகுமார் என்பவரது வீட்டிற்கு சென்றார்.

    வீட்டு அருகே சாந்தகு மாருக்கு சொந்தமான 3 அடி ஆழமுள்ள நீர் தேக்க தொட்டியை முருகன் சுவற்றின் மீது ஏறி நின்று எட்டி பார்த்தார்.

    தொட்டியில் தவறி விழந்து தலையில் அடிப்பட்டு மயங்கி கிழே விழந்தார். அவரை நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த முருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தந்தை ஈஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ெரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் தகவல்
    • மாற்று வழி மூலமாக மேம்பாலம் கட்ட ஆலோசனை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி ெெரயில் நிலையத்தில் ரூ.1 கோடி 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டும் கட்டமான பணியை ெரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது அங்கிருந்து ஒப்பந்ததாரர்களிடமும், அதிகாரியிடமும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில் குமார் எம்எல்ஏ மற்றும் ெரயில்வே துறைகளில் உடன் இருந்தனர்.

    சென்னை கோட்ட ெரயில்வே மேலாளர் கணேஷ் கூறியதாவது:-

    வாணியம்பாடி நியூடவுன் ெரயில்வே கேட் பகுதியில் பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையின்படி சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுவதாக இருந்தது முதலில் நிறுத்தப்பட்டது அது இன்னும் நிலுவையில் உள்ளது.

    ஏனெனில் ெரயில்வே சுரங்க பாதை அமைய உள்ள இடத்தின் மிக அருகில் ஏரி உள்ளது. மேலும் அதில் இருந்து வெளியேறும் உபரி நீர் பாலம் கட்டும் பகுதியின் அருகாமையில் தான் வெளியேறிச்செல்லும் நிலையும் உள்ளது.

    இதனால் உபரி நீர் சுரங்கப் பாதையில் நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, ஆதலால் சுரங்கப்பாதை கட்டும் பணி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

    வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார் வழங்கி உள்ள மாற்று வழி மூலமாக மேம்பாலம் கட்ட ஆலோசனை வழங்கி உள்ளார். அதன் அடிப்படையில் மேம்பாலம் கட்டுவதற்கான ஆய்வு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். அதற்காக மாநில அரசு நெடுஞ்சாலை துறை மூலமாக ஆக்கிரமிப்பு அகற்றி இடத்தை ஒதுக்க வேண்டும்.

    மேலும் ெரயில் நிலையம் வளர்ச்சிக்காக பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் முதல் கட்டமாக ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் புதிய ெரயில் நிலைய அலுவலக கட்டிடம் பணிகள் துவக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து வாணியம்பாடி ெரயில் நிலையத்தில் நவீன கட்டிடங்கள் கட்டப்படும், பயணிகள் நிற்பதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதி பணிகளும் செய்து தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×