என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேச்சு
    • 100 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அபராதம்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட அளவிலான காவல்துறை கலந்தாய்வு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அனைத்து இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேசுகையில்:-

    காவல்துறை சார்பில் விபத்துக்களை குறைக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க வேண்டும். விபத்தை குறைப்பதில் முன்மாதிரியாக விளங்கும் திருப்பத்தூர் மாவட்டம் தொடர்ந்து அச்செயலை செய்து பொதுமக்களின் விலை மதிப்பற்ற உயிரை இழக்காமல் பாதுகாக்க வேண்டும் என்றார்.

    அதனைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நடைபெற்ற அதிரடி வாகன சோதனையில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஒட்டியவர்கள், ஒரே வாகனத்தில் 3 பேர் சென்றது.

    அதிவேகமாக வாகனம் ஓட்டியது, வாகனங்களை தவறான பாதையில் இயக்கியது உள்பட போக்குவரத்து விதிகளை மீறிய 100 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்தும், வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    • அழகான ஆண் குழந்தை பிறந்தது
    • மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்தார்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த நாயக்கனேரி கிராமத்தை சேர்ந்தவர் மங்கை. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

    இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. அதன்பேரில் ஆம்புலன்ஸ் அங்கு வந்து, மங்கையை ஏற்றிக்கொண்டு ஆம்பூர் அரசு மருத்துவ மனைக்கு சென்றது.

    ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் ராஜேஷ், ஓட்டுநர் சக்திவேல் ஆகியோர் இருந்தனர். ஆம்பூர் அருகே உள்ள நாயக்கனேரி வனப்பகுதியில் செல்லும் போது மங்கைக்கு பிரசவ வலி அதிகரித்ததால், மருத்துவ உதவியாளர் ராஜேஷ் பிரசவம் பார்த்தார். இதில் மங்கைக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    பின்னர் தாயும், குழந்தையும் ஆம்பூர் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டனர்.

    • அதிகாரிகள் பேச்சுவார்த்தை
    • பொருட்கள் தகுந்த நேரத்தில் வழங்கப்படும் என உறுதி

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியில் ரேசன் கடை உள்ளது.

    இந்த கடையை சரியான நேரத்துக்கு திறக்கப்படுவ தில்லை எனவும் கடை திறந்து இருந்தால் கூட பொருட்களை சரிவர வழங்குவதில்லை என கூறி அப்பகுதி மக்கள் ரேஷன் கடை பொருட்கள் வாங்குவதை புறக்கணித்து போராட்டத் தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    மேலும் பொருட்களை தகுந்த நேரத்தில் வழங்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • யானைகள் நேற்று இரவு திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள தண்ணீர் பந்தல் கிராமத்துக்குள் புகுந்தன.
    • கரும்பு தோட்டத்திற்குள் இருந்து யானைகளை ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஜோலார்பேட்டை:

    கிருஷ்ணகிரி வனபகுதியில் சுற்றி திரிந்த காட்டு யானைகள் ஒருவரை மிதித்து கொன்றது. அந்த யானைகள் ஆந்திர வனப்பகுதிக்கு சென்றன.

    ஆந்திர மாநிலம் பருத்தி கொல்லி கிராமம் தமிழக எல்லையில் திருப்பத்தூர் மாவட்டத்தை ஒட்டியுள்ளது. இந்த பகுதியில் யானைகள் மேலும் 5 பேரை மிதித்து கொன்றன.

    மேலும் இருவர் படுகாயம் அடைந்து குப்பம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் யானைகள் நேற்று இரவு திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள தண்ணீர் பந்தல் கிராமத்துக்குள் புகுந்தன. வீடுகளை சுற்றி சுற்றி வந்து அட்டகாசம் செய்தன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

    நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் நாட்டறம்பள்ளி, திம்மாம்பேட்டை போலீசார் மற்றும் தமிழக வனத்துறையினர் தலைமையில் அப்பகுதிக்கு சென்றனர்.

    அப்பகுதி பொதுமக்கள் வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    வனத்துறையினர் டிரோன் கேமரா மூலம் காட்டுப்பகுதிக்கு சென்றனர். டிரோன் கேமராவை பறக்கவிட்டு யானைகளை கண்காணித்தனர்.

    பொதுமக்கள் கூச்சலிட்டபடி வீடுகளில் மொட்டை மாடிகளில் நின்று யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது யானைகள் தண்ணீர் பந்தல் கிராமத்தை ஒட்டி செல்லும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்தன.

    அந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை நிறுத்தினர்.

    பைக்கில் வந்த வாலிபர் வாகனத்தை திடீரென நிறுத்த முடியவில்லை. அவர் யானைகளை மிக அருகில் சென்றார்.

    அவரை யானைகள் தாக்க முயன்றன. அவர் யானைகளிடமிருந்து நூலிலையில் தப்பி சென்றார்.

    நெடுஞ்சாலையைக் கடந்த காட்டு யானைகள் ஆத்தூர் கிராமத்திற்கு சென்றன. அங்குள்ள மகேஸ்வரன் என்ற நபரின் கரும்பு தோட்டத்தில் பதுங்கி நின்றன.

    காட்டு யானைகள் கடும் கோபத்துடன் ஆவேசமாக உள்ளன. பொதுமக்கள் அந்த இடங்களுக்கு செல்லாதவாறு வனத்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர்.

    கரும்பு தோட்டத்திற்குள் இருந்து யானைகளை ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    • போலீசார் விசாரணை
    • வேலை செய்து கொண்டிருந்த போது பரிதாபம்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த தேவலாபு ரம் பகுதியை சேர்ந்தவர் கனக ராஜ் (வயது 22), கட்டிட தொழிலாளி. இவருக்கு திரு மணமாகி 7 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் இவர் நேற்று சான்றோர் குப்பம் பகுதியில் ஒருவீட்டில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அருகில் இருந்த உயரழுத்த மின்ஒயரில் தவறுத லாக கைப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம் பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக் காக ஆம்பூர் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.3 லட்சம் சாம்பலானது
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி ஏரிக்கரை புதூர் என்ற பகுதியில் சுமார் 10- க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளது. இங்கு வசிக்கும் விசாலாட்சி மற்றும் சரஸ்வதி ஆகியோர் வழக்கம் போல் கூலி வேலைக்கு சென்றுள்ளனர். இந்தநிலையில் அவர்கள் 2 பேரின் குடிசை வீடுகளும் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

    உடனடியாக அருகில் உள்ள பொதுமக்கள் வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் தீர்ந்து விட்டதால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து டிராக்டர்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர்.

    சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் வைத்திருந்த ரூ.3 லட்சம் ரொக்கம், தங்கம், வெள்ளி நகைகள், வீட்டு உபயோக பொருட்கள், உடைமைகள், கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்தும் தீயில் கருகி நாசமானது.

    இந்த தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டதா?, அல்லது மர்ம நபர்கள் யாராவது தீ வைத்தார்களா? என வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    • 6½ சவரன் தங்க நகை கொள்ளை
    • சேலத்தில் தனிப்படை போலீசார் முகாமிட்டுள்ளனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த பி மோட்டூர் பகுதியை சேர்ந்த ஜெயம்மாள் (வயது 80).

    மொபட்டில் வந்த அடையாளம் தெரியாத மர்ம பெண் ஒருவர் மூதாட்டி ஜெயம்மா ளிடம் அரசு முதியவர்க ளுக்கு நல திட்ட உதவிகள் வழங்குவதாக ஆசை வார்த்தை கூறினார்.

    அதற்கான விண்ணப்பம் ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் பகுதியில் வழங்குவதாகவும் கூறினார்.

    நகை அணிந்து வந்தால் உதவி தொகை தரமாட்டார்கள். அதனால் நகையை வீட்டில் வைத்து விட்டு வந்துவிடலாம் என கூறி மூதாட்டியை பைக்கில் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    மூதாட்டி தான் அணிந்திருந்த 6½ சவரன் தங்க நகையை வீட்டில் கழட்டி வைத்துள்ளார். அதனை அடையாளம் தெரியாத பெண் ஜன்னல் வழியாக நகைகளை எங்கு வைக்கிறார் என நோட்டமிட்டார்.

    பின்னர் மர்ம பெண் மூதாட்டியை தனது மொபட்டில் உட்கார வைத்து கொண்டு ஜோலார்பேட்டை நோக்கி சென்றார்.

    சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்ற பிறகு அந்த பெண் தன்னுடைய மணி பர்சை மூதாட்டியின் வீட்டிலேயே மறந்து விட்டு விட்டதாக கூறினார்.

    அதனை நம்பி மூதாட்டி அவரிடம் வீட்டு சாவியை கொடுத்தார். அதனை பயன்படுத்தி அந்த பெண் வீட்டை திறந்து 6½ சவரன் தங்க நகையை கொள்ளையடித்து சென்று விட்டார்.

    நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் பெண் மூதாட்டியை பைக்கில் அழைத்து செல்வது வீட்டின் கதவை திறக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதன் மூலம் திருட்டில் ஈடுபட்ட பெண் சேலம் பகுதியை சேர்ந்தவர் என சந்தேகம் ஏற்பட்டது.

    அவரை பிடிக்க சேலத்தில் தனிப்படை போலீசார் முகாமிட்டுள்ளனர்.

    • உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை
    • போலீசார் தேடுகின்றனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி அம்மையப்பன் நகர் மூசல் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அருள். இவர் தனது மனைவி கற்பகம் (வயது 21). என்பவரை காணவில்லை என ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதில் கடந்த 10-ந் தேதி கற்பகம் வைத்திருந்த செல் போனை எடுத்துச் சென்றதால் என்னிடம் சண்டைபோட்டு விட்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

    உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. காணாமல்போன தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு அதில் கூறி உள்ளார்.

    அதன் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • கிருஷ்ணகிரி வனபகுதியில் சுற்றி திரிந்த காட்டு யானைகள் 2 பேரை மிதித்து கொன்றது.
    • பொதுமக்கள் வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ஜோலார்பேட்டை:

    கிருஷ்ணகிரி வனபகுதியில் சுற்றி திரிந்த காட்டு யானைகள் 2 பேரை மிதித்து கொன்றது. அந்த யானைகள் ஆந்திர வனப்பகுதிக்கு சென்றன.

    ஆந்திர மாநிலம் பருத்தி கொல்லி கிராமம் தமிழக எல்லையில் திருப்பத்தூர் மாவட்டத்தை ஒட்டியுள்ளது. இந்த பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன.

    பருத்திக்கொல்லி கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் மனைவி உஷா (வயது 42) என்பவரும் மற்ற நபர்களும் வேலைக்கு செல்வதற்காக மல்லானூர் ரெயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென இவர்களை யானைகள் வழிமறித்து தாக்கியுள்ளது. இதில் கீழே விழுந்த உஷா, சிவலிங்கம் (70) ஆகிய இருவரையும் யானைகள் மிதித்ததில் அவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.

    மேலும் இருவர் படுகாயம் அடைந்து குப்பம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் 2 பேரை மிதித்து கொன்ற யானைகள் மல்ல குண்டா ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தகரகுப்பம் பகுதியில் இன்று காலை சுற்றி திரிந்தன.

    இதனால் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் நாட்டறம்பள்ளி, திம்மாம்பேட்டை போலீசார் மற்றும் தமிழக வனத்துறையினர் தலைமையில் அப்பகுதிக்கு சென்றனர்.

    அப்பகுதி பொதுமக்கள் வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    வனத்துறையினர் டிரோன் கேமரா மூலம் காட்டுப்பகுதிக்கு சென்றனர். டிரோன் கேமராவை பறக்கவிட்டு யானைகளை கண்காணித்து வருகின்றனர்.

    2 யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    யானைகள் ஆந்திர வனப்பகுதியில் இருந்து தமிழக எல்லைக்குள் வந்தது அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • 1½ வருடங்களாக தண்ணீர் வரவில்லை என புகார்
    • போக்குவரத்து பாதிப்பு

    ஜோலார்பேட்டை:

    வாணியம்பாடி- சேலம் வரை தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடந்த வருகிறது. ஜோலார்பேட்டை சந்தைகோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் பொது மக்களுக்கு குடிநீர் அடிக்கடி தடைப்பட்டது.

    தேசிய நெடுஞ்சாலையில் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் சந்தைகோடியூர் பகுதியில் உள்ள திருப்பத்தூர் மெயின் ரோடு, மற்றும் அப்பாசி கவுன் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த 1½ வருடங்களாக தண்ணீர் வரவில்லை.

    இதனால் அப்பகுதி பொது மக்கள் தண்ணீருக்காக மிகவும் அவதிப்பட்டு வந்தனர் இது குறித்து நகராட்சி அலுவல கத்திற்கு பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடந்த மாதம் 29-ந்தேதி சாலை மறியல் செய்தனர்.

    அப்போது தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால் இது வரை தண்ணீர் வரவில்லை இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொது மக்கள் மீண்டும் இன்று காலை சந்தைகோடியூர் பஸ் நிருத்தம் அருகே வாணியம்பாடி- திருப்பத்தூர் சாலையில் மறியல் செய்தனர்.

    அப்போது திருப்பத்தூர் நோக்கி ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது பொது மக்கள் ஆம்புலன்சுக்கு வழிவிட்டு மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் பழனி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

    விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அங்கிருந்து பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • சாலையோரம் பிணமாக கிடந்தார்
    • போலீஸ் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 53). விவசாயி.

    இவர் நேற்று மாலை 6 மணியளவில் வீட்டை விட்டு தனது மொபட்டில் வெளியே சென்றார். பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இந்நிலையில் சண்டியூர் அடுத்த சர்வீஸ் சாலை யோரம் பழனிச்சாமி மர்மமான முறையில் இன்று அதிகாலை இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் விவசாயி உடலை பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் போராட்டம்
    • கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, அவசர சிகிச்சை பிரிவு இயங்கி வந்தது.

    நெடுஞ் சாலையில் நடைபெறும் விபத்து களில் சிக்குபவர்கள், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அவசர சிகிச்சை பெற்று பயனடைந்து வந்தனர்.

    மேலும், மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத் தில் தினசரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயங்கி வரும் அவசர சிகிச்சைபிரிவை தற்போது மூட உத்தர விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில், அவசர சிகிச்சை பிரிவு மூடப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கிராம மக்கள் ஒன்று திரண்டு மாதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். இதனால், அங்கு பரபரப்புஏற்பட்டது.

    இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இது சம்பந்தமாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர், கலெக்டர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவை மூடக்கூடாது என்பதை வலியுறுத்தி மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்கள், வியாபார சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் நேற்று திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் மனு அளித்தனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    ×