என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • போலீசாரால் அறிவிக்கப்பட்டுள்ளது
    • தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பில் மாவட்டம் முழுவதும் சாராயம் காயச்சுதல் மற்றும் விற்பனை செய்தல் பற்றிய தகவல் அளிக்க மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரால் புதியதாக பிரத்யேக வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சாராயம் காய்ச்சுதல், ஊறல்கள் போடுதல், போலி மதுபானம், கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மது விற் பனை மற்றும் கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோரின் தகவல்களை 9498188755, 86376 61845 எண்களில் தெரிவிக்கலாம்.

    தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா?
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 55) கூலி தொழிலாளி.

    இவர் நேற்று மாலை சின்ன வரிகம் பகுதியில் தென்னந்தோப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து வெங்கடேசன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது பாட்டில்கள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் பகுதியில் சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்ய போவதாக ஆம்பூர் மற்றும் உமராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது ராதிகா, ராஜேஸ்வரி, சந்திரன், பிச்சைமணி, ராஜா, கோபி வீட்டில் மது பாட்டில்கள் மற்றும் சாராயம் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் போலீசார் 2 பெண்கள் உட்பட 6 பேரை கைது செய்தனர்.

    இவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் மற்றும் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    • ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்
    • வாட்ஸ் ஆப் குழு அமைத்து பின் தொடரும் வாலிபர்கள்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலை அடிவாரத்தில் 2 யானைகள் சுற்றி திரிகின்றன. நேற்று இரவு 9 மணியளவில் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள பாரத கோவில் வழியாக சந்தைக்கோடியூர் ஏரி கரையின் மீது நடந்து சென்றது.

    மின்சாரம் துண்டிப்பு

    இது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி பொது மக்கள் உடனடியாக சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் முன் கூட்டியே மூடி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

    போலீசாரும் ஒலி பெருக்கி மூலம் அனைவரும் வீட்டிற்குள் சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும். யாரும் இரவு நேரத்தில் வெளியே வர வேண்டாம் என ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்.

    யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் நேற்று இரவு 9 மணியளவில் சந்தைக்கோடியூர் வக்கணம்பட்டி புது ஓட்டல் தெரு ஏலகிரி கிராமம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    மின்சாரம் இருந்தால் அதன் வெளிச்சம் இருக்கும் இடத்தை நோக்கி யானை ஊருக்குள் வந்து விடும் என்று எண்ணி நேற்று இரவு மின்சாரம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

    அதன் பிறகு சந்தைக்கோடியூர் பகுதியில் இருந்து சக்கரகுப்பம் வழியாக வக்கணம்பட்டி மாரியம்மன் கோவில் ஆலயம் எதிரில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றியம் துவக்க பள்ளி எதிரே 2 யானைகள் முகாமிட்டுள்ளது.

    இரவு நேரத்தை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் பலர் யானையை பின் தொடர்ந்தனர். ஆபத்தான நிலையில் தங்களது செல் போனில் வீடியோ எடுத்து யானை வருது உஷார் என வாட்ஸ் ஆப் குரூப் ஆரம்பித்து அதில் பதிவு செய்து வருகின்றனர்.

    பொது மக்கள் தொந்தரவு கொடுக்காமல் இருந்தால் யானைகள் ஆலங்காயம் காட்டு பகுதிக்கு சென்று விடும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அரசு ஊராட்சி ஒன்றியம் துவக்க பள்ளி எதிரே 2 யானைகள் முகாமிட்டுள்ளது.
    • இரவு நேரத்தை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் பலர் யானையை பின் தொடர்ந்தனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலை அடிவாரத்தில் 2 யானைகள் சுற்றி திரிகின்றன. நேற்று இரவு 9 மணியளவில் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள பாரத கோவில் வழியாக சந்தைக்கோடியூர் ஏரி கரையின் மீது நடந்து சென்றது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி பொது மக்கள் உடனடியாக சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் முன் கூட்டியே மூடி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

    போலீசாரும் ஒலி பெருக்கி மூலம் அனைவரும் வீட்டிற்குள் சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும். யாரும் இரவு நேரத்தில் வெளியே வர வேண்டாம் என ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்.

    யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் நேற்று இரவு 9 மணியளவில் சந்தைக்கோடியூர் வக்கணம்பட்டி புது ஓட்டல் தெரு ஏலகிரி கிராமம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    மின்சாரம் இருந்தால் அதன் வெளிச்சம் இருக்கும் இடத்தை நோக்கி யானை ஊருக்குள் வந்து விடும் என்று எண்ணி நேற்று இரவு மின்சாரம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

    அதன் பிறகு சந்தைக்கோடியூர் பகுதியில் இருந்து சக்கரகுப்பம் வழியாக வக்கணம்பட்டி மாரியம்மன் கோவில் ஆலயம் எதிரில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றியம் துவக்க பள்ளி எதிரே 2 யானைகள் முகாமிட்டுள்ளது.

    இரவு நேரத்தை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் பலர் யானையை பின் தொடர்ந்தனர். ஆபத்தான நிலையில் தங்களது செல் போனில் வீடியோ எடுத்து யானை வருது உஷார் என வாட்ஸ் ஆப் குரூப் ஆரம்பித்து அதில் பதிவு செய்து வருகின்றனர்.

    பொது மக்கள் தொந்தரவு கொடுக்காமல் இருந்தால் யானைகள் ஆலங்காயம் காட்டு பகுதிக்கு சென்று விடும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுகா ஆண் டியப்பனூர் கிராமத்தில் புதி தாக 27 அடி உயர முனீஸ்வர சுவாமி மற்றும் 11 அடி உயர குதிரை சிலைகள், 10 அடி உயரம் உள்ள எதிர்முனி சாமி சிலைகள் புதிதாக கட் டப்பட்டு மகா கும்பாபி ஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 13-ந் தேதி மங்களள இசை, அனுக்ஞை, விநாயகர் பூஜை. வாஸ்துசாந்தி, பிரவேசபலி, அங்குரார்பணம், முதல்கால யாகபூஜை, யாகவேள்வி, பூர் ணாஹுதி, தீபாராதனை, இரண்டாம் கால யாக பூஜை, யாகவேள்வி, தம்பதி கள் சங்கல்பம், உலக நன்மைக்காக யாக வழிபாடு நடைபெற் றது.

    பின்னர் புனித நீர் கலசத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மேள தாளங்களுடன் புனித தண்ணீர் கலசத்தை எடுத்து சென்று முனீஸ்வரன் மீது ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. ஜெய் ஜெய் முனிஸ்வரா என கோஷங் களை எழுப்பினர்கள், பின்னர் மூலஸ்தானத்தில் உள்ள முனீஸ்வரர் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித் தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச் சிக்கான ஏற்பாடுகளை முனீஸ்வரர் கோவில் நிர்வாகிகள், குலதெய்வ குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • மக்கள் குற்றஞ்சாட்டு
    • அதிகாரிகள் ஆய்வு

    ஆம்பூர்

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலாற்றின் கரையோரம் ஆயிரக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதுகுறித்து பொதுமக்கள், சுற்றுச்சூழல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் விரைந்து வந்த அதிகாரிகள் இறந்த மீன்களை பாலாற்றில் இருந்து அகற்றினர். பிறகு அந்த நீரை மாதிரிக்காக சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பினர். பாலாற்றில் தோல் கழிவுநீர் கலப்பதால் மீன்கள் இறந்தாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.

    இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • போலீஸ் ரோந்தில் சிக்கினார்
    • சிறையில் அடைத்தனர்

    ஆம்பூர்,

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டார்.

    அப்போது ஆசனாம்பட்டு ரோடு பேபி காலனி பகுதியை சேர்ந்த நீதி மகன் தினேஷ் குமார் வயது (23) என்பவர் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டபோது கையும் களவுமாக பிடித்தனர்.

    அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
    • சமூக வலைத்தளங்களில் ஆடியோ

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட் றம்பள்ளி அருகே தமிழக ஆந்திரா எல்லை பகுதியில் சுற்றித்திரிந்த 2 யானைகள் 2 நாட்களுக்கு முன் வழி தவறி தமிழக எல்லையான தகரகுப்பம் வனப்பகுதியில் முகாமிட்டது.

    இரு யானைகளும் ஆக்ரோஷமாக சுற்றித்திரிந்தது. பின்னர் நாட்றம் பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்தது.

    2 யானைகள் பார்த்த பொதுமக்கள் கத்தி கூச்சல் எழுப்புவதும், யானை அருகே சென்று துரத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவது நிகழ்ந்து கொண்டிருந்தது.

    இது குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று சமூக வலைத்தளங்கள் மூலம் ஆடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

    அதில் கூறி இருப்பதாவது:-

    ஆந்திரப் பகுதியில் இருந்து வந்த காட்டு யானைகளை விரட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் சேர்ந்து அனைத்து நிகழ்ச்சிகளும் செய்து கொண்டி ருக்கிறோம் .

    பொதுமக்கள் யானை அருகே சென்று விரட்ட முயற்சிப்பது யானை மீது வாட்டர் பாட்டில் வீசுவது டார்ச் லைட் அடிப்பது போன்ற செயல்களால் மிகுந்த ஆக்ரோஷம் அடைந்துள்ளது.

    பொதுமக்கள் தாங்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் யானைகள் நெடுஞ்சாலை கடந்து காட்டுப்பகுதிகள் செல்ல முயலும் போது தாங்கள் கத்துவதால் மீண்டும் அது ஊருக்குள் திரும்பி விடுகிறது.

    அனைவரும் வீட்டிற்குள் இருந்தால் யானை நெடுஞ்சாலையை கடந்து காட்டுப் பகுதியில் சென்று விடும் யாரும் யானை அருகே செல்ல வேண்டாம் யானைகள்ஆக்ரோஷமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்

    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
    • பலர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் 8-ம் ஆண்டு பூப்பந்து போட்டி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாநில பூப்பந்தாட்ட துணைத் தலைவர் ம. அன்பழகன் தலைமையில் மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.கடந்த 3 தினங்களாக போட்டிகள் நடைபெற்று வந்தது.

    கடந்த 3 தினங்களாக நடைபெற்ற பூப்பந்து போட்டியில் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாநில பூப்பந்தாட்ட துணைத் தலைவர் ம. அன்பழகன் தலைமை தாங்கினார். ஜே பி பி சி தலைவர் எஸ் மோகன்ராஜ் வரவேற்றார்.

    திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான கா தேவராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய அளவிலான பூப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் பரிசு சதன் ரயில்வே அணிக்கு ரூ.50 ஆயிரம், 2-ம் பரிசு ஐ.சி.எப். அணிக்கு ரூ.40 ஆயிரம், 3-வது பரிசு எஸ்.ஆர்.எம். அணிக்கும் ரூ.30 ஆயிரமும், பெண்கள் பிரிவில் திண்டுக்கல் பி.எஸ்.என்.எல். பொறியியல் கல்லூரி மாணவிகள் முதல் பரிசு ரூ.25 ஆயிரம், சென்னை எல்.எஸ்.எஸ். அணி 2-ம் பரிசு ரூ.20 ஆயிரம், சேலம் தேவாரம் பைவ் ஸ்டார் அணி 3-ம் பரிசு ரூ.15 ஆயிரமும், 4-ம் பரிசு ரூ.10 ஆயிரம் பரிசுகளையும், கோப்பைகளையும் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கினர்.

    நிகழ்ச்சியில் மாநில ஆதிதிராவிடர் நல துணைத் தலைவர் சா. ராஜேந்திரன், நகர மன்ற தலைவர் எம். காவியா விக்டர், துணைத் தலைவர் பெ. இந்திரா பெரியார்தாசன் உள்ளிட்ட துறை அலுவலர்கள் விளையாட்டு வீரர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    • இரண்டு சக்கரங்கள் கீழே இறங்கியதால் பயங்கர சத்தம் கேட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது.
    • பெங்களூரு ரெயில் தடம்புரண்டுள்ள நிலையில், அந்த வழியாகச் செல்லும் ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    ஜோலார்பேட்டை:

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 7.25 மணிக்கு பெங்களூருக்கு டபுள் டக்கர் ரெயில் புறப்பட்டு சென்றது.

    ஆந்திர மாநிலம் குப்பம் ரெயில் நிலையத்தை கடந்து சென்றது. காலை 11.21 மணிக்கு பங்காருபேட்டை அருகே உள்ள சி.சி. நத்தம் என்ற இடத்தில் சென்ற போது ரெயிலின் கடைசி பெட்டியான சி1 பெட்டி தண்டவாளத்தில் இருந்து புரண்டது. இரண்டு சக்கரங்கள் கீழே இறங்கியதால் பயங்கர சத்தம் கேட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது.

    இதுகுறித்து குப்பம் மற்றும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் அவதியடைந்தனர்.

    பெங்களூரு ரெயில் தடம்புரண்டுள்ள நிலையில், அந்த வழியாகச் செல்லும் ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    • கழிவுநீர் கலப்பதால் மீன்கள் இறந்ததா?
    • மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலாற் றின் கரையோரம் நேற்று திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் செத்து மிதந்தன.

    தண்ணீரில் கழிவுநீர் கலப்பதால் மீன்கள் இறந்ததா? அல்லது வேறு காரணமா என தெரியவில்லை.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சில மாதங்களுக்கு முன்பு ஆம்பூர் அடுத்த கொமேஸ்வரம் பாலாற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் கரையோரமாக செத்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.

    ×