என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "dead fish"
- மக்கள் குற்றஞ்சாட்டு
- அதிகாரிகள் ஆய்வு
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலாற்றின் கரையோரம் ஆயிரக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதுகுறித்து பொதுமக்கள், சுற்றுச்சூழல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த அதிகாரிகள் இறந்த மீன்களை பாலாற்றில் இருந்து அகற்றினர். பிறகு அந்த நீரை மாதிரிக்காக சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பினர். பாலாற்றில் தோல் கழிவுநீர் கலப்பதால் மீன்கள் இறந்தாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
- கடலூர் கம்மியம்பேட்டையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை கட்டப்பட்டதால், அப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
- சில நேரங்களில் மீன்களும் அதிக அளவில் செத்து மிதந்து வரும் சம்பவங்கள் நடக்கிறது
கட–லூர், மே.5-
கட–லூர் கம்–மி–யம்–பேட்–டையில் கெடி–லம் ஆற்–றின் குறுக்கே தடுப்–பணை கட்–டப்பட்–டுள்–ளது. இந்த தடுப்–பணை கட்–டப்–பட்–ட–தால், அப்–ப–கு–தியை சுற்–றி–யுள்ள பகு–தி–களில் நிலத்–தடி நீர் மட்டம் உயர்ந்து வரு–கிறது.
செத்து மிதந்த மீன்–கள்
ஆனால் சில நேரங்–களில் இந்த ஆற்–றில் கழி–வு–நீர் கலப்–பதால், சுகா–தார சீர்–கேடு ஏற்–பட்டு வரு–கிறது. சில நேரங்–களில் மீன்–களும் அதிக அள–வில் செத்து மிதந்து வரும் சம்–ப–வங்–கள் நடக்–கிறது.
அதன்–படி நேற்று இந்த தடுப்–ப–ணை–யில் ஏரா–ள–மான மீன்–கள் செத்து மிதந்–தன. துர்–நாற்–ற–மும் வீசி–யது. இதை பார்த்த அப்–ப–குதி மக்–கள் அதிர்ச்சி அடைந்–த–னர். இது பற்றி மாந–க–ராட்சி நிர்–வா–கத்–திற்–கும், மாசு கட்–டுப்–பாட்டு வாரிய அதி–கா–ரி–க–ளுக்–கும் தக–வல் தெரி–விக்–கப்–பட்–டு உள்–ளது. அவர்–கள் இன்று (வெள்–ளிக்–கி–ழமை) நேரில் வந்து ஆய்வு செய்ய இருப்–ப–தாக தெரி–கிறது.
இது பற்றி மாந–க–ராட்சி மேயர் சுந்–த–ரி–ராஜா, ஆணை–யா–ளர் கிருஷ்–ண–மூர்த்தி ஆகி–யோர் வெளி–யிட்–டுள்ள செய்திக்–கு–றிப்–பில் கூறி–யி–ருப்–ப–தா–வது:-
எச்–ச–ரிக்கை
கெடி–லம் ஆற்–றில் கழி–வு–நீர் கலப்–ப–தால் மீன்–கள் செத்–து– மி–தக்–கிறது. இத–னால் கட–லூர் மாந–கர பகு–தி–யில் துர்–நாற்–றம் வீசு–வ–தோடு, நீரும் மாசுப்–பட்டு வரு–கிறது. ஆகவே கழி–வு–நீரை முறை–யாக சுத்–தி–க–ரிப்பு செய்து, அனு–ம–திக்–கப்–பட்ட கழி–வு–நீரை மட்டும் ஆற்–றில் விட வேண்–டும். மேலும் கெடி–லம் ஆற்–றங்–க–ரை–யோரம் இயங்கி வரும் வணிக நிறு–வ–னங்–கள் மற்–றும் குடி–யி–ருப்–பு–களில் இருந்து எவ்–வித கழி–வு– நீ–ரும் நேர–டி–யாக கெடி–லம் ஆற்–றுப்–ப–டு–கையில் விடு–வதை தவிர்க்க வேண்–டும். இதை மீறி எவ–ரேனும் தங்–க–ளது கழி–வு– நீரை ஆற்–றுப்–ப–டு–கையில் விடு–வது கண்–ட–றி–யப்–பட்டால், சம்–பந்–தப்–பட்ட–வர்–கள் மீது சட்ட பூர்வ நட–வ–டிக்கை எடுக்–கப்–படும்.
இவ்–வாறு அவர்–கள் தெரி–வித்–துள்–ள–னர்.
- வரட்டுபள்ளம் அணையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்படும்.
- ஆனால் வரட்டுபள்ளம் அணையில் அதிக அளவில் மீன் குஞ்சுகள் விடப்படு வதாக பாசன விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதி யான பர்கூர் மலையின் அடிவார பகுதியில் அமைந்துள்ளது வரட்டு பள்ளம் அணை.
இந்த அணையில் மழைக் காலங்களில் மலைப்பகு திகளில் பெய்யும் மழை நீர் தேக்கி வைக்கப்பட்டு கோடை காலங்களில் வன விலங்குகளின் தாகம் தீர்க்கவும், பாசனத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இந்த அணையில் மீன்கள் வளர்க்கப்பட்டு அதனை மீன்வளத்துறை மூலம் டெண்டர் விடப்பட்டு மீன்கள் பிடிக்க படுகின்றது. அந்த வகையில் வரட்டுபள்ளம் அணையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்படும். அதில் ஒரு சில மீன்கள் இறந்து விடுகின்றது. மீதம் உள்ள மீன்கள் இனப்பெ ருக்கம் அடைகின்றது.
ஆனால் வரட்டுபள்ளம் அணையில் அதிக அளவில் மீன் குஞ்சுகள் விடப்படு வதாக பாசன விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் அவ்வப்போது மீன்கள் இறந்து அணையின் ஓரப்பகுதியில் செத்து மிதக்கிறது எனவும், இந்த அணையில் இருந்து எண்ண மங்கலம், வட்டக்காடு, கிருஷ்ணாபுரம், குருநாத புரம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தேவைக்காக தண்ணீர் செல்வதாகவும் கூறப்படுகின்றது.
ஆகவே பொதுப்பணி துறையும், மீன்வளத்துறையும் இதனை நேரில் ஆய்வு செய்து இனிவரும் காலங்களில் அணைக்கு எவ்வளவு மீன் குஞ்சுகள் விட வேண்டுமோ அவற்றை உரிய முறையில் விட்டு மீன்கள் இறப்பதை தவிர்க்க வேண்டும் என்று பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- களக்காடு ஒன்றியத்திற்கு ட்பட்ட கோதைச்சேரியில் வேட்டைக்காரன் குளம் உள்ளது.
- களக்காடு யூனியன் நிர்வாகத்திற்கு உள்பட்ட இந்த குளம் மீன் வளர்ப்பதற்காக ஏலம் விடப்பட்டது.
களக்காடு:
களக்காடு ஒன்றியத்திற்கு ட்பட்ட கோதைச்சேரியில் வேட்டைக்காரன் குளம் உள்ளது. களக்காடு யூனியன் நிர்வாகத்திற்கு உள்பட்ட இந்த குளம் மீன் வளர்ப்பதற்காக ஏலம் விடப்பட்டது.
இதனை வடுகட்சி மதிலை சேர்ந்த முத்துப்பாண்டியன் (55) என்பவர் குத்தகைக்கு எடுத்து மீன்கள் வளர்த்து வந்தார். இந்நிலையில் குளத்தில் ஆங்காங்கே குவியல் குவியலாக மீன்கள் இறந்து மிதக்கின்றன.
மீன்கள் இறப்பிற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. குளத்தில் விஷம் அல்லது வேறு ஏதேனும் ரசாயன பொருட்கள் கலக்கப் பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதனால் ரூ.2 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக முத்துப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த குளத்தில் அருகில் உள்ள கிராம மக்கள் ஆடு மாடுகளை தண்ணீர் அருந்த கொண்டு செல்வது வழக்கம்.
மீன்கள் இறந்து மிதப்பதால் குலத்திற்கு தண்ணீர் குடிக்க ஆடு மாடுகளை கொண்டு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த புன்னை நல்லூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள். இக்கோவிலுக்கு சொந்தமான குளம், கோவில் அருகிலேயே அமைந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. பின்னர் இதுபற்றி பக்தர்கள், கோவில் ஊழியர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கோவில் குளத்தில் மர்மநபர்கள் யாரும் விஷம் கலந்தார்களா? அல்லது வேறெதும் காரணமா? என்று விசாரித்து வருகிறார்கள்.
கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூண்டி ஏரியில் மீன்வளத்துறை சார்பில் மிதவை தொட்டிகள் அமைத்து மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.
டெண்டர் மூலம் மீன்கள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
கோடை வெயில் காரணமாக ஏரியில் நீர்மட்டம் வெறும் 12 மில்லியன் கன அடியாக குறைந்தது. இதனால் கடும் வெப்பம் மற்றும் போதிய நீர் இல்லாததால் ஏரியில் இருந்த மீன்கள் செத்து மிதக்கத் தொடங்கின.
நேற்று அதிக அளவில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியது. இதனால் பூண்டி ஏரி முழுவதும் துர்நாற்றம் வீசியது.
பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரமேஷ், பொறியாளர் சந்திரசேகர், சுகாதாரத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணராஜ், கட்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் பூண்டி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் தொழிலாளர்கள் மூலம் செத்து மிதந்த மீன்களை படகில் சென்று அகற்றப்பட்டது.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாகவும் பூண்டி ஏரியில் ஏராளமான மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. இதனால் செய்வது அறியாமல் அதிகாரிகள் திகைத்து உள்ளனர். அந்த மீன்களையும் அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஏரியில் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால் அனைத்து மீன்களும் இறக்கும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. #PoondiLake
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்