search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாராயம் விற்ற பெண்கள் உள்பட 6 பேர் கைது
    X

    சாராயம் விற்ற பெண்கள் உள்பட 6 பேர் கைது

    • மது பாட்டில்கள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் பகுதியில் சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்ய போவதாக ஆம்பூர் மற்றும் உமராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது ராதிகா, ராஜேஸ்வரி, சந்திரன், பிச்சைமணி, ராஜா, கோபி வீட்டில் மது பாட்டில்கள் மற்றும் சாராயம் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் போலீசார் 2 பெண்கள் உட்பட 6 பேரை கைது செய்தனர்.

    இவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் மற்றும் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×