என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூலி தொழிலாளி மர்ம சாவு
- தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா?
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 55) கூலி தொழிலாளி.
இவர் நேற்று மாலை சின்ன வரிகம் பகுதியில் தென்னந்தோப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து வெங்கடேசன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






