search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர் தேக்க தொட்டியில் தவறி விழந்து மெக்கானிக் பலி
    X

    நீர் தேக்க தொட்டியில் தவறி விழந்து மெக்கானிக் பலி

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • நண்பர் வீட்டிற்கு சென்ற நிலையில் பரிதாபம்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்கலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் இவரது மகன் முருகன் (வயது 24) இவர் மெக்கானிக் வேலை செய்து வந்தார்.

    இவர் கடந்த மாதம் 17-ந் தேதி ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது வரும் வழியில் நாட்டறம்பள்ளி அருகே கள்ளியூர் தீத்தான் கொல்லை பகுதியைச் சேர்ந்த நண்பர் சாந்தகுமார் என்பவரது வீட்டிற்கு சென்றார்.

    வீட்டு அருகே சாந்தகு மாருக்கு சொந்தமான 3 அடி ஆழமுள்ள நீர் தேக்க தொட்டியை முருகன் சுவற்றின் மீது ஏறி நின்று எட்டி பார்த்தார்.

    தொட்டியில் தவறி விழந்து தலையில் அடிப்பட்டு மயங்கி கிழே விழந்தார். அவரை நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த முருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தந்தை ஈஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×