என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகில் பொன்னப்பல்லியில் நேற்று காலை 2 குட்டிகளுடன் 5 யானைகள் உலா வருகின்றன. அந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை யானைகள் சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் வாழை தோப்புக்குள் புகுந்து வாழை மரங்களை நாசம் செய்துள்ளது. பின்னர் அந்த பகுதியில் உள்ள கொய்யா மரம் கேழ்வரகு, காய் கறி செடிகள் பூச்செடிகளை சேதப்படுத்தி உள்ளது.

    இதனால் விவசாயிகள் மன வேதனைக்கு உள்ளாகினர். இச்சம்பவம் அறிந்து வந்த ஆம்பூர் வனத்துறை அதிகாரிகள் மற்றும் உமராபாத் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் அப்பகுதி விவசாயிகள் காட்டு யானைகளை விரட்ட கோரி வலியுறுத்தினர்.

    • தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
    • ஆய்வின்போது கண்டறியும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

    வேலூர்:

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் தகவல்களை சேகரிக்கும் பொருட்டு தொழிலாளர் ஆணையம்அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மற்றும் ராணிப் பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த கடைகள் நிறுவ னங்கள், வணிக நிறுவனங்கள், ஓட்டல் மற்றும் ரெஸ்டாரென்ட், கோழி பண்ணைகள், மருத்து வமனைகள், உள்ளாட்சி அமைப்புகள் (மாநக ராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி), பள்ளிகள், கல்லூ ரிகள் மற்றும் முடிதிருத்தும் நிலையங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் வெளி மாநில தொழிலா ளர்களின் விவரங்களையும், சுயவேலை செய்பவர்கள், பாதுகாவலராக பணி புரிபவர்கள், வீட்டுவேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களையும், தொழிலாளர்துறையின் வலைதளத்தில் (http://abour.tn.gov.in/ism) நிறுவனங்களின் உரிமையாளர்கள் பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஏற்படுத்தி வெளிமாநில தொழி லாளர்களின் ஆதார் எண், செல்போன் எண், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் கள் என்ற முழு விவரத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாத நிறுவ னங்களை ஆய்வின்போது கண்டறியும்பட்சத்தில் தொழிலாளர் துறையால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மருத்துவ சிகிச்சைக்கு உதவ பெற்றோர் கோரிக்கை
    • ரூ.16 லட்சம் செலவாகும்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள தாதன வலசை கிராமம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மகள் ரித்திகா (வயது 12).

    இவர் இப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முடித்து 7-ம் வகுப்புக்கு செல்ல இருந்தார்.கோடை விடுமுறையில் மாணவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு ரத்த புற்று நோய் இருப்பது தெரியவந்தது.அதைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார்.

    சிகிச்சைக்கு ரூ.16 லட்சம் செலவாகும் என ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    முதல்- அமைச்சருக்கு கோரிக்கை மத்திய,மாநில அரசின் காப்பீட்டு திட்டம் மூலம் ரூ.3 லட்சம் வரை மட்டுமே மருத்துவ சிகிச்சை கிடைக்கும் நிலை உள்ளது. மீதித்தொகை யை எப்படி ஈடு கட்டுவது என ரித்திகாவின் பெற்றோர் தவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு தனது மகளின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

    • நோயாளிகள் அவதி
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஏராளமான நாய்கள் மருத்துவமனையை சுற்றி வருகின்றனர்.

    அது மட்டுமல்லாமல் பெண்கள் வார்டில் நாய்கள் மலம் கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோயாளிகள் மூக்கை பிடித்தபடியே செல்கின்றனர்.

    அசுத்தம் உள்ள பெண்கள் வார்டில் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • இறந்து போன உதயவசந்த் ஆவியை ஏரிக்கரையில் இருந்து, அவரது வீட்டுக்கு அழைத்துவர குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
    • இறந்த மகனின் ஆவி தன்னுடன் வாழ வேண்டும் என்று நம்பிக்கையில் பெற்றோர்கள் நடத்திய இந்த பூஜை அந்த கிராம மக்களிடத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த சொரக்காயல் நத்தம் கிராமம், சென்றயான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி வசந்தி. மகன்கள் எழில்அரசன் (24) மற்றும் உதயவசந்த் (20).

    எழில் அரசன் சொரக்காயல்நத்தம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவராக உள்ளார்.

    உதயவசந்த் படித்து முடித்துவிட்டு, வேலைக்காக காத்திருந்தார். இந்த நிலையில் உதயவசந்த் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் தனது பைக்கில் சென்றார். அப்போது எதிர் திசையில் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த உதயவசந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    பிரேத பரிசோதனை முடிந்து கொண்டுவரப்பட்ட அவரது உடலை உறவினர்கள் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். இறந்து போன உதயவசந்த் ஆவியை ஏரிக்கரையில் இருந்து, அவரது வீட்டுக்கு அழைத்துவர குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

    உறவினர்கள் ஒன்றுக்கூடி அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அதன்படி நேற்று இறந்துபோன உதயவசந்த் ஆவியை வீட்டுக்கு அழைத்து வர ஏரிக்கரையில் சிறப்பு பூஜை செய்தனர்.

    அங்கு பூங்கரகம் வைத்து, தரையில் மஞ்சள்-குங்குமம் மற்றும் மலர்கள் தூவி பம்பை மேளங்கள் முழங்க சிறப்பு பூஜை நடந்தது.

    ஏரிக்கரையில் இருந்து பூங்கரகத்தை உதயவசந்த் உறவினர்கள், பம்மை மேளங்கள் முழங்க ஊர்வலமாக வீட்டுக்கு எடுத்து வந்தனர். அப்போது ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மஞ்சள் நீர் தெளித்தப்படியும், பூக்கள் தூவியப்படி சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

    இதனைத்தொடர்ந்து உதயவசந்த் வீட்டில், அவரது உருவப்பட்டத்திற்கு மாலை அணிவித்து வீட்டிலும் பம்பை மேளம் முழங்க பூஜைகள் நடத்தப்பட்டது.

    இறந்த மகனின் ஆவி தன்னுடன் வாழ வேண்டும் என்று நம்பிக்கையில் பெற்றோர்கள் நடத்திய இந்த பூஜை அந்த கிராம மக்களிடத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறியதாவது:-

    இறந்துபோனவரின் ஆவி வீட்டுக்கு வர வழி இல்லாமல் சுற்றித்திரியும். வீட்டுக்கு செல்வதோடு, தாய்-தந்தை உள்ளிட்ட உறவினர்கள் காண முடியாமல் இறந்தவரின் ஆவி துடிக்கும்.

    இதனை கருத்தில் கொண்டு, இறந்தவர் ஆவி வீட்டிற்கு அழைத்து வந்தால், அவரது ஆன்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கை.

    மேலும் இறந்தவர் ஆவி வீட்டுக்கு அழைத்து வந்தால், அந்த வீடு செழிப்படையும். மேலும் அவர்களை கடவுளாக பாவித்து அவ்வப்போது அவர்களுக்கு பூஜைசெய்து வழிப்படுவோம். இறந்தவர்கள் மீது கொண்ட பாசத்தை வெளிப்படுத்தும் வகையில், அவரது ஆவியை தனது வீட்டுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி எங்கள் முன்னோர் காலத்தில் இருந்து கடைப்பிடித்து வருகிறோம்.

    இதனால் யாருக்கும், எந்த வித பாதிப்பு ஏற்படாது. இதுபோன்ற அமானுஷ்ய பூஜைகள் செய்வதை, முதன்முறையாக பார்ப்பவர்களுக்கு சற்று அச்சத்தை ஏற்படுத்தும். எங்களுக்கு பழகிவிட்டதால் எந்தவித பயமும் இல்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 2 குட்டிகளுடன் சுற்றி திரிகின்றன
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் ஆம்பூர் அரங்கல்துருகம் ஊராட்சி பொன்னப் பல்லி பகுதியில் 2 குட்டிகள் உடன் வந்த 5 யானைகள் மாமரங்களை சேதப்படுத்தியது. அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிர்களை யானைகள் நாசம் செய்தது.

    இது குறித்து ஆம்பூர் வனத்துறை அதிகாரிகள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். உமராபாத் போலீசார் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாரிகள் கடும் எச்சரிக்கை
    • பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர்

    வாணியம்பாடி:

    பக்ரீத் பெருநாள் வருகிற 29-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. பக்ரீத் பண்டிகை என்றாலே இஸ்லாமியர்கள் ஆடு, மாடு, மற்றும் ஒட்டகங்களை பலியிட்டு குர்பானி கொடுப்பது வழக்கம்.

    சில ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒட்டகங்கள் பலியிட்டு குர்பானி கொடுப்பதை இஸ்லாமியர்கள் தவிர்த்து வந்தனர்.

    இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜிநகர் பகுதியில் இர்ஷாத் என்பவர் ஒட்டகம் ஒன்றை குர்பானி கொடுப்பதற்காக வாங்கி வந்தார். போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் நேதாஜி நகர் மற்றும் மருத்துவர் காலனி பகுதியில் உள்ள இர்ஷாத் வீட்டிற்கு சென்றனர்.

    வீட்டின் அருகே கட்டி வைக்கப்பட்ட ஒட்டகத்தை கைப்பற்றி விசாரணை செய்தனர்.

    தொடர்ந்து வாணியம்பாடியில் ஒட்டகம் குர்பானி கொடுக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசாரும், வருவாய்த்துறையும் எச்சரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் நள்ளிரவில் மீண்டும் ஒட்டகம் லாரி மூலம் பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் வாணியம்பாடியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 15 வாகனங்கள் பறிமுதல்
    • ெஜயிலில் அடைத்தனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டவர்களை போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் போலீஸ் துணை கண்காணிப்பாளர் செந்தில் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தனிப்படை போலீசார் திருப்பத்தூர் தாம லேரிமுத்தூர் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகப்படும்படியான நபரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் மாடப்பள்ளி ஊராட்சி கோனேரிகுப்பத்தை சேர்ந்த பாலாஜி (வயது 20) என்பது தெரியவந்தது. தொடர்ந்துவிசாரணையில் அவர் ஜோலார்பேட்டை, குசிலாப்பட்டு, ஆலங்காயம், நாட்டறம்பள்ளி உள்ளிட்ட

    சுற்றுவட்டார பகுதிகளில் இரு சக்கர வாகனம் திருடியதாக ஒப்புக்கொண்டார்.

    அவரிடம் இருந்த 15 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து குரிசிலாப்பட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து பாலாஜியை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மின் கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு
    • தொடர்ந்து மழை பெய்து வருகிறது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு திடிரென மின் கம்பி அறுந்து விழுந்தது.

    இதனால் அப்பகுதி முழுவதும் மின்தடை செய்யப்பட்டது.

    இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் இன்று காலை வரை மின் விநியோகம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டனர்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் முதியவர்கள் மற்றும் பொது மக்களும் மிகவும் அவதிப்பட்டனர். 

    • விளையாடிக் கொண்டிருந்த போது விபரீதம்
    • நகராட்சி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ஆம்பூர்:

    திரும்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த காதர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அம்ஜத்சாஹெப், தொழிலாளி.

    இவரது மகள் ஹப்சா ( வயது 3). சிறுமி நேற்று சாந்தாமியான் தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார்.

    வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென 3 நாய்கள் உள்ளே நுழைந்தது.

    விளையாடிக் கொண்டிருந்த ஹப்சாவை நாய்கள் திடீரென துரத்தி கடித்துக் குதறியது. வலி தாங்காமல் சிறுமி கூச்சலிட்டு அழுதார்.

    ஹப்சா அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள், நாய்களை விரட்டிவிட்டு சிறுமியை மீட்டனர்.

    படுகாயம் அடைந்த சிறுமி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆம்பூர் பகுதியில் தெரு நாய்கள் அதிகம் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர்.

    நடந்து செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் சிலர் விழுந்து, எழுந்து காயங்களுடன் செல்கின்றனர்.

    எனவே தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க ஆம்பூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை மற்றும் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஜோலார்பேட்டை அருகே உள்ள ஜெயமாதா நகர் பகுதியில் காசு வைத்து சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு ரெயில்வே குடியிருப்பு பகுதியில் காசு வைத்து சூதாடிய சந்தைக்கோ டியூர் வக்கணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சந்திர சேகரன் (வயது 40), அரவிந்தன் (30), சிவகுமார் (49), பிரேம் குமார் (42), அருள் நாதன் (39), மணிகண்டன் (23), காந்தி ராமன் (45) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடமி ருந்து ரூ.250 மற்றும் 40 பொம்மை சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • 25 பாட்டில்கள் பறிமுதல்
    • சிறையில் அடைப்பு

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நியூ டவுன் சாலையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப் போது அங்கு அரசு மதுபான பாட்டில்களை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த கோனாமேடு பகுதியை சேர்ந்த சசிகுமார்(வயது26) அரவிந்த்குமார்(25) ஆகிய இருவரையும் பிடித்தனர்.

    அவர்களிடம் விற்பனைக்காக வைத்திருந்த 25 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×