என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமிக்கு ரத்த புற்றுநோய் பாதிப்பு
    X

    சிறுமிக்கு ரத்த புற்றுநோய் பாதிப்பு

    • மருத்துவ சிகிச்சைக்கு உதவ பெற்றோர் கோரிக்கை
    • ரூ.16 லட்சம் செலவாகும்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள தாதன வலசை கிராமம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மகள் ரித்திகா (வயது 12).

    இவர் இப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முடித்து 7-ம் வகுப்புக்கு செல்ல இருந்தார்.கோடை விடுமுறையில் மாணவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு ரத்த புற்று நோய் இருப்பது தெரியவந்தது.அதைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார்.

    சிகிச்சைக்கு ரூ.16 லட்சம் செலவாகும் என ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    முதல்- அமைச்சருக்கு கோரிக்கை மத்திய,மாநில அரசின் காப்பீட்டு திட்டம் மூலம் ரூ.3 லட்சம் வரை மட்டுமே மருத்துவ சிகிச்சை கிடைக்கும் நிலை உள்ளது. மீதித்தொகை யை எப்படி ஈடு கட்டுவது என ரித்திகாவின் பெற்றோர் தவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு தனது மகளின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

    Next Story
    ×