என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை சேர்த்தனர்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த பையனப்பள்ளியில் பகுதியில் சுடுகாடு உள்ளது. அப்போது சுடுகாடு அருகே உள்ள மரத்தில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி புடவையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெலக்கல்நத்தம் கிராம நிர்வாக அலுவலர் சிவன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியது
    • விவசாயிகள் மகிழ்ச்சி

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பகலில் மட்டுமில்லாமல் இரவு நேரங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் உருவாகி உள்ளது.

    நேற்று இரவு விடிய விடிய கொட்டி தீர்த்த மழை, காலையிலும் லேசாக தூரிக்கொண்டிருந்தது. வேலூர் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி திருப்பத்தூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.

    திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி மற்றும் ஆம்பூர் ஆகிய பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு பலத்த மழை பெய்தது.

    தொடர் மழை காரணமாக ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

    தொடர்மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    மேலும் விவசாய நிலங்களில் ஏர் உழும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. சரியான நேரத்தில் மழை பெய்ததால் சரியான மானாவரி பட்டத்தில் பயிர்கள் எளிதில் அறுவடைக்கு தயாராகும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததில் அதிகபட்சமாக

    நாட்டறம்பள்ளியில் 42.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    அதேபோல் ஆம்பூர் சர்க்கரை ஆலையில் 25.20 மி.மீ, திருப்பத்தூரில் 19.40 மி.மீ, ஆம்பூரில் 19 மி.மீ, திருப்பத்தூர் சக்கரை ஆலையில் 18 மி.மீ, வாணியம்பாடியில் 11 மி.மீ மற்றும் ஆலங்காயத்தில் 6 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.

    • மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
    • கண்காணிப்பு கேமரா பதிவால் சிக்கினார்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சி லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சுகுமார். இவர் அதே பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் பூஜை செய்து வருகிறார்.

    கடந்த 14-ந் தேதி காலை சுகுமார் முத் துமாரியம்மன் கோவிலை திறக்க சென்ற போது கோவிலில் வைத்திருந்த உண்டியல் திருடு போனது தெரிய வந்தது. இதனை அடுத்து சுகுமார் ஜோலார் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்மன் கோவில் உண்டியலை திருடிய நபர்களை கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து தேடி வந்தனர்.

    அதில் ஒரே மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் உண் டியலை திருடிக் கொண்டு செல்லும் காட்சி பதிவாகி இருந் தது. இந்த நிலையில் நேற்று ஜோலார்பேட்டை அருகே உள்ள தாமலேரி முத்தூர் மேம்பால பகுதியில் இன்ஸ்பெக்டர் மங் கையர்கரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தியபோது சி.சி.டி.வி. கேமராவில் பதிவானவர் அடையாளம் இருந்தது.

    விசாரணையில் அம்மன் கோவிலில் உண்டியலை திருடிச் சென்ற வாலிபர் அவர்தான் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் திருப்பத்தூர் போஸ்கோ நகர் பகுதியை சேர்ந்த அர்ஜுன் என்பவரின் மகன் ஜிவித்கு மார் (வயது 24) என்பதும் இவருடன் வினோத்குமார், ஆனந்த குமார் ஆகியோர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    திருடிய பணத்தை மது குடிக்க பயன்படுத்தியுள்ளனர். இதனையடுத்து ஜிவித்குமார்போலீசார் கைது செய்து திருப் பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்த னர். மேலும் தலைமறைவாக உள்ள வினோத்குமார் மற்றும் ஆனந்தகுமார் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வரு. கின்றனர்.

    • நமக்கு நாமே திட்டத்தில் வழங்கப்பட்டது
    • அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி ராஜாஸ்தான் சங்கம் சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வாணியம்பாடி நகராட்சி பள்ளிகளுக்கு கட்டிடம் கட்டுவதற்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையை நகரமன்றத் தலைவர் உமாசிவாஜி கணேசனிடம் சங்க நிர்வாகிகள் ரஞ்சித்குமார், தேஜ்ராஜ், மதன்லால், உமாராம், பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர்.

    இதில் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) வசந்தி, நகர கூட்டுறவு வங்கி தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான வி.எஸ்.சாரதிகுமார் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • போலீசார் விசாரணை
    • தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர்- வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் பச்சை குப்பம் ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது.

    இதன் அருகே முட்புதர்கள் வளர்ந்து அடர்ந்த காடுகள் போல் உள்ளது. இங்கு காதல் ஜோடிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முட்புதருக்கு காதல் ஜோடிகள் வந்துள்ளனர்.

    இதனைக் கண்ட 4 பேர் கொண்ட கும்பல் அந்த காதல் ஜோடிகளிடம் சென்று அவர்களை சரமாரியாக தாக்கினர். மேலும் காதல் ஜோடிகளிடம் இருந்த செல்போன்கள் மற்றும் 2 பவுன் செயினை பறித்தனர்.

    பின்னர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து காதல் ஜோடிகள் ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இன்று காலை போலீசார் காதல் ஜோடிகளிடம் செல்போன் நகை திருடிய பச்சை குப்பம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 23) என்பவரை பிடித்து கைது செய்தனர். மேலும் தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
    • சுகாதாரத்தை பேணி பணியில் ஈடுபட அறிவுரை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பெட்டி கடைகள் உள்ளது.

    இந்தக் கடைகளில் விற்பனை செய்யப்படும் கடலை மிட்டாய்கள் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், கடலை மிட்டாயில் மர குச்சி இருக்கும் படத்தை வாடிக்கையாளர் ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஒருவர் கூறியிருந்தார்.

    இதை தொடர்ந்து வேலூர் மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் (உணவு பாதுகாப்பு), வாணியம்பாடி உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி (பொறுப்பு) ஆகியோர் வாணியம்பாடியில் உள்ள கடலை மிட்டாய் தயாரிக்கும் இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.

    அப்போது விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்ப ட்டிருந்த அனைத்து கடலை மிட்டாய்களும் பரிசோதனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து, உரிமையாளரிடம் சுகாதாரமான முறையில் பொருட்களை தயாரிக்க வேண்டும் என்றும், கடலை மிட்டாய் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் தலைக்கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும்.

    பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் சுகாதாரச் சான்று பெற்றிருக்க வேண்டும். தன் சுத்தம் மற்றும் சுற்றுப்புற சுகாதாரத்தை பேணி உணவு பொருள் தயாரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.

    • ஆடுகளுக்கு தழை பறித்தபோது பரிதாபம்
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பால்னாங் குப்பம் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 47). இவர் திருப்பத்தூர் அரசு பணிமனையில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் இவர் வளர்த்து வரும் ஆடுகளுக்கு உணவளிக்க வீட்டின் அருகே இருந்த மரத்தில் இரும்பு தொரட்டி மூலம் தழைகளை பறித்தார். அப்போது கண்ணதாசன் கையில் பிடித்திருந்த தொரட்டி வீட்டின் அருகே சென்ற மின் கம்பி மீது விழுந்தது. அப்போது திடீரென அவர் மீது

    மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி விழுந்த அவரை, அவரது தாயார் ரத் தினம்தூக்கச் சென்றுள்ளார். அப்போது அவரையும் மின் சாரம் தாக்கி உள்ளது.

    இதை பார்த்த பொதுமக் கள் கண்ணதாசனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்ற னர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கண்ணதாசன் ஏற்கனவே இறந்து விட்டதாகதெரிவித்த னர். படுகாயம் அடைந்த அவ ரது தாயாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த தும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங் கையர்கரசி மற்றும் போலீ சார் சென்று பிணத்தை கைப் பற்றி பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகில் பொன்னப்பல்லியில் நேற்று காலை 2 குட்டிகளுடன் 5 யானைகள் உலா வருகின்றன. அந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை யானைகள் சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் வாழை தோப்புக்குள் புகுந்து வாழை மரங்களை நாசம் செய்துள்ளது. பின்னர் அந்த பகுதியில் உள்ள கொய்யா மரம் கேழ்வரகு, காய் கறி செடிகள் பூச்செடிகளை சேதப்படுத்தி உள்ளது.

    இதனால் விவசாயிகள் மன வேதனைக்கு உள்ளாகினர். இச்சம்பவம் அறிந்து வந்த ஆம்பூர் வனத்துறை அதிகாரிகள் மற்றும் உமராபாத் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் அப்பகுதி விவசாயிகள் காட்டு யானைகளை விரட்ட கோரி வலியுறுத்தினர்.

    • தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
    • ஆய்வின்போது கண்டறியும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

    வேலூர்:

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் தகவல்களை சேகரிக்கும் பொருட்டு தொழிலாளர் ஆணையம்அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மற்றும் ராணிப் பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த கடைகள் நிறுவ னங்கள், வணிக நிறுவனங்கள், ஓட்டல் மற்றும் ரெஸ்டாரென்ட், கோழி பண்ணைகள், மருத்து வமனைகள், உள்ளாட்சி அமைப்புகள் (மாநக ராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி), பள்ளிகள், கல்லூ ரிகள் மற்றும் முடிதிருத்தும் நிலையங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் வெளி மாநில தொழிலா ளர்களின் விவரங்களையும், சுயவேலை செய்பவர்கள், பாதுகாவலராக பணி புரிபவர்கள், வீட்டுவேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களையும், தொழிலாளர்துறையின் வலைதளத்தில் (http://abour.tn.gov.in/ism) நிறுவனங்களின் உரிமையாளர்கள் பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஏற்படுத்தி வெளிமாநில தொழி லாளர்களின் ஆதார் எண், செல்போன் எண், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் கள் என்ற முழு விவரத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாத நிறுவ னங்களை ஆய்வின்போது கண்டறியும்பட்சத்தில் தொழிலாளர் துறையால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மருத்துவ சிகிச்சைக்கு உதவ பெற்றோர் கோரிக்கை
    • ரூ.16 லட்சம் செலவாகும்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள தாதன வலசை கிராமம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மகள் ரித்திகா (வயது 12).

    இவர் இப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முடித்து 7-ம் வகுப்புக்கு செல்ல இருந்தார்.கோடை விடுமுறையில் மாணவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு ரத்த புற்று நோய் இருப்பது தெரியவந்தது.அதைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார்.

    சிகிச்சைக்கு ரூ.16 லட்சம் செலவாகும் என ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    முதல்- அமைச்சருக்கு கோரிக்கை மத்திய,மாநில அரசின் காப்பீட்டு திட்டம் மூலம் ரூ.3 லட்சம் வரை மட்டுமே மருத்துவ சிகிச்சை கிடைக்கும் நிலை உள்ளது. மீதித்தொகை யை எப்படி ஈடு கட்டுவது என ரித்திகாவின் பெற்றோர் தவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு தனது மகளின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

    • நோயாளிகள் அவதி
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஏராளமான நாய்கள் மருத்துவமனையை சுற்றி வருகின்றனர்.

    அது மட்டுமல்லாமல் பெண்கள் வார்டில் நாய்கள் மலம் கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோயாளிகள் மூக்கை பிடித்தபடியே செல்கின்றனர்.

    அசுத்தம் உள்ள பெண்கள் வார்டில் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • இறந்து போன உதயவசந்த் ஆவியை ஏரிக்கரையில் இருந்து, அவரது வீட்டுக்கு அழைத்துவர குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
    • இறந்த மகனின் ஆவி தன்னுடன் வாழ வேண்டும் என்று நம்பிக்கையில் பெற்றோர்கள் நடத்திய இந்த பூஜை அந்த கிராம மக்களிடத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த சொரக்காயல் நத்தம் கிராமம், சென்றயான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி வசந்தி. மகன்கள் எழில்அரசன் (24) மற்றும் உதயவசந்த் (20).

    எழில் அரசன் சொரக்காயல்நத்தம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவராக உள்ளார்.

    உதயவசந்த் படித்து முடித்துவிட்டு, வேலைக்காக காத்திருந்தார். இந்த நிலையில் உதயவசந்த் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் தனது பைக்கில் சென்றார். அப்போது எதிர் திசையில் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த உதயவசந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    பிரேத பரிசோதனை முடிந்து கொண்டுவரப்பட்ட அவரது உடலை உறவினர்கள் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். இறந்து போன உதயவசந்த் ஆவியை ஏரிக்கரையில் இருந்து, அவரது வீட்டுக்கு அழைத்துவர குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

    உறவினர்கள் ஒன்றுக்கூடி அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அதன்படி நேற்று இறந்துபோன உதயவசந்த் ஆவியை வீட்டுக்கு அழைத்து வர ஏரிக்கரையில் சிறப்பு பூஜை செய்தனர்.

    அங்கு பூங்கரகம் வைத்து, தரையில் மஞ்சள்-குங்குமம் மற்றும் மலர்கள் தூவி பம்பை மேளங்கள் முழங்க சிறப்பு பூஜை நடந்தது.

    ஏரிக்கரையில் இருந்து பூங்கரகத்தை உதயவசந்த் உறவினர்கள், பம்மை மேளங்கள் முழங்க ஊர்வலமாக வீட்டுக்கு எடுத்து வந்தனர். அப்போது ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மஞ்சள் நீர் தெளித்தப்படியும், பூக்கள் தூவியப்படி சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

    இதனைத்தொடர்ந்து உதயவசந்த் வீட்டில், அவரது உருவப்பட்டத்திற்கு மாலை அணிவித்து வீட்டிலும் பம்பை மேளம் முழங்க பூஜைகள் நடத்தப்பட்டது.

    இறந்த மகனின் ஆவி தன்னுடன் வாழ வேண்டும் என்று நம்பிக்கையில் பெற்றோர்கள் நடத்திய இந்த பூஜை அந்த கிராம மக்களிடத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறியதாவது:-

    இறந்துபோனவரின் ஆவி வீட்டுக்கு வர வழி இல்லாமல் சுற்றித்திரியும். வீட்டுக்கு செல்வதோடு, தாய்-தந்தை உள்ளிட்ட உறவினர்கள் காண முடியாமல் இறந்தவரின் ஆவி துடிக்கும்.

    இதனை கருத்தில் கொண்டு, இறந்தவர் ஆவி வீட்டிற்கு அழைத்து வந்தால், அவரது ஆன்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கை.

    மேலும் இறந்தவர் ஆவி வீட்டுக்கு அழைத்து வந்தால், அந்த வீடு செழிப்படையும். மேலும் அவர்களை கடவுளாக பாவித்து அவ்வப்போது அவர்களுக்கு பூஜைசெய்து வழிப்படுவோம். இறந்தவர்கள் மீது கொண்ட பாசத்தை வெளிப்படுத்தும் வகையில், அவரது ஆவியை தனது வீட்டுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி எங்கள் முன்னோர் காலத்தில் இருந்து கடைப்பிடித்து வருகிறோம்.

    இதனால் யாருக்கும், எந்த வித பாதிப்பு ஏற்படாது. இதுபோன்ற அமானுஷ்ய பூஜைகள் செய்வதை, முதன்முறையாக பார்ப்பவர்களுக்கு சற்று அச்சத்தை ஏற்படுத்தும். எங்களுக்கு பழகிவிட்டதால் எந்தவித பயமும் இல்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×