என் மலர்
உள்ளூர் செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்
- திருமணமான பெண்ணுடன் வாலிபர் ஓட்டம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த தாமனேரிமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தனபால் (வயது 50). இவருக்கு திருமணமாகி அம்பிகா (43) என்ற மனைவியும், சந்துரு என்கிற ராமமூர்த்தி (18) மகனும் உள்ளனர்.
சந்துரு கட்டிடமேஸ்வரியாக வேலை செய்து வந்தார். கடந்த 5-ந் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அப்போது தனபால் போனில் தொடர்பு கொண்டு மகனிடம் பேசினார். தான் பெங்களூரில் வேலை செய்து வருவதாக சந்துரு தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த வாரம் மீண்டும் சந்துருவை பெற்றோர் போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால் சந்துரு போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து அவரது நண்பர்களிடம், சந்துருவின் பெற்றோர் விசாரித்தனர். சந்துரு இன்ஸ்டாகிராம் மூலம் சென்னை பெண்ணுடன் பழகி வந்ததாகவும், அவர் தற்போது அந்தப் பெண்ணுடன் சென்னைக்கு சென்று வசித்து வருவதாகவும் கூறினார். மேலும் அந்தப் பெண் ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவலும் தெரியவந்துள்ளது. இது குறித்து அம்பிகா ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






