என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே கஞ்சா வைத்திருந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், பிரபு மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அண்ணாண்டபட்டி கூட்ரோடு பகுதியில் சந்தேகத்தின் பெயரில் சுற்றி திரிந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.

    மேலும் அவரிடம் சோதனை செய்தபோது 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இதே போன்று காந்திநகர் பகுதியில் உள்ள ஏரியில் சந்தேகத்தின் பேரில் இருந்த வாலிபரையும் கைது செய்தனர்.

    மேலும் கைது செய்யப்பட்ட திலீப் குமார் (வயது 24) மற்றும் வெங்கடேஷ் (24) ஆகிய 2 பேரும் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • 45 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • பலர் கலெந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த திரியாலம் ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் தேவராஜ், நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த முகாமில் மக்களை தேடி மருத்துவத்திட்டன் கீழ் 10 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள், கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 10 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடிகள், 14 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், 5 நபர்களுக்கு நத்தம் பட்டாகள், 5 நபர்களுக்கு இப்பட்டாக்கள், மற்றும் 1 நபருக்கு வாரிசு சான்றிதழ் என மொத்தம் 45 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    கலெக்டர் பேசும்போது:-

    இந்த முகாமில் இணை இயக்குநர் (நலப்பணிகள்) மாரிமுத்து, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் செந்தில், ஒன்றியக்குழு தலைவர் சத்யாசதீஷ்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார், நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், துணை தலைவர் ஸ்ரீதேவிகாந்தி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் கவிதா தண்டபாணி, சிந்துஜாஜெகன், ஒன்றியக்குழு உறுப்பினர் உமாகன்ரங்கம், வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சிதேவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயபாரதிரவிகுமார், முருகன், சங்கர், அனுமந்தன், சுமதிஏழுமலை, மருத்துவர் புகழேந்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலெந்து கொண்டனர்.

    • இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்
    • பூட்டு உடைத்து ஆய்வு மேற்கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானுக்கு, நாட்டறம்பள்ளி பகுதியில் பல லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் வாணியம்பாடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று சோதனை செய்தனர்.

    அப்போது ஆத்தூர்குப்பம் பகுதியில் சந்தேகிக்கும் வகையில் பூட்டி இருந்த குடோனை, பூட்டு உடைத்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் தடை செய்யப்பட்ட சுமார் 1 டன் எடை கொண்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், ஆத்தூர்குப்பம் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான குடோனை, கேத்தாண்டப்பட்டியை சேர்ந்த ராஜூ என்கிற பூவரசன் ( வயது 30) மற்றும் அவரது தம்பி பொன்னரசன் ( 25) ஆகியோர் வாடகை எடுத்து குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து பொன்னரசனை கைது செய்த போலீசார், அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுகுறித்து நாட்டியம் பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பூவரசனை தேடி வருகின்றனர்.

    • வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
    • ஜெயிலில் அடைத்தனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கஸ்பா பகுதியை சேர்ந்த அபூபக்கர் வயது (32) தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். ரெட்டி தொப்பு பகுதியில் சேர்ந்த ஓரு பெண்ணிடம் செல்போன் மூலம் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருடன் வாலிபர் போனில் பேச முயற்சி செய்தார்.

    அந்த பெண் இவரை தவிர்த்து வந்துள்ளார். இருப்பினும் தினமும் இந்த பெண்ணிற்கு வாலிபர் போன் செய்து வந்ததாக தெரிகிறது

    இந்த நிலையில் நேற்று அந்த பெண் வீட்டிற்கு சென்று அபுபக்கர் பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பெண்ணிடம் கையை பிடித்து தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அபூபக்கரை ஜெயிலில் அடைத்தனர்.

    • பெற்றோர் புகாரின் பேரில் நடவடிக்கை
    • காதலிப்பதாக கூறி ஏமாற்றினார்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் டவுன் பகுதியைச் சேர்ந்த திலீப் (வயது 23), ஷூ கம்பெனி தொழிலாளி. இவர் ஆம்பூர் பகுதியை சேர்ந்த 15 வயது மைனர் பெண்ணை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.

    மேலும் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி திலீப், மைனர் பெண்ணை கர்ப்பமாக்கி உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து அவரது பெற்றோர், சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், இளம்பெண் 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரது பெற்றோர் ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, திலீப்பை கைது செய்தனர். 

    • சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
    • பக்தர்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள திருப்பதி கெங்கை அம்மன் கோவில் 90-வது ஆண்டு திருவிழா காப்பு கட்டுதல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து ஸ்ரீ கங்கை அம்மன் ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஸ்ரீ பொன்னியம்மன் ஸ்ரீ மகா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக பம்பை தாரை தம்பட்டை நாதஸ்வர கச்சேரி உடன் வீர விளையாட்டுக்களுடன் பெரிய குளத்தில் இருந்து திருப்பதி கங்கையம்மன் சிரசு ஊர்வலம் முக்கிய வீதி வழியாகச் சென்றது.

    அப்போது அம்மனுக்கு தேங்காய் பாலம் உடைத்து கற்பூரம் காட்டி வழிபட்டனர். பெண்கள் பல சாமி வந்து ஆடினர் தொடர்ந்து ஸ்ரீ கெங்கை அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இரவு வான வேடிக்கை நடைபெற்றது. பின்னர் மேளதாளர்களுடன் அருள்மிகு திருப்பதி கெங்கையம்மன் சிரசு புறப்பட்டு பெரியகுளம் சென்றடைந்தது.

    பின்னர் அம்மன் கழுத்தில் சிரசு அமர்த்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியை ஒட்டி திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பதி கெங்கையம்மன் திருக்கோவில் தலைவர் பி. கருணாகரன், செயலாளர்கள் எம்.சண்முகம், எம் சரவணன், பொருளாளர் என் கே தண்டபாணி, முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் ஆர்.கண்ணன், டி. ரமேஷ், கோ. செல்வம், நகராட்சி கவுன்சிலர் எஸ் எம் எஸ் சதீஷ் உட்பட கமிட்டி உறுப்பினர்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

    • தமிழக-ஆந்திர எல்லையில் சோதனை நடந்தது
    • 37 போலீசார் கொண்ட குழுவினர் நடவடிக்கை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் வழிகாட்டுதலின்படி, ஆந்திர மாநில போலீசாரும், திருப்பத் தூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் புலனாய்வு பிரிவு போலீசார் இணைந்து தமிழ்நாடு-ஆந்திர மாநில எல்லையில் உள்ள வனப்பகுதியான தேவராஜபுரம் மலைப்பகுதி மற்றும் சுற்று பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு, 2 இன்ஸ்பெக்டர்கள், 3 சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 37 போலீசார் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர்.

    அப்போது 245 லிட்டர் சாராயம், 3,900 லிட்டர் சாராய ஊறல், சாராய ஊறல் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட் கள் அழிக்கப்பட்டது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராயத்தை முழுமையாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.

    • வீடு வீடாக சென்று விவரங்களை சேகரித்தார்
    • அடையாள அட்டை பெற தகுதியுடையவர்களா என ஆய்வு

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.

    மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணியை துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதில் துறை அலுவலர்கள் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களின் குடும்பத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் எத்தனை பேர் உள்ளனர்.

    அவர்களின் ஊனம் குறித்த தகவல்கள் மேலும் இவர்கள் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற்றவர்களா அல்லது அடையாள அட்டை பெற தகுதியுடையவர்களா என்பதை நேரில் ஆய்வு செய்து மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சி பக்ரிதக்கா பகுதியில் நேற்று வருவாய் கோட்ட அலுவலர் பானு அப்பகுதியில் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டார்.

    துறை அலுவலர்களை கண்காணித்து ஆய்வு செய்தார். அப்போது வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து விவரங்களை சேகரித்தார். ஆய்வின்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணை
    • 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே ஏரிகோடி பகுதியை சேர்ந்தவர் ரவி. ரத்தப்பரிசோதனை நிலையம் வைத்துள்ளார். இவரது மனைவி நந்தினி. இவருக்கு பிறந்தநாள் பரிசாக ரவி மொபட் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

    அந்த மொப்பட்டை வீட்டின் வெளியே இரவு நிறுத்தி விட்டு தூங்கச் சென்றனர்.

    பின்னர் அதிகாலை எழுந்து வந்து பார்த்தபோது மொபட் மாயமாகி இருந்தது.

    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் 2 மர்ம நபர்கள் வீடுகளை நோட்டமிட்டு வந்தனர்.

    ரவியின் வீட்டின் அருகே வந்து வெளிபக்கமாக வீட்டை தாழிட்டனர், பின்னர் ஜன்னல் வழியாக சாவியை எடுத்து மொபட்டை திருடிச் சென்றுள்ளனர். மர்ம நபர்கள் மொபட்டை திருடிச்செல்லும் காட்சி வைரலாகி வருகிறது.

    இது குறித்து ரவி நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். மேலும் அதில் பதிவான காட்சிகள் மூலம் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக வாங்கிய மொப்பட்டை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருமணமான பெண்ணுடன் வாலிபர் ஓட்டம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த தாமனேரிமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தனபால் (வயது 50). இவருக்கு திருமணமாகி அம்பிகா (43) என்ற மனைவியும், சந்துரு என்கிற ராமமூர்த்தி (18) மகனும் உள்ளனர்.

    சந்துரு கட்டிடமேஸ்வரியாக வேலை செய்து வந்தார். கடந்த 5-ந் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அப்போது தனபால் போனில் தொடர்பு கொண்டு மகனிடம் பேசினார். தான் பெங்களூரில் வேலை செய்து வருவதாக சந்துரு தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து கடந்த வாரம் மீண்டும் சந்துருவை பெற்றோர் போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால் சந்துரு போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து அவரது நண்பர்களிடம், சந்துருவின் பெற்றோர் விசாரித்தனர். சந்துரு இன்ஸ்டாகிராம் மூலம் சென்னை பெண்ணுடன் பழகி வந்ததாகவும், அவர் தற்போது அந்தப் பெண்ணுடன் சென்னைக்கு சென்று வசித்து வருவதாகவும் கூறினார். மேலும் அந்தப் பெண் ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவலும் தெரியவந்துள்ளது. இது குறித்து அம்பிகா ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குளிக்க சென்ற போது பரிதாபம்
    • நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் உடல் மீட்பு

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த சின்னமோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 30). கார்பென்டராக வேலை செய்து வந்தார்.

    இவர் நேற்று மாலை தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் கனகநாச்சியம்மன் கோவிலுக்கு நண்பர்களுடன் சென்றார். பின்னர் அங்கு உள்ள பாலாற்றின் தடுப்பணையில் நண்பர்களுடன் குளித்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென கோவிந்தராஜி ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினார்.

    அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். பல மணி நேரம் போராடியும் கோவிந்தராஜ் கிடைக்கவில்லை.

    இது குறித்து ஆந்திர மாநிலம், குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கோவிந்தராஜை தடுப்பணையில் தேடினர். நீண்ட நேரம் தேடியும் அவர் கிடைக்காததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இன்று காலை குப்பம் போலீசார் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தடுப்பணை பகுதியில் கோவிந்தராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் அவர் பிணமாக மீட்கப்பட்டார். கோவிந்தராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுசாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தல்
    • வீட்டின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் ஊராட்சி அடியத்தூர் பகுதியை சேர்ந்த இரு குடும்பத்தினரின் பட்டா நிலத்தின் வழியாக 75 குடும்பங்களை சேர்ந்த பொது மக்கள் சாலையை பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பிரதான சாலைக்கு செல்ல தற்போது பயன்படுத்தி வரும் வழியில் பொதுசாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு அவர்கள் சம்மதிக்க வில்லை.

    இதனால் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த இருவரின் வீட்டின் முன்புறமும், பின்புறமும் பள்ளம் தோண்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இது குறித்து இரு குடும்பத்தினரும் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமாரிடம் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் அவரது தலைமையில் வருவாய் துறையினர் சென்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று திருப்பத்தூர் உதவி கலெக்டர் பானு ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு சொந்தமான இடம் குறித்து கேட்டறிந்து இருதரப்பினர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு குடும்பத்தினரின் பட்டா இடத்தின் அருகே அரசுக்கு சொந்தமான இடம் இருப்பதால் சாலை அமைக்க எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்ககூடாது என நிலத்தின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி, அரசுக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து சாலை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

    ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ஏழுமலை, வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவ லர், ஊர் பொதுமக்கள், பட்டா நிலத்தின் 2 குடும்பத்தினர் உடன் இருந்தனர்.

    ×