search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேசன் கடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா
    X

    ரேசன் கடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா

    • பூமி பூஜை நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சியில் முத்தனப்பள்ளி, மல்லப்பள்ளி மற்றும் ஏரியூர் ஆகிய பகுதிகளில் புதியதாக ரேசன் கடை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.

    விழாவிற்கு ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்யா சதிஷ்குமார் தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதிஷ்குமார் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக தேவராஜி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

    இதேபோல் நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி, நாயனசெருவு, வெள்ளநாயாக்கனேரி, பச்சூர், கொண்டகிந்தனப்பள்ளி ஆகிய பகுதிகளில் - அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்கும் பணியினையும் க.தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் வெண்மதி முனிசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.சாமுடி, பொதுக்குழு உறுப்பினர் கே.சாம்மண்ணன், கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.அசோக்குமார், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி து.அமைப்பாளர் எம்.சிங்காரவேலன், மு.மாவட்ட தொண்டரணி து.அமைப்பாளர் எஸ்.ராஜா, உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×