என் மலர்
திருப்பத்தூர்
- கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள்
- 3 பவுன் செயினை போலீசார் பறிமுதல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் தென்றல் நகரைச் சேர்ந்தவர் அன்பரசன். அரசுப் போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இளமதி(வயது 33). இவர், தருமபுரியில் காவலராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இரவு 10 மணியளவில் கணவன் மனைவி இருவரும் பைக்கில் திருப்பத்தூரில் இருந்து தென்றல் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, இவர்களை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் இளமதி கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து இளமதி கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை தேடிவந்தனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மோகன்குமார் (25) மற்றும் கணபதி(38) ஆகியோர் இளமதியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை நேற்று கைது செய்தனர். மேலும் வாலிபர்களிடமிருந்து மூன்றரை பவுன் செயினை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 7 வாகனங்கள் பறிமுதல் செய்து அதிகாரிகள் எச்சரிக்கை
- ஆட்டோக்களில் அதிகளவு ஆட்களை ஏற்றி செல்வதாக புகார்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் நகரில் அனுமதி இல்லாமல் வாகனங்கள் இயக்கப்படு வதாகவும். ஆட்டோக்களில் அதிகளவு ஆட்களை ஏற்றி செல்வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இதுகுறித்து திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து துறையினர் ஆய்வு நடத்தி, விதிகளை பின்பற்றாத வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, திருப்பத்தூர் வட்டார போக்கு வரத்து அலுவலர் காளியப்பன் மேற்பார்வையில், திருப்பத்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் குழுவினர் திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அதிக அளவு ஆட்களை ஏற்றி வந்த 3 ஆட்டோக்களையும், அனுமதி, உரிமம் மற்றும் பர்மிட் இல்லாமல் இயங்கி வந்த 4 சரக்கு வாகனங்கள் என மொத்தம் 7 வாகனங்களை வட்டார போக்குவரத்து துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூரில் சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்கினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும்நடவடிக்கை எடுப்பதுடன், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
- பொதுமக்கள் அவதி
- நாளொன்றுக்கு 10 டன் மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் காய்கறி மார்க்கெட் மற்றும் சந்தைக்கு வரக்கூடிய தக்காளி வரத்து குறைந்ததால், தக்காளி விலை உயர்ந்துள்ளது.
திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு கோயம்பேடு, பெங்களூரு மற்றும் ஆந்திரா பகுதிகளில் இருந்து காய்கறிகள் பழங்கள் திருப்பத்தூருக்கு விற்பனைக்கு அனுப்பப்ப டுகின்றன. இங்கு மொத்த விலையிலும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்ப டுகிறது.
எனினும், தற்போது சென்னைக்கு 30 சதவிகிதம் தக்காளி வரத்து குறைந்துள்ளதாலும், கர்நாடகா மற்றும் ஆந்திர, கிருஷ்ணகிரி பகுதியிலிருந்து திருப்பத்தூருக்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது இதனால் கூடுதல் விலைக்கு தக்காளி விற்கப்படுகிறது. தற்போது நாளொன்றுக்கு 10 டன் தக்காளி மட்டுமே இறக்குமதி செய்யப்ப டுகிறது.
திருப்பத்தூர் காய்கறி மார்க்கெட் மட்டும் இதர பகுதிகளில் மொத்த விலையில், ஒரு கிலோ தக்காளி 100, முதல் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ரூ.140-க்கு விற்பனை செய்யப்ப டுகிறது.
இதனால் பொதுமக்களுக்கு கடும் அவதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளிலிருந்து அதிக அளவு தக்காளி திருப்பத்தூருக்கு வருகிறது. தற்போது மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீண்டும் தக்காளி பயிரிடாததால் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
- தடுப்பு சுவரில் மோதியது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த பைனபள்ளி பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 40) மர வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று பருகூர் பகுதியிலிருந்து தனது பைக்கில் ரவி பெங்களூர் சென்னை நெடுஞ்சாலையில் பைனப்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது நாட்டறம்பள்ளி அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் வரும்போது பைக் நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதியது. இதில் ரவி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த நாட்டறம்பள்ளி போலீசார் ரவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது சம்பந்தமாக மனைவி வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ரூ.18 கோடி மதிப்பீட்டில் அமைகிறது
- ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே சோமநாயக்கன்பட்டி பகுதியில் சுமார் ரூ.18 கோடி மதிப்பீட்டில் புதிய ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.
இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளை வருவாய் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் இணைந்து அகற்றினர்.
ரெயில்வே மேம்பாலப் பணி நடைபெற்று வருவதால் திருப்பத்தூர் - நாட்டறம்பள்ளி செல்ல தற்காலிக மாற்றுவழி அமைப்பது குறித்து திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பானு தலைமையில் வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், மண்டல துணை தாசில்தார் நடராஜன், வருவாய் அலுவலர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் அருணா, மற்றும் உதவி கோட்ட பொறியாளர் அண்ணாமலை உட்பட வருவாய் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் பலர் உடன் இருந்தனர்.
- 7 பேர் கொண்ட குழுவினர் திடீரென வந்தனர்
- 3 மணி நேர சோதனைக்குப் பிறகு புறப்பட்டுச் சென்றனர்
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே தேவலாபுரம் ஊராட்சி பாங்கிஷாப் பகுதியில் 2 இடங்களில் தோல் மற்றும் தோல் பொருள்கள் விற் பனை செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இந்தநிறுவனத் துக்கு ஜிஎஸ்டி அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் திடீரென வந்தனர்.
ஆனால் 2 இடங்களிலும் நிறு வனத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து ஆம்பூர் சிக்கந்தர் திப்பு தெருவில் உள்ள அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வீடு மற்றும் அங்குள்ள அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகள் சோதனை மேற்கொண் டனர். அந்த நிறுவனத்தின் விற் பனை தொடர்பான ஆவணங் களை ஆய்வு செய்தனர். நிறுவனத்தின் பணியாளர்களிட மும் விசாரணை நடத்தினர்.
சுமார் 3 மணி நேர சோதனைக் குப் பிறகு அதிகாரிகள் புறப்பட் டுச் சென்றனர். வரி ஏய்ப்பு கார ணமாக சோதனை நடத்தப்பட்ட தாக கூறப்படுகிறது.
- டிப்பர் லாரிகளில் வெளிமாநிலங்களுக்கும் கடத்தப்படுகிறது
- கலெக்டர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த அம்பலூர், திம்மாம்பேட்டை, ஆவாரங்குப்பம் பகுதிகளில் தொடர்ந்து இரவு பகலாக மணல் கடத்தல் நடைபெறுகிறது. மாட்டு வண்டி, டிராக்டர், டிப்பர் லாரிகளில் வெளிமாநிலங்களுக்கும் கடத்தப்படுகிறது.
இது குறித்து தொடர்ந்து பொதுமக்கள் கலெக்டரிடம் நேரடியாகவும், திங்கட்கிழமை நடைபெறும் முகாமில் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திம்மாம்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல் நடைபெறுவதை தடுக்கும் வகையில், திம்மாம்பேட்டை போலீசார் ரோந்து பணிகளை மேற்கொண்டனர். அப்போது, ஆவாரங்குப்பம் அருகே உள்ள பாலாற்றில் இருந்து அனுமதியின்றி மாட்டுவண்டியில் மணல் ஏற்றி வந்த நபரை மடக்கி பிடித்தனர்.
போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ரவி (வயது 51) என்பதும் அவர் ஆற்று பகுதியில் இருந்து அனுமதி இல்லாமல் மணல் அள்ளி விற்று வந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அந்த நபரை கைது செய்து நடவடிக்கை எடுத்த போலீசார் அவர் மணல் ஏற்றி சென்ற மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தனர்.
இதுபோல் மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, மணல் திருட்டை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- பாட்டில் ரூ.5 கூடுதலாக விற்க தடை
- ரூ.11,800 அபராதம்
திருப்பத்தூர்:
வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகம் 2-ஆக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் வேலூர்,திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் ஒரே நிர்வாகத்தில் கீழ் செயல்பட்டு வருகின்றன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 39 மது கடைகளும்,வேலூர் மாவட்டத்தில் 68 கடைகளும் இயங்கி வருகின்றன.
இதில் பெரும்பாலான கடைகளில் மதுபாட்டில்களுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரை கூடுதலாக பணம் பெறுவதாக மது பிரியர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இதுகுறித்து மாவட்ட டாஸ்மார்க் மேலாளர் பூங்கொடி கூறியதாவது
அரசு டாஸ்மாக் மதுக்கடைகளில் மது பாட்டில்களில் குறிப்பிட்டுள்ள விலையை விட அதிகம் கொடுக்க வேண்டாம் என கடைகளில் ஆய்வுக்குச் செல்லும் பொழுது மது வாங்க வருபவர்களிடம் நேரடியாக தெரிவித்துள்ளோம்.
கடந்த மாதம் 8-ந் தேதி முதல் ஜூன் 20 -ந் தேதி வரை வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ரூ.5 கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில பாட்டிலுக்கு ரூ.5 கூடுதலாக பெற்ற ஊழியர்களுக்கு தலா ரூ.5900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ரூ.10 அதிகமாக பெற்று மது விற்பனை செய்தவர்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலா ரூ.11,800 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
குடியாத்தம் பகுதியில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.கந்தனேரி டாஸ்மாக் கடையில் வாடிக்கை யாளர்களை அவமதித்ததாக கடை ஊழியர் ஒருவர் ஒடுகத்தூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றார்.
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
- 12 பாட்டில்கள் பறிமுதல்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்-இன்ஸ் பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர்.
அப்போது நாட்டறம்பள்ளி அருகே ஏரியூர் பகு தியில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த ஏரியூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி (வயது 57) என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- துணை சூப்பிரண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்
- நாட்டு நலப் பணிதிட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
பேரணியை வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போதை ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய பதாகை ஏந்தியவாறு 2 கிலோமீட்டர் தூரம் மாணவிகள் நடந்து சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த ஊர்வலத்தில் வாணியம்பாடி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதே போல் வாணியம்பாடி நியூ டவுனில் உள்ள இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி வளாகத்தில் இருந்து நடைபெற்ற மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், கல்லூரி முதல்வர் டாக்டர். முகமது இலியாஸ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.பசுபதி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த ஊர்வலத்தில் மாணவர்கள் விழிப்புணர்வு பதாகை ஏந்தியவாறு மது ஒழிப்பு கோஷங்களை எழுப்பிக் கொண்டு கல்லூரி சாலை, நியூ டவுன் வழியாக பஸ் நிலையம் அடைந்தனர். இந்த ஊர்வலத்தில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் நாட்டு நலப் பணிதிட்ட மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- டிரைவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாணியம்பாடி:
வாணியம்பாடி வட்டார போக்குவரத்து கழகம், வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் டாக்டர் பையாஸ் கமால் மருத்துவமனை ஆகியோர் இணைந்து ஓட்டுனர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் ஆர்.வி.குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ஆர்.வி.பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தார். மோடார் வாகன ஆய்வாளர் வெங்கட் ராகவன் அனைவரையும் வரவேற்றார்.
வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
இதில் கண் மருத்துவர் பரஹான் சவூத் கலந்து கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி பஸ், ஆட்டோ டிரைவர்கள் ஆகியோருக்கு கண் பரிசோதனை மேற்கொண்டார்.
மேலும் கண்பார்வை குறைபாடு உள்ள டிரைவர்களுக்கு இலவசமாக கண்கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
இதில் வாணியம்பாடி தாலுகா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி, இஸ்லாமிய கல்லூரி தமிழ் துறை தலைவர் ப.சிவராஜி, என். வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் சங்க பொருளாளர் ஏ.அருண்குமார் நன்றி கூறினார்.
- கணவர் படுகாயம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த மாதனூர் அருங்கல் துருகத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 51). ராணுவ வீரர். இவரது மனைவி புனிதா (41). இவர்கள் இருவரும் பைக்கில் நேற்று மாலை வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது பைக் நிலை தடுமாறி சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் கணவன் மனைவி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் பலத்த காயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக ரத்தினகிரி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை புனிதா பரிதாபமாக இறந்தார். சரவணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் புனிதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






