search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் விபத்தில் வியாபாரி பலி
    X

    பைக் விபத்தில் வியாபாரி பலி

    • தடுப்பு சுவரில் மோதியது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த பைனபள்ளி பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 40) மர வியாபாரம் செய்து வருகிறார்.

    நேற்று பருகூர் பகுதியிலிருந்து தனது பைக்கில் ரவி பெங்களூர் சென்னை நெடுஞ்சாலையில் பைனப்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது நாட்டறம்பள்ளி அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் வரும்போது பைக் நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதியது. இதில் ரவி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த நாட்டறம்பள்ளி போலீசார் ரவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது சம்பந்தமாக மனைவி வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×